கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் லஞ்சம்: ரத்தக்கறை துவைக்க பணம், அதிர்ச்சி வீடியோ வெளியீடு!
திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் ரத்தக்கரை படர்ந்த துணிகளை துவைக்க ரூபாய் 1500 லஞ்சம் கேட்ட பெண்ணின் வீடியோ வைரல்

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் மகப்பேறு அடைந்த பெண்ணின் குடும்பத்தாரிடம் ரத்தக்கரை படர்ந்த துணிகளை துவைக்க பவுடர், சோப்பு வாங்கி வரச் சொல்லியும் 1500 ரூபாய் லஞ்சம் கேட்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் மாவட்ட தலைமை மருத்துவமனையில் செயல்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் ஜி.அரியூர் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மகப்பேறு அனுமதிக்கப்பட்டுள்ளார். அறுவை சிகிச்சைக்கு பின் அந்த பெண்ணின் குடும்பத்தாரிடம் மருத்துவமனையில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் ரத்தக்கரை படிந்த அவர்களது ஆடைகளை துவைப்பதற்கு துணி பவுடர் சோப்பு உள்ளிட்டவைகளை வாங்கி வரச் சொல்லியுள்ளார்.
மேலும் 1500 ரூபாய் பணத்தை லஞ்சமாக கேட்டுள்ளார். எதற்காக பணத்தை கேட்கிறீர்கள் என்ற கேட்கும் போது அனைவருக்கும் கொடுக்க வேண்டும் அதற்காகத்தான் என்றும், இரத்தம் நிறைந்த அந்த துணிகளை என் கையாலே துவைக்க வேண்டும் என்று கூறுகிறார். அதற்கு வீடியோ எடுத்த நபர் வாஷிங் மெஷின் இல்லையா என்று கேட்டபோது அதெல்லாம் இங்க இல்ல அரசாங்கத்தில் ஒன்று கொடுத்தால் ஒன்னும் பாதியுமா தான் கொடுப்பாங்க. இங்க வேலை செய்வதற்கு வெளியில் சித்தாள் வேலைக்கு போனா கூட காலையில 6 மணிக்கு போன சாயங்காலம் 6 மணிக்கு வந்துவிடலாம் என்றும் 1500 ரூபாய் கொடுத்து ஆக வேண்டுமா என்று கேட்கும் போதும் கொடுத்தே ஆக வேண்டுமா என்று கேட்டால் என்ன சொல்வது கொடுங்கள் என்று சொல்லிவிட்டு சொல்கிறார்.
அதன்பின் , அந்த குடும்பத்தினர் 1000 ரூபாய் எடுத்துச் சென்று அந்த மருத்துவமனை ஊழியரிடம் கொடுக்கிறார். மேலும் தான் பொது சேவை செய்யக்கூடிய நபராக இருந்து வருகிறேன், என்னிடமே பணம் கேட்கிறீர்கள் போனால் போகட்டும் என்று தான் கொடுக்கிறேன் என கூறும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரும்பாலும் அரசின் சார்பில் துணிகளை துவைப்பதற்கு முன்பெல்லாம் டோபி என பணியாளர்கள் வைத்திருந்தனர் ஆனால் தற்போது தொழிற்சாலைகளில் பயன்படுத்தக்கூடிய வாஷிங் மெஷின்களை அரசே மருத்துவ மனைகளுக்கு வழங்குகிறது. இருந்த போதிலும் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் வாஷிங் மெஷின் இல்லாததால் இன்றுவரை கையாலேயே துணிகளை துவைக்கும் நிலை இருப்பதாக மருத்துவமனை ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து திருக்கோவிலூர் மருத்துவமனையின் முதன்மை மருத்துவ அலுவலரிடம் கேட்டபோது அவ்வாறெல்லாம் பொதுமக்களிடம் சோப்பு துணி பவுடர் வாங்கச் சொல்லி நாங்கள் கூறுவதில்லை அதை மருத்துவமனை நிர்வாகமே அளிக்கிறது. பணம் பெற்ற நபரை உடனடியாக வேறு மருத்துவ மனைக்கு மாற்றப்பட உள்ளதாகவும், அதன் பின்னர், அவரிடம் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.





















