மேலும் அறிய

வேலூரில் மீன் சாப்பிட்ட 3 மற்றும் 4 வயது குழந்தைகள் உயிரிழப்பு

கடையில் வாங்கிய வறுத்த மீனை உண்ட குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்ட நிலையில் உள்ளூர் மெடிக்கல் ஷாப்பில் மருந்து வாங்கி உண்டதால் திடீர் உயிரிழப்பு

வேலூர் மாவட்டம் வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட கஸ்பா பஜார் பகுதியை சேர்ந்தவர்கள் அன்சர் (34)-சுரேயா தம்பதியினர். அன்சர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார், சுரேயா வீட்டிலேயே பீடி சுற்றும் தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு ஆப்ரீன் என்ற 4 வயது பெண் குழந்தையும், அசேன் என்ற 3 வயது ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் தந்தை அன்சர் நேற்று இரவு வீட்டுக்கு வரும் போது சைதாப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு கடையில் எண்ணையில் பொறித்த மீன் துண்டுகளை வாங்கி வந்துள்ளார். அதை தனது குழந்தைகளுக்கும் கொடுத்துள்ளார். இதனையடுத்து குழந்தைகள் தொடர்ந்து வாந்தி எடுத்துள்ளது. பயந்து போன பெற்றோர் செய்வதறியாது அருகில் உள்ள மசூதிக்கு குழந்தைகளை அழைத்து சென்று மத்திரித்து வந்துள்ளனர். காலையில் உடல் நிலை மோசமாகவே அப்பகுதியில் உள்ள தனியார் மெடிக்கலுக்கு சென்று ஒரு டானாக் பாண்டல், ஒரு மாத்திரையை வாங்கி வந்து குழந்தைகளுக்கு கொடுத்துள்ளனர். இதை  உண்ட உடனே அடுத்த 10 நிமிடத்தில் குழந்தைகள் சுயநினைவை இழந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இரண்டு குழந்தைகளையும் அவசர அவசரமாக வேலூர் பழைய அரசு பெண்ட்லெட் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு இரண்டு குழந்தைகளையும் பரிசோதித்த மருத்துவர்கள் இரண்டு குழந்தைகளும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். 


வேலூரில் மீன் சாப்பிட்ட 3 மற்றும் 4 வயது குழந்தைகள் உயிரிழப்பு

இதனையடுத்து உயிரிழந்த இரண்டு குழந்தைகளின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம் குறித்து அரசு மருத்துவர் கூறுகையில், குழந்தைகளுக்கு 2 நாட்களாகவே வயிற்றுப்போக்கு இருந்ததாக பெற்றோர் கூறுகின்றனர். மேலும் நேற்று இரவு மீன் சாப்பிட்டதாகவும் அதனால் வாந்தி ஏற்பட்டதால் அவர்களே அப்பகுதியில் உள்ள மருந்து கடையில் மருந்தை வாங்கி குழந்தைகளுக்கு கொடுத்ததாகவும் கூறுகின்றனர். இருந்தபோதும் தெளிவாக அவர்கள் எதையும் குறிப்பிடவில்லை. பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே இரண்டு குழந்தைகள் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என கூறினர். 


வேலூரில் மீன் சாப்பிட்ட 3 மற்றும் 4 வயது குழந்தைகள் உயிரிழப்பு

இச்சம்பவம் குறித்து வேலூர் தெற்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே வயிற்றில் 10 மாதம் சுமந்து பெற்ற பிள்ளைகளை ஒரே நேரத்தில் பரிகொடுத்த தாயின் வேதனை சொல்லி மாலாதது. உயிரிழந்த குழந்தைகள் வசித்த பகுதியான கஸ்பா பஜார் தெருவில், இச்சம்பவத்தையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கஸ்பா ஆரம்ப சுகாதார நிலையை செவிலியர்கள் வீடு வீடாக சென்று குடிநீர் மாதிரிகளை எடுத்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இரு குழழ்தைதள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


வேலூரில் மீன் சாப்பிட்ட 3 மற்றும் 4 வயது குழந்தைகள் உயிரிழப்பு

குழந்தைகளுக்கு ஏதேனும் உடல் நலக்குறைவு ஏற்பட்டால் உடனே அருகில் உள்ள அரசு மருத்துவமனையோ அல்லது தனியார் மருத்துவமனைக்கோ அழைத்து செல்ல வேண்டும் என்றும் தாமாக பெற்றோர் எந்த முடிவையும் எடுக்க கூடாது என்றும் மருத்துவர்கள் கேட்டுக்கொண்டனர்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

தலைப்பு செய்திகள்

வானிலை வார்னிங்: சென்னையில் இன்று இடியுடன் மழை; நீலகிரி, தேனிக்கு 2 நாட்கள் கனமழை
வானிலை வார்னிங்: சென்னையில் இன்று இடியுடன் மழை; நீலகிரி, தேனிக்கு 2 நாட்கள் கனமழை
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
சுதந்திர தினத்தை வரவேற்கும் ராஜராஜ சோழனின் கம்பீர சின்னம்... கோபுரம் முன்பு செல்ஃபி எடுத்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்!
சுதந்திர தினத்தை வரவேற்கும் ராஜராஜ சோழனின் கம்பீர சின்னம்... கோபுரம் முன்பு செல்ஃபி எடுத்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Embed widget