மேலும் அறிய

‛எதற்கெடுத்தாலும் விசாரணை ஆணையம்...’ ‛ரிசல்ட்’ ஜீரோ; செலவு கோடி!

விசாரணை ஆணையங்களில் இதுவரை ஒன்று கூட முழுமையான அறிக்கையை தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அறுமுகசாமி தலைமையில் ஒரு விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. 2017ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட ஆணையம் இதுவரை விசாரணையை முடித்து அறிக்கையை தாக்கல் செய்யவில்லை. இந்தச் சூழலில் இந்த ஆணையத்தின் விசாரணையை முடித்து வைக்க கோரி ஒரு பொது நல வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்தது. நேற்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, இன்னும் 3 மாதங்களுக்கு விசாரணையை முடித்து அறிமுகசாமி ஆணையம் ஏன் அறிக்கையை தாக்கல் செய்ய கூடாது என்று கேள்வியை நீதிபதிகள் எழுப்பினர். அத்துடன் இது தொடர்பாக தமிழ்நாடு அரசு பதிலளிக்க அவகாசம் அளித்து வழக்கை ஒத்திவைத்தனர். 

விசாரணை ஆணையங்கள்அமைப்பது வெறும் கண் துடைப்பா?

தமிழ்நாட்டை பொறுத்தவரை விசாரணை ஆணையங்கள் அமைப்பது என்பது ஒரு கடமையாகவே இருந்து வந்துள்ளது. ஏனென்றால் கடந்த 1991ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் 45க்கும் மேற்பட்ட விசாரணை ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் வெறும் 2 அல்லது 3 ஆணையங்கள் மட்டுமே இறுதி அறிக்கையை தாக்கல் செய்துள்ளதாக ஒரு தன்னார்வு தொண்டு நிறுவனம் தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய ஆணையங்கள் அனைத்தும் வெறும் கண் துடைப்பாகவே இருந்துள்ளன. 


‛எதற்கெடுத்தாலும் விசாரணை ஆணையம்...’ ‛ரிசல்ட்’ ஜீரோ; செலவு கோடி!

 

அரசின் தரவுகள் என்ன?

2018ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி சார்பில் ரகுபதி ஆணையத்தின் கேள்விகள் தொடர்பாக வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது. அதில் நீதிபதி எம் சுப்ரமணியன் தமிழ்நாட்டில் தற்போது விசாரணையில் உள்ள ஆணையங்கள் என்னென்ன? அதற்கு செலவு செய்யப்பட்ட நிதி எவ்வளவு? என்ற கேள்வியை எழுப்பியிருந்தார். அதற்கு அப்போதைய அதிமுக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டில் 2010ஆம் ஆண்டு முதல் 5 விசாரணை ஆணையங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நீதிபதி சிங்காரவேலு ஆணையம் இளவரசனின் மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்டது. நீதிபதி ராஜேஸ்வரன் ஆணையம் ஜல்லிக்கட்டு வன்முறை தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்டது. ஓமந்தூரார் தலைமை செயலகம் கட்டிய பணியின் ஊழல் தொடர்பாக விசாரிக்க நீதிபதி ரகுபதி ஆணையம் அமைக்கப்பட்டது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரிக்க நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் என மொத்தம் 5 விசாரணை ஆணையங்கள் அப்போது விசாரணையில் இருந்தன. 


‛எதற்கெடுத்தாலும் விசாரணை ஆணையம்...’ ‛ரிசல்ட்’ ஜீரோ; செலவு கோடி!

இந்த விசாரணை ஆணையங்களில் இதுவரை ஒன்று கூட முழுமையான அறிக்கையை தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக ரகுபதி ஆணையம் 2018ஆம் ஆண்டு வரை 4.11 கோடி ரூபாய் விசாரணைக்கு செலவு செய்துள்ளதாகவும் அரசு தெரிவித்தது. இதேபோல் சிங்காரவேலு ஆணையம் 2.06 கோடி ரூபாயும், ராஜேஸ்வரன் ஆணையம் 1.47 கோடி ரூபாயும், அருண ஜெகதீசன் ஆணையம் 27.75 லட்ச ரூபாயும் செலவு செய்ததாக கூறப்பட்டிருந்தது.  இதை வைத்து பார்க்கும் போது விசாரணை ஆணையங்களால் அரசு கூடுதல் நிதி செலவும் உள்ளது தெளிவாக தெரிகிறது. மேலும் இந்த ஆணையங்களால் அரசுக்கு பெரிதாக எந்தவித பயனும் இல்லை என்றே பல சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். 

மேலும் படிக்க: கர்நாடக புதிய அணைக்கு நடுவர் மன்றம் மூலம் தீர்வு -துரை முருகன்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Weather: இன்று இரவு 6 மாவட்டங்களில் மழை இருக்கு-  நாளைய வானிலை எப்படி?
இன்று இரவு 6 மாவட்டங்களில் மழை இருக்கு- நாளைய வானிலை எப்படி?
அடுத்தடுத்த நாளில் அடுத்தடுத்து கொலைகள்! அதிர்ச்சியில் தமிழக மக்கள்! பிடியை இறுக்குமா காவல்துறை?
அடுத்தடுத்த நாளில் அடுத்தடுத்து கொலைகள்! அதிர்ச்சியில் தமிழக மக்கள்! பிடியை இறுக்குமா காவல்துறை?
CISF Recruitment 2025: 10-வது தேர்ச்சி பெற்றவரா? 1161 பணியிடங்கள்! மத்திய அரசுப் பணி; விவரம் இதோ!
CISF Recruitment 2025: 10-வது தேர்ச்சி பெற்றவரா? 1161 பணியிடங்கள்! மத்திய அரசுப் பணி; விவரம் இதோ!
Rajinikanth: ரஜினியை பார்த்து பைத்தியக்காரன் என்ற பிரபல இயக்குனர்! பார்த்திபன் பகிர்ந்த ஷாக்!
Rajinikanth: ரஜினியை பார்த்து பைத்தியக்காரன் என்ற பிரபல இயக்குனர்! பார்த்திபன் பகிர்ந்த ஷாக்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sunita williams Return | சுனிதாவை பாராட்டாத மோடி 2007-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் பின்னணி..! | Haren PandyaSenthil Balaji Delhi Visit | TASMAC ஊழல்.. துரத்தும் ED டெல்லி பறந்த செந்தில் பாலாஜி திடீர் விசிட்! பின்னணி என்ன?Sunita Williams: 27 ஆயிரம் KM Speed! 1927 டிகிரி செல்சியஸ்! Real Wonder Woman சுனிதா வில்லியம்ஸ்DMDK Alliance DMK |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Weather: இன்று இரவு 6 மாவட்டங்களில் மழை இருக்கு-  நாளைய வானிலை எப்படி?
இன்று இரவு 6 மாவட்டங்களில் மழை இருக்கு- நாளைய வானிலை எப்படி?
அடுத்தடுத்த நாளில் அடுத்தடுத்து கொலைகள்! அதிர்ச்சியில் தமிழக மக்கள்! பிடியை இறுக்குமா காவல்துறை?
அடுத்தடுத்த நாளில் அடுத்தடுத்து கொலைகள்! அதிர்ச்சியில் தமிழக மக்கள்! பிடியை இறுக்குமா காவல்துறை?
CISF Recruitment 2025: 10-வது தேர்ச்சி பெற்றவரா? 1161 பணியிடங்கள்! மத்திய அரசுப் பணி; விவரம் இதோ!
CISF Recruitment 2025: 10-வது தேர்ச்சி பெற்றவரா? 1161 பணியிடங்கள்! மத்திய அரசுப் பணி; விவரம் இதோ!
Rajinikanth: ரஜினியை பார்த்து பைத்தியக்காரன் என்ற பிரபல இயக்குனர்! பார்த்திபன் பகிர்ந்த ஷாக்!
Rajinikanth: ரஜினியை பார்த்து பைத்தியக்காரன் என்ற பிரபல இயக்குனர்! பார்த்திபன் பகிர்ந்த ஷாக்!
தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்கள் தாக்கிக்கொள்வதாகப் பரவும் காணொளி.. உண்மையா?
அரசு பள்ளி மாணவர்கள் தாக்கிக்கொள்வதாகப் பரவும் காணொளி.. உண்மையா?
இனி பாலுக்கு பிரச்னையே இருக்காது.. விவசாயிகளுக்கு அடிச்சது ஜாக்பாட்.. தெரிஞ்சுக்கோங்க!
இனி பாலுக்கு பிரச்னையே இருக்காது.. விவசாயிகளுக்கு அடிச்சது ஜாக்பாட்.. தெரிஞ்சுக்கோங்க!
GATE Result 2025: மாணவர்களே அலர்ட்.. கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி? முதலிடம் யாருக்கு?
GATE Result 2025: மாணவர்களே அலர்ட்.. கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி? முதலிடம் யாருக்கு?
100 நாள் சவால்- அரசுப்பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறன் சோதனை- கல்வித்துறை அறிவிப்பு
100 நாள் சவால்- அரசுப்பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறன் சோதனை- கல்வித்துறை அறிவிப்பு
Embed widget