மேலும் அறிய

பீகார் தேர்தல் முடிவுகள் 2025

(Source:  ECI | ABP NEWS)

கொடூரம்... ”தமிழ்நாட்டில் ஓர் ஆடுஜீவிதம்” 20 ஆண்டு கொத்தடிமை மீட்கப்பட்ட பின்னணி!

சென்னை ரயில் நிலையத்தில் டீ குடிப்பதற்காக இறங்கியவர், பாண்டிச்சேரி செல்லும் ரயிலை தவறவிட்டதுடன் ராமேஸ்வரம் செல்லும் ரயிலில் மாறுதலாக ஏறி பயணித்துள்ளார்.

டீ குடிப்பதற்காக ரயிலில் இருந்து இறங்கிய ஒருவர் 20 ஆண்டுகளாக கொத்தடிமை வாழ்க்கை வாழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவரை மீட்ட அரசு அதிகாரிகள் குடும்பத்தினருடன் சேர்த்து வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம், விஜயநகரம் அருகேவுள்ளது மனியம் மாவட்டம், பார்வதிபுரம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த கிஷா என்பவரது மகன் அப்பாராவ் என்கிற கொண்டக்காரி சுக்கா. இவருக்கு சீத்தாம்மா என்கிற பெண்ணுடன் திருமணமாகி தம்புதோரா சாயம்மா என்கிற பெண் குழந்தையும் இருந்துள்ளது. கட்டிட தொழிலாளியான அப்பாராவ் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் தனது நண்பர்களுடன் பாண்டிச்சேரியில் நடைபெற்ற ஒரு கட்டிடப் பணிக்காக சென்னை வழியாக ரயில் மூலம் சென்றுள்ளார்.

அச்சமயம் சென்னை ரயில் நிலையத்தில் டீ குடிப்பதற்காக இறங்கியவர், பாண்டிச்சேரி செல்லும் ரயிலை தவறவிட்டதுடன் ராமேஸ்வரம் செல்லும் ரயிலில் மாறுதலாக ஏறி பயணித்துள்ளார்.

செல்லும் ஊர் தெரியாமல் சிவகங்கை ரயில் நிலையத்தில் இறங்கி நின்றவரை சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அடுத்துள்ள கடம்பங்குளம் கிராமத்தை சேர்ந்த மலைக்கண்ணு என்பவர் இவரை பார்த்து வேலை தருவதாக கூறி அழைத்து சென்று ஆடுகளை மேய்க்கவைத்துள்ளார்.

கொத்தடிமையாக வைத்து வேலை

அழைத்து சென்ற மூன்று ஆண்டுகளில் மலைக்கண்ணு இறந்துவிடவே அதனை தொடர்ந்து அதே கிராமத்தை சேர்ந்த அண்ணாத்துரை என்பவர் இவரை அழைத்து சென்று அதேபோல் ஆடுமேய்க்க வைத்துள்ளார். மேலும் கடந்த 17 ஆண்டுகளாக அப்பாராவிற்கு ஊதியம் எதுவும் வழங்காமல் வெறும் உணவு மட்டுமே வழங்கியதுடன் அப்பாராவ் ஊருக்கு செல்ல அனுமதி கேட்டும் வழங்காமல் ஊதியத்தை அப்பாராவின் ஊதியத்தை வங்கியில் செலுத்தி வருவதாகவும் கூறி கொத்தடிமையாக வைத்து வேலை வாங்கியுள்ளனர்.

தொழிலாளர் நலத்துறை திடீர் ஆய்வு

இந்நிலையில் சிவகங்கை தொழிலாளர் நலத்துறை அலுவலர்  முத்து தலைமையிலான குழுவினர் தொழிலாளர் தினத்தன்று காளையார்கோவில் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்பாராவ் குறித்து தெரியவரவே உடனடியாக மீட்டு அவரிடம் விசாரணை மேற்கொண்டதோடு ஆட்சியர் ஆஷா அஜித்திடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

 உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட ஆட்சியர், ஆந்திரா மாநிலம் மன்யம் மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு அப்பாராவ் குறித்த தகவலை தெரிவித்து அவரது குடும்பத்தினரை தேட உதவி கோரவே உடனடியாக அங்கிருந்த அதிகாரிகளும் அவரது குடும்பத்தினரை தேடியுள்ளனர்.

குடும்பத்துக்குத் தகவல்

மூன்று வார தேடுதலுக்கு பின் அப்பாராவின் மனைவி சீத்தாம்மா இறந்துவிட்ட நிலையில் அவரது மகள் தம்புதோரா சாயம்மாளுக்கு தம்புதோரா சந்து என்பவருடன் திருமணமாகி இருந்த நிலையில் மகள் சாயம்மாளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அந்த அதிகாரிகளே அப்பாராவின் மகள் மற்றும் மருமகன் ஆகியோரை அழைத்து சிவகங்கை வந்ததுடன் அப்பாராவை குடும்பத்தினருடன் சேர்த்தனர். கொத்தடிமையாக இருந்தவரை மீட்டு அவரது குடும்பத்தினருடன் சேர்த்து வைத்த சம்பவம், காண்போரை நெகிழச் செய்தது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

BJP: மிஷன் தமிழ்நாடு, மேற்குவங்கம் - இலக்கை அடையுமா பாஜக? திமுக கைவசமுள்ள அஸ்திரங்கள், SIR ஆபத்தா?
BJP: மிஷன் தமிழ்நாடு, மேற்குவங்கம் - இலக்கை அடையுமா பாஜக? திமுக கைவசமுள்ள அஸ்திரங்கள், SIR ஆபத்தா?
Bihar Election Result: பீகாரை வாரிச்சுருட்டிய NDA கூட்டணி.. எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள்? சர்ப்ரைஸ் தந்த ஓவைசி
Bihar Election Result: பீகாரை வாரிச்சுருட்டிய NDA கூட்டணி.. எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள்? சர்ப்ரைஸ் தந்த ஓவைசி
Kashmir: ஷாக் சம்பவம்... போலீஸ் ஸ்டேஷனில் வெடி விபத்து.. 7 பேர் பலி!
Kashmir: ஷாக் சம்பவம்... போலீஸ் ஸ்டேஷனில் வெடி விபத்து.. 7 பேர் பலி!
Rahul Gandhi on Defeat: “நியாயமற்ற தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை“ - பீகார் தோல்விக்குப் பின் ராகுல் கூறியது என்ன.?
“நியாயமற்ற தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை“ - பீகார் தோல்விக்குப் பின் ராகுல் கூறியது என்ன.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tirupattur School Caste issue | சாதி பெயரை சொல்லி திட்டிய சத்துணவு பெண்!சிறுவன் கண்ணீர் வாக்குமூலம்
Rahul vs Tejashwi Yadav | காங்கிரஸ் கவலைக்கிடம்!ஆத்திரத்தில் தேஜஸ்வி தரப்பு!தோல்விக்கான காரணம் என்ன?
Bihar Election 2025 | மீண்டும் அரியணையில் நிதிஷ்?36 வயதில் சாதிப்பாரா தேஜஸ்வி!காங்கிரஸ் நிலைமை என்ன?
Tejashwi Yadav | பெற்றோரை CM ஆக்கிய தொகுதி! தேஜஸ்விக்கு கைகொடுக்குமா? ராகோபூர் தொகுதி சுவாரஸ்யம்
Sundar c quits thalaivar 173|என்னால முடியல’’சுந்தர்.சி-யின் திடீர் முடிவு!ரஜினியின் அடுத்த DIRECTOR?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
BJP: மிஷன் தமிழ்நாடு, மேற்குவங்கம் - இலக்கை அடையுமா பாஜக? திமுக கைவசமுள்ள அஸ்திரங்கள், SIR ஆபத்தா?
BJP: மிஷன் தமிழ்நாடு, மேற்குவங்கம் - இலக்கை அடையுமா பாஜக? திமுக கைவசமுள்ள அஸ்திரங்கள், SIR ஆபத்தா?
Bihar Election Result: பீகாரை வாரிச்சுருட்டிய NDA கூட்டணி.. எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள்? சர்ப்ரைஸ் தந்த ஓவைசி
Bihar Election Result: பீகாரை வாரிச்சுருட்டிய NDA கூட்டணி.. எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள்? சர்ப்ரைஸ் தந்த ஓவைசி
Kashmir: ஷாக் சம்பவம்... போலீஸ் ஸ்டேஷனில் வெடி விபத்து.. 7 பேர் பலி!
Kashmir: ஷாக் சம்பவம்... போலீஸ் ஸ்டேஷனில் வெடி விபத்து.. 7 பேர் பலி!
Rahul Gandhi on Defeat: “நியாயமற்ற தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை“ - பீகார் தோல்விக்குப் பின் ராகுல் கூறியது என்ன.?
“நியாயமற்ற தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை“ - பீகார் தோல்விக்குப் பின் ராகுல் கூறியது என்ன.?
Toyota Discount: ஆத்தி.. ரூ.13 லட்சம் தள்ளுபடி - டாப் 3 லக்சரி ப்ரீமியம் கார்களுக்கு அதிரடி சலுகை - டொயோட்டா அறிவிப்பு
Toyota Discount: ஆத்தி.. ரூ.13 லட்சம் தள்ளுபடி - டாப் 3 லக்சரி ப்ரீமியம் கார்களுக்கு அதிரடி சலுகை - டொயோட்டா அறிவிப்பு
முதல்வர் ஸ்டாலின் மாஸ்டர்பிளான்..! திமுகவில் முதன்முறையாக பிராமணருக்கு கட்சிப் பதவி.!
முதல்வர் ஸ்டாலின் மாஸ்டர்பிளான்..! திமுகவில் முதன்முறையாக பிராமணருக்கு கட்சிப் பதவி.!
Edappadi Palanisamy: ’’இங்கு ஒவ்வொரு தொகுதியிலும் 50 ஆயிரம் போலி வாக்காளர்கள்’’ - பகீர் கிளப்பிய எடப்பாடி பழனிசாமி
’’இங்கு ஒவ்வொரு தொகுதியிலும் 50 ஆயிரம் போலி வாக்காளர்கள்’’ - பகீர் கிளப்பிய எடப்பாடி பழனிசாமி
Prashant Kishor: கணக்குப் போட்டவர் கோட்டை விட்டார்; டக் அவுட் ஆன பிரசாந்த் கிஷோர் - அரசியலை விட்டு விலகலா.?
கணக்குப் போட்டவர் கோட்டை விட்டார்; டக் அவுட் ஆன பிரசாந்த் கிஷோர் - அரசியலை விட்டு விலகலா.?
Embed widget