மேலும் அறிய

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; ரவுடி திருவேங்கடத்தை என்கவுன்டர் செய்தது ஏன்? போலீசார் தந்த விளக்கம்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீசில் சரண் அடைந்த ரவுடி திருவேங்கடத்தை என்கவுன்டரில் சுட்டுக்கொன்றது ஏன்? என்று போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த சில தினங்களுக்கு முன்பு, அவரது வீட்டின் முன்பு சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவரது கொலை தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது. ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் 8 பேர் சரண் அடைந்தனர். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு காரணமான குற்றவாளிகளுக்கு தக்க தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர்.

ரவுடி என்கவுன்டர் செய்யப்பட்டது ஏன்?

இந்த சூழலில், சரண் அடைந்தவர்களில் ஒருவரான ரவுடி திருவேங்கடத்தை போலீசார் என்கவுன்டரில் இன்று காலை சுட்டுக்கொன்றனர். இந்த சூழலில், ரவுடி திருவேங்கடத்தை என்கவுன்டர் செய்தது தொடர்பாக போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

போலீசார் அளித்துள்ள விளக்கத்தில், கொலையாளிகளில் ஒருவரான திருவேங்கடத்தை விசாரணைக்காக இன்று காலை புழல் நோக்கி அழைத்துச் சென்றனர். அப்போது, மாதவரம் ஆட்டுத்தொட்டி அருகே செல்லும்போது திருவேங்கடம் தப்பி ஓடியுள்ளார். கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு அவரை் தேடும்போது, புழல் வெஜிடேரியன் நகரில் உள்ள தகர கொட்டகையில் திருவேங்கடம் பதுங்கினார்.

கொலைச்சதித் தீட்டம்:

போலீசார் சுற்றி வளைக்கும்போது ஏற்கனவே அங்கு பதுக்கி வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியை எடுத்து திருவேங்கடம் சுட்டுள்ளார். இதையடுத்து, ரவுடி திருவேங்கடத்தை காவல் ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில், ரவுடி திருவேங்கடத்தின் வயிறு மற்றும் மார்பில் குண்டு பாய்ந்தது.

மாதவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர் என்று போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். திருவேங்கடம் பதுங்கியிருந்த தகர கொட்டகையில்தான் ஆம்ஸ்ட்ராங் கொலைச் சதித்திட்டம் தீட்டப்பட்டதாகவும் போலீசார் தகவல் தெரிவித்தனர்.

ரவுடி திருவேங்கடம் என்கவுன்டர் செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை தமிழக அரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, தமிழ்நாடு அரசு சென்னை காவல் ஆணையர் சந்தீப் ரத்தோரை மாற்றிவிட்டு, அவருக்கு பதிலாக அருண் ஐ.பி.எஸ்.-ஐ நியமித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: Donald Trump Shot: டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு - பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்களிடமிருந்து குவியும் கண்டனங்கள்

மேலும் படிக்க: Chennai Encounter: சென்னையில் பரபரப்பு - ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - போலீசாரின் என்கவுண்டரில் ரவுடி திருவேங்கடம் சுட்டுக்கொலை

 

  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

முதல்வருக்கு இருந்த ஏக்கம்; தீர்த்து வைத்த ரஜினி - கலைஞர் புத்தக விழாவில் சுவாரஸ்யம்
முதல்வருக்கு இருந்த ஏக்கம்; தீர்த்து வைத்த ரஜினி - கலைஞர் புத்தக விழாவில் சுவாரஸ்யம்
"சீனியர்களை சமாளிப்பது கடினம்" ஸ்டாலின் முன்னிலையில் துரைமுருகனை கலாய்த்த ரஜினி!
‘கலைஞர் எனும் தாய்’ நூலை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.. பெற்று கொண்ட நடிகர் ரஜினிகாந்த்!
‘கலைஞர் எனும் தாய்’ நூலை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.. பெற்று கொண்ட நடிகர் ரஜினிகாந்த்!
பலமாக வீசிய காற்று.. புனேவில் விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர்.. பயணம் செய்த 4 பேரின் நிலை என்ன?
பலமாக வீசிய காற்று.. புனேவில் விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர்.. பயணம் செய்த 4 பேரின் நிலை என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanimozhi | ’’TOUR கூட்டிட்டு போறீங்களா?’’ஆசையாய் கேட்ட மாணவி..நிறைவேற்றிய கனிமொழிVarun Kumar IPS|‘’உனக்கு அம்மா, தங்கச்சி இருக்குல’’வெளுத்து வாங்கிய வருண் IPSஆபாசமாக பதிவிட்ட மாணவன்Mayiladuthurai Police VS DMK | போலீஸுக்கே இந்த நிலையா?மிரட்டிய திமுகவினர்! வாக்குவாதம்.. பரபரப்பு..Rahul vs Modi : எகிறும் ராகுலின் கிராப்ஃ.. சரியும் மோடியின் பிம்பம்! இந்தியா டுடே சர்வே

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முதல்வருக்கு இருந்த ஏக்கம்; தீர்த்து வைத்த ரஜினி - கலைஞர் புத்தக விழாவில் சுவாரஸ்யம்
முதல்வருக்கு இருந்த ஏக்கம்; தீர்த்து வைத்த ரஜினி - கலைஞர் புத்தக விழாவில் சுவாரஸ்யம்
"சீனியர்களை சமாளிப்பது கடினம்" ஸ்டாலின் முன்னிலையில் துரைமுருகனை கலாய்த்த ரஜினி!
‘கலைஞர் எனும் தாய்’ நூலை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.. பெற்று கொண்ட நடிகர் ரஜினிகாந்த்!
‘கலைஞர் எனும் தாய்’ நூலை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.. பெற்று கொண்ட நடிகர் ரஜினிகாந்த்!
பலமாக வீசிய காற்று.. புனேவில் விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர்.. பயணம் செய்த 4 பேரின் நிலை என்ன?
பலமாக வீசிய காற்று.. புனேவில் விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர்.. பயணம் செய்த 4 பேரின் நிலை என்ன?
கோயிலுக்கு வந்த பக்தர்களை கடித்த மலைத்தேனி - சீர்காழி அருகே அதிர்ச்சி
கோயிலுக்கு வந்த பக்தர்களை கடித்த மலைத்தேனி - சீர்காழி அருகே அதிர்ச்சி
GATE 2025: பொறியியல் கேட் தேர்வு விண்ணப்ப தேதி தள்ளிவைப்பு; இதோ புதிய அட்டவணை!
GATE 2025: பொறியியல் கேட் தேர்வு விண்ணப்ப தேதி தள்ளிவைப்பு; இதோ புதிய அட்டவணை!
மோடி, யோகியை புகழ்ந்த பெண்.. முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்த கணவர்.. உபியில் அதிர்ச்சி!
மோடி, யோகியை புகழ்ந்த பெண்.. முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்த கணவர்!
Breaking News LIVE: தொல்லியல் அருங்காட்சியகத்துக்கு மாணவர்களை பேருந்தில் அழைத்துச் சென்ற கனிமொழி
Breaking News LIVE: தொல்லியல் அருங்காட்சியகத்துக்கு மாணவர்களை பேருந்தில் அழைத்துச் சென்ற கனிமொழி
Embed widget