மேலும் அறிய

சுட்டெரிக்கும் வெயில்: கால்நடைகளை பராமரிப்பது எப்படி? அறிவுரைகள் என்ன?

விழுப்புரம் மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் கால்நடைகள் பாதிப்பு, முறையாக தண்ணீர் அளிக்க கால்நடை பராமரிப்புத்துறையினர் அறிவுரை.

விழுப்புரம் மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் கால்நடைகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. எனவே கால்நடைகளுக்கு முறையாக தண்ணீர் அளிக்க வேண்டுமென கால்நடை பராமரிப்புத்துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர்.

கால்நடைகள் பாதிப்பு

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. மதிய வேளையில் சாலையில் வீசும் அனல் காற்றினால் பொதுமக்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் வாடி, வதங்கி வருகின்றனர். கோடையின் உச்சகட்டமான அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. ஆனால் அதற்கு முன்னதாகவே பல மாவட்டங்களில் வெயில், சதத்தை கடந்து விட்டது.

கோடை வெப்பத்தின் தாக்கத்தினாலும், கடும் வறட்சி காரணமாகவும் விவசாயிகள், விவசாயம் செய்ய முடியாமலும், கால்நடைகளை வளர்ப்பதிலும் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். சில விவசாயிகள், தாங்கள் வளர்த்து வரும் கால்நடைகளுக்கு நீரும், தீவனமும் கொடுக்க முடியாமல் ஏரிகளிலும், வயல்வெளி பகுதிகளிலும், வனங்களிலும் கொண்டு சென்று மேய்ச்சலுக்கு விட்டுவிடும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதிக மழை பெய்யும் காலத்தைவிட வெயில் அதிகமாக இருக்கும் கோடையில் தான் கால்நடைகள் அதிகம் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

சிரமத்தை சந்திக்கும் விவசாயிகள்


விழுப்புரம் மாவட்டம் பெரும்பாலும் விவசாயம் சார்ந்த மாவட்டமாகும். இங்கு கால்நடை வளர்ப்பை விவசாயிகள், பிரதான தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர். மாவட்டம் முழுவதும் கிராமப்புறங்களில் மாடுகள், ஆடுகள், கோழிகள் போன்ற கால்நடை வளர்ப்பு பராமரிப்பாளர்கள் அதிகளவில் உள்ளனர். இதனை நம்பியே இவர்களுடைய வாழ்வாதாரம் இருக்கின்ற நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால் கால்நடை வளர்ப்பு தொழிலை மேற்கொள்ள முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

நீர்ச்சத்து குறைபாடு ,செரிமானக்கோளாறு 

கோடை காலம் தொடங்கியுள்ளதால் மாவட்டத்தின் பல பகுதிகளில் நிலவும் வறட்சியால், நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. மேய்ச்சலில் ஈடுபடும் கால்நடைகளுக்கு தேவையான தண்ணீரும் கிடைப்பதில்லை. இதனால் கால்நடைகளின் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு, செரிமானக்கோளாறு ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

பால் உற்பத்தி குறைபாடு

மேலும் வெயிலின் தாக்கத்தால் மாடுகளில் பால் உற்பத்தி குறைபாடு, சினை உருவாக்கம் குறைபாடு, ஆடுகள் மேய்ச்சலின்மை, கோழிகள் திடீர் உயிரிழப்பு போன்ற எண்ணற்ற சவால்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுவதால் அவர்கள் மிகவும் கவலையடைந்து வருகின்றனர். எனவே இதற்கு கால்நடை பராமரிப்புத்துறையினர் தகுந்த ஆலோசனைகளை வழங்க வேண்டும் என விவசாயிகள் பலரும் எதிர்பார்க்கின்றனர்.


கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரி கூறியதாவது:-

கோடை காலங்களில் வெயிலின் தாக்கம் மனிதர்களைப்போல கால்நடைகளையும் அதிகமாக பாதிக்கும். கால்நடைகளுக்கும் வளர்ச்சி மற்றும் உற்பத்தியால் உடலின் வெப்பம் அதிகரிக்கும். கோடைகாலங்களில் சூரியக் கதிர்வீச்சு, காற்றின் ஈரப்பதம் மற்றும் மண்டல வெப்பநிலை ஆகிய அனைத்தையும் பொறுத்தே கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படும். அதிகமான வெப்பக்காலங்களில் கால்நடைகள் உணவு உட்கொள்ளுதல், கால்நடைகளின் வளர்ச்சி ஆகியவற்றை பாதிக்கும். கறவை மாடுகளில் பால் உற்பத்தி 20 சதவீதம் குறையும். கால்நடைகள் சினைக்கு வரும் தன்மையும் பாதிக்கப்படும். சினை பிடித்தலும் 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை பாதிக்கப்படுகிறது.

இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தி குறையும்


வெயில் காலத்தில் உணவு உட்கொள்ளுதலும் பாதியாக குறையும், தண்ணீரை அதிகமாக உட்கொள்ளும். எருமை மாடுகளில் பசுக்களைவிட வேர்வை நாளங்கள் குறைவாக உள்ளதால் எருமைகள் அதிகமாக பாதிக்கப்படுகின்றன. எருமை மாட்டின் தோல் கருப்பாக இருப்பதால் சூரிய கதிர்வீச்சு அதிகமாக தாக்கும். எருமையின் சினைப் பருவகால அறிகுறிகள் முழுமையாக தென்படாது. பருவத்துக்கு வரும் காலமும் குறையும். ஆடுகளில் அதிகமாக வளர்ச்சி மற்றும் இனப்பெருக்கத்திறன் குறையும். கோடையில் கோழிகள் உணவு உட்கொள்ளுதல் குறையும் வாய்ப்புகளும் அதிகம். கோழிகள் வெப்பத்தை தாங்க முடியாமல் வாய் வழியாக மூச்சுவிடும். இதனால் இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தி குறையும். முறையான பராமரிப்பு இல்லாமல் போனால் அதிகமான கோழிகள் இறப்பினை சந்திக்கக்கூடும்.

கால்நடைகளுக்கு வழங்கப்படும் தண்ணீரின் அளவை குறைக்கக்கூடாது


ஆகவே கோடை காலங்களில் கால்நடைகளுக்கு வழங்கப்படும் தண்ணீரின் அளவை குறைக்கக்கூடாது. அவற்றின் உடலில் பல உறுப்புகள் இயங்குவதால், அதன் வாயிலாக வெளிப்படும் கழிவுப்பொருட்கள் தோல், சிறுநீரகம், நுரையீரல் வழியாக திரவ நிலையிலேயே வெளியாகும். எனவே அதன் உடலில் வெப்பநிலை சீராக இருக்க தண்ணீர் அவசியம். அதேபோல் உள்ளுறுப்புகள் மற்றும் வெளியுறுப்புகள் சுத்தமாக வைத்துக்கொள்ள தண்ணீர் உதவுகிறது. அதுமட்டுமின்றி உணவை அசை போடவும், இரையை விழுங்கவும் தண்ணீர் தேவைப்படுகிறது. எனவே கால்நடைகளின் தண்ணீர் தேவையை எந்த நேரத்திலும் பூர்த்தி செய்ய விவசாயிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

கறவை மாடுகளுக்கு 4 அல்லது 5 முறை தண்ணீர் அளிக்க வேண்டும்


கால்நடைகளின் தண்ணீர் குடிக்கும் அளவு குறையும்போது, செரிமானத்தன்மை சத்துகளை உட்கிரகித்தல், கழிவுப்பொருட்களை வெளியேற்றுதல் போன்ற செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படுகிறது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால், கறவை மாடுகளுக்கு 4 அல்லது 5 முறை தண்ணீர் அளிக்க வேண்டும். இதனை விவசாயிகள் முறையாகவும், முழுமையாகவும் பின்பற்ற வேண்டும். இதன் மூலம் கால்நடைகளை கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மராட்டியத்தில் சாத்தியமானது தமிழகத்தில் சாத்தியமாகாதது ஏன்? - அன்புமணி இராமதாஸ் கேள்வி !
மராட்டியத்தில் சாத்தியமானது தமிழகத்தில் சாத்தியமாகாதது ஏன்? - அன்புமணி இராமதாஸ் கேள்வி !
வங்கிமீது பழி ஏன்? மகாராஷ்டிராவால் சாத்தியமாகும் பயிர்க்கடன் தள்ளுபடி தமிழகத்தில் ஆகாதது ஏன்? அன்புமணி கேள்வி
வங்கிமீது பழி ஏன்? மகாராஷ்டிராவால் சாத்தியமாகும் பயிர்க்கடன் தள்ளுபடி தமிழகத்தில் ஆகாதது ஏன்? அன்புமணி கேள்வி
6 மாசம் கழிச்சி கேட்கணுமா? - அதுவரை நீங்க இருப்பீங்களா? - விஜயை வறுத்தெடுத்த அனிதா ராதாகிருஷ்ணன்!
6 மாசம் கழிச்சி கேட்கணுமா? - அதுவரை நீங்க இருப்பீங்களா? - விஜயை வறுத்தெடுத்த அனிதா ராதாகிருஷ்ணன்!
TN DGP: சட்ட-ஒழுங்கு டிஜிபியை சிறைத்துறைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு - மகேஷ் குமார் அகர்வால் வருகை..!
சட்ட-ஒழுங்கு டிஜிபியை சிறைத்துறைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு - மகேஷ் குமார் அகர்வால் வருகை..!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN DGP: சட்ட-ஒழுங்கு டிஜிபியை சிறைத்துறைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு - மகேஷ் குமார் அகர்வால் வருகை..!
சட்ட-ஒழுங்கு டிஜிபியை சிறைத்துறைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு - மகேஷ் குமார் அகர்வால் வருகை..!
School Reopening: கொளுத்தும் வெயில்; உடல்நல பாதிப்பு அபாயம்- பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்கக் கோரிக்கை!
School Reopening: கொளுத்தும் வெயில்; உடல்நல பாதிப்பு அபாயம்- பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்கக் கோரிக்கை!
Annamalai: வேகமாக வளர்ந்து அதைவிட வேகமாக வீழ்ந்த அண்ணாமலை - முகத்தை இழக்கும் பாஜக, என்ன பிரச்னை?
வேகமாக வளர்ந்து அதைவிட வேகமாக வீழ்ந்த அண்ணாமலை - முகத்தை இழக்கும் பாஜக, என்ன பிரச்னை?
Tamilnadu Round Up: புதிய DGP பதவியேற்பு? செவிலியர் மாணவி உயிரிழப்புக்கான காரணம், படப்பிடிப்பில் விபத்து - தமிழ்நாட்டில் இதுவரை
புதிய DGP பதவியேற்பு? செவிலியர் மாணவி உயிரிழப்புக்கான காரணம், படப்பிடிப்பில் விபத்து - தமிழ்நாட்டில் இதுவரை
TN DGP: உத்தரவு போட்ட மத்திய அரசு..! இன்று பொறுப்பேற்கிறார் புதிய டிஜிபி - தமிழகத்தில் சட்ட-ஒழுங்கு சீராகுமா?
உத்தரவு போட்ட மத்திய அரசு..! இன்று பொறுப்பேற்கிறார் புதிய டிஜிபி - தமிழகத்தில் சட்ட-ஒழுங்கு சீராகுமா?
TN Weather Update: இடி, மின்னலுடன் 16 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் 16 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
திருச்சி செவிலியர் உயிரிழப்புக்கு காரணம் என்ன.? வெளியான ஆய்வறிக்கையில் திடீர் ட்விஸ்ட்- நடந்தது என்ன.?
திருச்சி செவிலியர் உயிரிழப்புக்கு காரணம் என்ன.? வெளியான ஆய்வறிக்கையில் திடீர் ட்விஸ்ட்- நடந்தது என்ன.?
Annamalai: விலகும் அண்ணாமலை.. எதிரியாக மாறிய பாஜக.. ஒரே நாளில் தலைகீழ் மாற்றம்!
Annamalai: விலகும் அண்ணாமலை.. எதிரியாக மாறிய பாஜக.. ஒரே நாளில் தலைகீழ் மாற்றம்!
Embed widget