மேலும் அறிய

ஒரு தரம்... இரண்டு தரம்... மூன்று தரம்... குலுக்கலில் வெற்றி பெற்ற ஊராட்சி தலைவர்!

கடந்த 2019 ஆம் ஆண்டு தேனி மாவட்டம் ஸ்ரீரெங்காபுரம் கிராம வார்டு உறுப்பினர் பதவியை அக்கிராம மக்களே குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்தமையால் அங்கு தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

தென்காசியில் மாவட்டம் கிளாங்காடு ஊராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் இருவரும் சம வாக்குகளைப் பெற்றதால், குலுக்கல் முறையில் ஊராட்சி மன்றத்தலைவராக சந்திரசேகர் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரகப்பகுதிகளுக்கு கடந்த அக்டோபர் 6  மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. குறிப்பாக இந்த 9 மாவட்டங்களிலும் 140 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 74 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 1381 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும்,  2,901 கிராம ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கும், 22,581 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள்  என மொத்தமாக 27,003 பேருக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் நேற்று விறுவிறுப்பாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

  • ஒரு தரம்... இரண்டு தரம்... மூன்று தரம்... குலுக்கலில் வெற்றி பெற்ற ஊராட்சி தலைவர்!

இதில் பெரும்பான்மையான இடங்களில் திமுக சார்பில் போட்டியிட வேட்பாளர்கள் வெற்றி பெற்று முன்னிலை வகித்தனர். இதோடு கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களில் 2874 பதவியிடங்கள், கிராம ஊராட்சி மன்றத்தலைவர் பணியிடங்கள்119, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களில 5 பணியிடங்கள் போட்டியின்றி நிரப்பட்டன.

ஆனால் சற்று வித்தியாசமாக தென்காசி மாவட்டத்தில் குடவோலை முறையில் ஊராட்சி மன்ற தலைவர் பதவி நிரப்பப்பட்டள்ளது. குறிப்பாக  பழங்காலத்தில் தான் கிராம நிர்வாக சபை உறுப்பினர்களைத் தேர்ந்து எடுப்பதற்காக குடவோலை முறை நடைமுறையில் இருந்தது. இதில் தகுதியான உறுப்பினர்கள் பெயர்களை ஓலைச்சுவடிகளில் எழுதிய  பிறகு அதை மொத்தமாகக் கட்டி ஒரு பானையில் போட்டு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுப்பார்கள்.

  • ஒரு தரம்... இரண்டு தரம்... மூன்று தரம்... குலுக்கலில் வெற்றி பெற்ற ஊராட்சி தலைவர்!

அந்த நடைமுறைத்தான் தற்போது  தென்காசி மாவட்டம் செங்கோட்டையை அடுத்த கிளாங்காடு ஊராட்சி மன்றத் தேர்தலில் நடந்துள்ளது.  இங்கு தலைவர் பதிவிக்கு  போட்டியிட்ட சந்திரசேகர் மற்றும் கண்ணன் ஆகிய இருவர் தலா 1034 வாக்குகள் பெற்று சமநிலையில் இருந்தனர். இதனால் யாரை ஊராட்சிமன்றத்தலைவராக நியமனம் செய்வது என்பதில் குழப்பம் ஏற்பட்டது. எனவே இருவரும் சம வாக்குகளைப் பெற்றதையடுத்து பழைய நடைமுறையப்படி குலுக்கல் முறையில் ஊராட்சி மன்ற தலைவரைத் தேர்ந்தெடுக்க முடிவு எடுக்கப்பட்டது. இதில் சந்திரசேகர் என்பவர் ஊராட்சி மன்ற தலைவராக தேர்வானார். இந்நிகழ்வு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு தேனி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரெங்காபுரம் கிராம வார்டு உறுப்பினர் பதவியை அக்கிராம மக்களே குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்தமையால் அங்கு தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
புதுச்சேரி வாக்காளர் பட்டியலில் 'ஏஎஸ்டி' (ASD) பட்டியல் வெளியீடு: மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்!
புதுச்சேரி வாக்காளர் பட்டியலில் 'ஏஎஸ்டி' (ASD) பட்டியல் வெளியீடு: மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்!
கபீர் புரஸ்கார் விருது: 2026-ல் சமூக நல்லிணக்கத்திற்காக காத்திருக்கும் வாய்ப்பு! விண்ணப்பிக்க டிசம்பர் 15 கடைசி தேதி
கபீர் புரஸ்கார் விருது: 2026-ல் சமூக நல்லிணக்கத்திற்காக காத்திருக்கும் வாய்ப்பு! விண்ணப்பிக்க டிசம்பர் 15 கடைசி தேதி
திருச்சியில் துப்பாக்கிச் சூடு: பிரபல கொள்ளையன் கைது! கோவை போலீசாருக்கு அரிவாள் வெட்டு - பரபரப்பு!
திருச்சியில் துப்பாக்கிச் சூடு: பிரபல கொள்ளையன் கைது! கோவை போலீசாருக்கு அரிவாள் வெட்டு - பரபரப்பு!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Embed widget