மேலும் அறிய

NRI App: வெளிநாடு வாழ் இந்தியர்கள் இனி சிரமமின்றி புகார்களை பதிவு செய்யலாம்.. தமிழ்நாடு போலீஸாரின் புதிய முயற்சி..

வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தங்களின் புகார்களை பதிவு செய்ய, தமிழ்நாடு காவல் துறை தரப்பில் புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

சென்னை: வெளிநாடு வாழ் இந்தியர்களின் (என்ஆர்ஐ) நீண்டகால கோரிக்கையை நிவர்த்தி செய்து, புகார்களை பதிவு செய்யவும், அதன் நிலையை கட்டம் கட்டமாக கண்காணிக்க உதவும் செயலியை (ஆப்) தமிழ்நாடு போலீசார் அறிமுகப்படுத்தியுள்ளனர். சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் இருந்து என்ஆர்ஐ பிரிவு செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற சட்டமன்றத்தில் தனி என்ஆர்ஐ பிரிவு அமைக்கப்படும் என்று முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த முறைப்படி ஏப்ரல் 2022 இல் தொடங்கப்பட்டு ஜூலை 2022 முதல் சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது. என்.ஆர். ஐ பிரிவு, பாதிக்கப்பட்ட நபர்களிடமிருந்து நேரடியாக தமிழ்நாடு அரசு மற்றும் அரசு நிறுவனங்கள் தரப்பில் மனுக்களை பெற்று வந்தது. முன்னதாக, என்.ஆர்.ஐ.க்கள் தங்கள் புகார்களை மின்னஞ்சல் மூலம் அனுப்புவது வழக்கம். இப்போது, இதனை எந்த சிரமமும் இல்லாமல் புகார்களை பதிவு செய்ய, காவல்துறை ஒரு பிரத்யேக செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், என்.ஆர்.ஐ டெஸ்க்டாப் செயலியில், மனுதாரர் தனது குறைகளை பதிவு செய்தவுடன், அவர்களுக்கென ஒரு பிரத்யேக ஐடி உருவாக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது. மனுவைப் பெற்ற பிறகு, மேல் விசாரணைக்காக சம்பந்தப்பட்ட நகரம் அல்லது மாவட்டத்திற்கு அனுப்பப்படும் முன், என்.ஆர்.ஐ பிரிவு அதைச் சரிபார்க்கும் என கூறப்பட்டுள்ளது.  ” மாவட்டத்தில் உள்ள என்ஆர்ஐ பிரிவுக்கான நோடல் அதிகாரி, மனுவை சம்பந்தப்பட்ட துணைப் பிரிவுக்கு விசாரணைக்காக ஒதுக்குவார். விசாரணை அறிக்கை மற்றும் துணை ஆவணங்கள் அறிக்கையின் பக்கச்சார்பான தன்மையைக் கண்டறிய என்.ஆர்.ஐ பிரிவு அதிகாரிகளால் ஆராயப்படும். விசாரணை அறிக்கை தகுதியான அதிகாரியால் அங்கீகரிக்கப்பட்ட பிறகு, மனுதாரருக்கு என்ஆர்ஐ களத்தில் இருந்து விவரங்கள் அனுப்பப்படும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கட்டத்திலும் மனுதாரர் பதிவு செய்த மின்னஞ்சல் மூலமாகவும், அவர்களின் தனிப்பட்ட அடையாளத்துடன் செயலியில் உள்நுழைவதன் மூலமாகவும் அவர்களின் புகாரின் நிலை குறித்த அறிவிப்பைப் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது. மனுதாரர்கள் தங்கள் குறைகளை பதிவு செய்ய கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தலாம் https://www.nricell.tn.gov.in/ என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செயல்முறையில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், என்.ஆர்.ஐ பிரிவு கட்டுப்பாட்டு எண்ணான 044-28470025-க்கு அழைத்து சந்தேகத்தை தீர்த்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாள் கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என வெளிநாடு வாழ் இந்தியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.        

Samudrayaan Mission: சந்திரயானை விடுங்க, சமுத்ரயான் தெரியுமா? ரூ.5000 கோடி செலவு, ஆழ்கடலில் 20 ஆயிரம் அடி பயணம்..!

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: 13ம் தேதி முதல் மக்களைச் சந்திக்கும் விஜய்! எந்த தேதியில் எங்கே செல்கிறார்? முழு தகவல் உள்ளே
TVK Vijay: 13ம் தேதி முதல் மக்களைச் சந்திக்கும் விஜய்! எந்த தேதியில் எங்கே செல்கிறார்? முழு தகவல் உள்ளே
DIP, DNT மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பம்! கடைசி தேதி நெருங்குது! உடனே விண்ணப்பிங்க!
DIP, DNT மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பம்! கடைசி தேதி நெருங்குது! உடனே விண்ணப்பிங்க!
Chennai Power Cut: சென்னையில் நாளை செப்டம்பர் 10-ம் தேதி எங்கெல்லாம் பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.?
சென்னையில் நாளை செப்டம்பர் 10-ம் தேதி எங்கெல்லாம் பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.?
CAT 2025: கேட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் சில நாட்கள்தான்.. கட்டணம், தேர்வு தேதி, விண்ணப்ப விவரம்!
CAT 2025: கேட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் சில நாட்கள்தான்.. கட்டணம், தேர்வு தேதி, விண்ணப்ப விவரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மல்லை சத்யா நிரந்தர நீக்கம்! ”ரொம்ப தப்பு பண்ணிட்ட” தூக்கியடித்த வைகோ
ஏர்போர்ட் மூர்த்தி கைது! இரவோடு இரவாக தூக்கிய POLICE! DGP அலுவலகம் முன் கைகலப்பு
செங்கோட்டையன் டெல்லி விசிட்! பாஜகவினருடன் முக்கிய MEETING? அடுத்த ப்ளான் என்ன?
Sexual Harassment | மாணவிக்கு பாலியல் சீண்டல் சிக்கிய தலைமை ஆசிரியர்! பணியிடை நீக்கம் செய்து அதிரடி
ADMK Poster | செங்கோட்டையனுக்கு நன்றி” ஜெயலலிதா, ஓபிஎஸ் போட்டோ! அதிமுக உரிமை மீட்பு குழு போஸ்டர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: 13ம் தேதி முதல் மக்களைச் சந்திக்கும் விஜய்! எந்த தேதியில் எங்கே செல்கிறார்? முழு தகவல் உள்ளே
TVK Vijay: 13ம் தேதி முதல் மக்களைச் சந்திக்கும் விஜய்! எந்த தேதியில் எங்கே செல்கிறார்? முழு தகவல் உள்ளே
DIP, DNT மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பம்! கடைசி தேதி நெருங்குது! உடனே விண்ணப்பிங்க!
DIP, DNT மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பம்! கடைசி தேதி நெருங்குது! உடனே விண்ணப்பிங்க!
Chennai Power Cut: சென்னையில் நாளை செப்டம்பர் 10-ம் தேதி எங்கெல்லாம் பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.?
சென்னையில் நாளை செப்டம்பர் 10-ம் தேதி எங்கெல்லாம் பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.?
CAT 2025: கேட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் சில நாட்கள்தான்.. கட்டணம், தேர்வு தேதி, விண்ணப்ப விவரம்!
CAT 2025: கேட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் சில நாட்கள்தான்.. கட்டணம், தேர்வு தேதி, விண்ணப்ப விவரம்!
கனமழை எச்சரிக்கை: 10 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கும் மழை! வானிலை மையம் தகவல்
கனமழை எச்சரிக்கை: 10 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கும் மழை! வானிலை மையம் தகவல்
அதிமுக உட்கட்சி மோதல்.. பாஜக பஞ்சாயத்து பேசலாமா? ஆதங்கத்தில் அடிமட்ட தொண்டர்கள்
அதிமுக உட்கட்சி மோதல்.. பாஜக பஞ்சாயத்து பேசலாமா? ஆதங்கத்தில் அடிமட்ட தொண்டர்கள்
Tamilnadu Roundup: திமுக மா.செ. கூட்டம்.. 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: திமுக மா.செ. கூட்டம்.. 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - தமிழகத்தில் இதுவரை
Puducherry Power Cut: புதுச்சேரியில் இன்று  மின்தடை... உங்க ஏரியா லிஸ்ட்ல இருக்கா!
Puducherry Power Cut: புதுச்சேரியில் இன்று மின்தடை... உங்க ஏரியா லிஸ்ட்ல இருக்கா!
Embed widget