Tuticorin shooting : தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - முடிந்தது விசாரணை: விரைவில் அறிக்கை சமர்ப்பிப்பு
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் ஆணைய விசாரணை நிறைவு பெற்றது.

கடந்த 2018 ம் ஆண்டு மே மாதம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர்சுட்டு கொல்லப்பட்டனர். இதையடுத்து, துப்பாக்கிச்சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் ஆணைய விசாரணை நிறைவு பெற்றது. இன்னும் 3 மாதத்தில் விசாரணை அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்று ஒரு நபர் ஆணைய வழக்கறிஞர் அருள்வடிவேல் சேகரன் தெரிவித்துள்ளார்.
இந்த ஆணையம் சார்பில் 36 கட்டங்களாக விசாரணை நடத்தப்பட்டது என்றும், 1,048 பேரிடம் விசாரணை நடந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்





















