மேலும் அறிய

அதிமுக பொதுச்செயலாளர் கல்வெட்டு விவகாரம்.. சசிகலா மீது காவல் நிலையத்தில் புகார் அளித்த அதிமுக!

அஇஅதிமுக பொதுச் செயலாளர் என்று கல்வெட்டு திறந்ததற்காக சசிகலா மீது முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தலைமையிலான அதிமுகவினர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.

அஇஅதிமுக பொதுச் செயலாளர் என்று கல்வெட்டு திறந்ததற்காக சசிகலா மீது அதிமுகவினர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். சசிகலாவின் இந்த செயல் சட்டத்திற்கு உட்பட்டது அல்ல என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தனது கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுக தோல்வியடைந்து எதிர்க்கட்சியாகப் பதவியேற்ற பின், அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளரும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியுமான சசிகலா தனது தொண்டர்களிடம் பேசிக் கொண்டிருந்த ஆடியோக்கள் வெளியிடப்பட்டன. தேர்தலுக்கு முன்பு, அரசியலில் ஈடுபடப் போவதில்லை என அறிவித்த சசிகலா இவ்வாறு ஆடியோக்கள் வெளியிடுவதன் பின்னணியில் அதிமுகவைக் கைப்பற்றும் எண்ணத்தில் இருக்கிறார் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். 

இந்நிலையில், கடந்த அக்டோபர் 16 அன்று, அதிமுகவின் பொன் விழா ஆண்டை முன்னிட்டு, சசிகலா சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தினார். மேலும், அதிமுகவைக் கைப்பற்றும் தனது எண்ணத்தைத் தனது தொண்டர்களிடம் வெளிப்படுத்திய சசிகலாவுக்கு, அவரது தி நகர் இல்லத்தில் இருந்து மெரினா கடற்கரை வரை அவரது தொண்டர்கள் வழிநெடுக வரவேற்பு அளித்தனர். மேலும், சசிகலா இந்தப் பயணத்திற்கு ஜெயலலிதா பயன்படுத்திய அதே காரில் அதிமுக கொடியைக் கட்டியவாறு பயன்படுத்தி இருந்ததும் அதிமுகவின் மூத்த புள்ளிகளைக் கோபமூட்டியுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் கல்வெட்டு விவகாரம்.. சசிகலா மீது காவல் நிலையத்தில் புகார் அளித்த அதிமுக!

இதுகுறித்து அப்போது பேசிய அமைச்சர் ஜெயகுமார், சசிகலா அதிமுகவிற்குள் நுழைவதை ஏற்க முடியாது எனவும், அவரது செயல்பாடுகளுக்கு ஆஸ்கர் விருது வழங்கலாம் எனவும், அவர் வேண்டுமானால் அமமுகவின் தலைமைப் பொறுப்புகளில் இருந்து கொள்ளலாம் எனவும் சசிகலாவின் அரசியல் வருகை குறித்து தனது கடுமையான எதிர்ப்புகளைப் பகிர்ந்திருந்தார். 

கடந்த அக்டோபர் 17 அன்று, அதிமுகவின் பொன் விழா ஆண்டுக் கொண்டாட்டங்களைக் கடைப்பிடிப்பதற்காக சென்னை தி நகரில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவில்லத்திலும், ராமாபுரம் எம்.ஜி.ஆர் இல்லத்திலும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார் சசிகலா. அப்போது சென்னை தி நகரிலுள்ள எம்.ஜி.ஆர் நினைவில்லத்தில் கல்வெட்டு ஒன்று, சசிகலா தரப்பால் வைக்கப்பட்டது. அதில் சசிகலாவின் பெயர் அதிமுகவின் பொதுச் செயலாளர் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது அதிமுகவினருக்கு அதிருப்தியை உருவாக்கியது.

அதிமுக பொதுச்செயலாளர் கல்வெட்டு விவகாரம்.. சசிகலா மீது காவல் நிலையத்தில் புகார் அளித்த அதிமுக!

ஏற்கனவே அதிமுகவின் கொடியைத் தொடர்ந்து பயன்படுத்துவதால், சசிகலா மீது சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். இந்நிலையில், எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் சசிகலாவின் பெயரை அதிமுகவின் பொதுச் செயலாளர் எனக் குறிப்பிட்டதை எதிர்த்து, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சசிகலாவின் இந்த நடவடிக்கை சட்ட விரோதமானது எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Indigo Flights: ரூ.827 கோடி..கடுப்பான மத்திய அரசு - இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ஆப்பு? முடியாத குழப்பம்
Indigo Flights: ரூ.827 கோடி..கடுப்பான மத்திய அரசு - இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ஆப்பு? முடியாத குழப்பம்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Indigo Flights: ரூ.827 கோடி..கடுப்பான மத்திய அரசு - இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ஆப்பு? முடியாத குழப்பம்
Indigo Flights: ரூ.827 கோடி..கடுப்பான மத்திய அரசு - இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ஆப்பு? முடியாத குழப்பம்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Embed widget