மேலும் அறிய

Chennai Encounter: சென்னையில் பரபரப்பு - ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - போலீசாரின் என்கவுண்டரில் ரவுடி திருவேங்கடம் சுட்டுக்கொலை

Chennai Encounter: சென்னையில் ரவுடி ஒருவர் போலீசாரின் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chennai Encounter: சென்னையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களில் ஒருவர், போலீசாரால் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

என்கவுன்டரில் ரவுடி சுட்டுக்கொலை:

ரெட்டேரி ஆட்டுச்சந்தை பகுதியில் போலீசார தாக்கி விட்டு தப்பிச் செல்ல முயன்றபோது, காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் திருவேங்கடம் என்பவர் உயிரிழந்தார். மாதாவரம் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்ய, போலீசார் அழைத்துச் சென்றபோது அவர் தப்ப முயன்றதாக கூறப்படுகிறது.  சம்பவம் நடந்த பகுதியில் சென்னை வடக்கு கூடுதல் காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

கடந்த 5ம் தேதி சென்னை பெரம்பூர் பகுதியில், பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், 8 பேர் போலீசில் சரணடைந்தனர். விசாரணைக்குப் பிறகு மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து 11 பேரும் போலீசாரின் விசாரணைக் காவலில் எடுக்கப்பட்டு இருந்த நிலையில், திருவேங்கடம் என்பவர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளளார்.

தொடரும் என்கவுன்டர்கள்:

திருச்சி உறையூர் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் துரை. புதுக்கோட்டை - திருச்சி மெயின் ரோடு அருகே வம்பன் தைலமர காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்த அவரை பிடிக்க முயன்றபோது, நடந்த தாக்குதலில் போலீசாரால் என்கவுன்டரில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்நிலையில் அந்த சம்பவம் நடந்த மூன்று நாட்கள் இடைவெளியிலேயே , ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ஒருவர் என்கவுண்டரில் கொல்லப்பட்டுள்ளார். ஒரே வாரத்தில் நடந்துள்ள இரண்டு என்கவுன்டர்கள் ரவுடிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

சட்ட-ஒழுங்கை நிலைநாட்ட என்கவுன்டரா?

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது, தலைநகர் சென்னையிலேயே தேசிய கட்சியின் மாநில தலைவர் வெட்டிக் கொல்லப்பட்டது போன்ற சம்பவங்கள் மொத்த மாநிலத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கின. இதனால், மாநிலத்தில் சட்ட-ஒழுங்கு என்பதே இல்லை என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சிக்க தொடங்கின. இதையடுத்து, தமிழ்நாடு அரசு நிர்வாக ரீதியாக பல்வேறு மாற்றங்களை முன்னெடுத்தது. முதலமைச்சர் ஸ்டாலினும் சட்ட-ஒழுங்கு தொடர்பாக உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனிடையே,  சென்னை காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோருக்கு பதிலாக, அந்த பதவியில் அருண் நியமிக்கப்பட்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்தவர், ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். இந்நிலையில் தான் என்கவுன்டரில் அடுத்தடுத்து இரண்டு ரவுடிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பிரதமரின் முதன்மை செயலாளராக முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் நியமனம்
பிரதமரின் முதன்மை செயலாளராக முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் நியமனம்
JEE Main 2025: ஜேஇஇ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் சில நாட்கள்தான்!- வழிமுறை இதோ!
JEE Main 2025: ஜேஇஇ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் சில நாட்கள்தான்!- வழிமுறை இதோ!
கண்ட்ரோல் ரூம்க்கு போன கால்.. முதல்வருக்கு கொலை மிரட்டல்.. ஜெயில் கைதியின் ஸ்கெட்ச்!
ENG vs AUS: ஸ்மித் பாய்சை சுளுக்கெடுக்கும் பென் டக்கெட்! 350 ரன்களுக்கு மேல் குவிக்குமா இங்கிலாந்து?
ENG vs AUS: ஸ்மித் பாய்சை சுளுக்கெடுக்கும் பென் டக்கெட்! 350 ரன்களுக்கு மேல் குவிக்குமா இங்கிலாந்து?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Three Language Policy | மாநில அதிகாரம் பறிப்புசெக் வைத்த மத்திய அரசுCBSE-ல் நடக்கும் ட்விஸ்ட் | Hindi | DMK | UdhayanidhiDurai Murugan Slams Vijay: போட்டுடைத்த கமல்  ”விஜய்க்கு 2026-ல புரியும்” டார்கெட் செய்த சாட்டை!PM Modi with pawan kalyan:  காவி உடையில் ENTRY! மோடி சொன்ன வார்த்தை? உண்மையை உடைத்த பவன்கல்யாண்!Udhayanidhi Vs Alisha BJP | ”தமிழ்தாய் வாழ்த்து பாட முடியுமா?” உதயநிதிக்கு அலிஷா சவால் | DMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பிரதமரின் முதன்மை செயலாளராக முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் நியமனம்
பிரதமரின் முதன்மை செயலாளராக முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் நியமனம்
JEE Main 2025: ஜேஇஇ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் சில நாட்கள்தான்!- வழிமுறை இதோ!
JEE Main 2025: ஜேஇஇ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் சில நாட்கள்தான்!- வழிமுறை இதோ!
கண்ட்ரோல் ரூம்க்கு போன கால்.. முதல்வருக்கு கொலை மிரட்டல்.. ஜெயில் கைதியின் ஸ்கெட்ச்!
ENG vs AUS: ஸ்மித் பாய்சை சுளுக்கெடுக்கும் பென் டக்கெட்! 350 ரன்களுக்கு மேல் குவிக்குமா இங்கிலாந்து?
ENG vs AUS: ஸ்மித் பாய்சை சுளுக்கெடுக்கும் பென் டக்கெட்! 350 ரன்களுக்கு மேல் குவிக்குமா இங்கிலாந்து?
Watch Video: நட்ட நடுரோட்டில் கிஸ் அடிக்க வந்த ரசிகர்.. தெறித்து ஓடிய பூனம் பாண்டே
Watch Video: நட்ட நடுரோட்டில் கிஸ் அடிக்க வந்த ரசிகர்.. தெறித்து ஓடிய பூனம் பாண்டே
Trump's Tension: ட்ரம்ப்பை டென்ஷனாக்கிய பொடியன்.!?! ஆத்திரத்தில் அவர் என்ன செய்தார் தெரியுமா.?
ட்ரம்ப்பை டென்ஷனாக்கிய பொடியன்.!?! ஆத்திரத்தில் அவர் என்ன செய்தார் தெரியுமா.?
இரவு நேரத்தில் தெரியாத பெண்ணுக்கு மெசேஜ்! ஜெயிலில் போட்ட நீதிமன்றம்! டைம் என்னன்னு தெரிஞ்சிக்கோங்க!
இரவு நேரத்தில் தெரியாத பெண்ணுக்கு மெசேஜ்! ஜெயிலில் போட்ட நீதிமன்றம்! டைம் என்னன்னு தெரிஞ்சிக்கோங்க!
‘போனால் போகட்டும்’ - காளியம்மாளுக்கு முழு சுதந்திரம் கொடுத்த சீமான்
‘போனால் போகட்டும்’ - காளியம்மாளுக்கு முழு சுதந்திரம் கொடுத்த சீமான்
Embed widget