மேலும் அறிய

''வாடகை வாகன ஓட்டுநர்களின் கடன் தவணைகளுக்கு கால அவகாசம் அளிக்க வேண்டும்’’ - சீமான் கோரிக்கை

ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள வாடகை வாகன ஓட்டுநர்களின் கடன் தவணைகளை வசூலிக்க ஓராண்டு காலம் அவகாசம் அளித்து தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என சீமான் வலியுறுத்தி உள்ளார்

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா நோய்த்தொற்றுப் பரவல் காரணமாகக் கடந்த ஓராண்டு காலத்திற்கும் மேலாக அனைத்துத் தொழில்களும் பெருமளவில் முடங்கிப்போயுள்ளது. இதன் காரணமாக வாடகைக்கு வாகனங்களை இயக்கும் தொழில் புரிவோரும், அதில் பணிபுரியும் ஓட்டுநர்கள், உதவியாளர்கள் என அனைத்துத்தரப்பினரும் தொழில் நசிவால் வருமானமின்றி வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக, தினக்கூலிக்கு வாகனங்களை இயக்கி வந்த வாடகை வாகன ஓட்டுநர்கள், தங்களது வாகனக்கடனுக்கான மாதத் தவணையைக்கூடச் செலுத்த முடியாமல் திணறி வருவதாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்

'வாடகை வாகன ஓட்டுநர்களின் கடன் தவணைகளுக்கு கால அவகாசம் அளிக்க வேண்டும்’’ -  சீமான் கோரிக்கை

 

முழு ஊரடங்கு காரணமாக நெடுநாட்களாக வாகனங்கள் இயக்கப்படாததால், சிறிதும் வருமானமின்றி, வீட்டு வாடகை, மின் கட்டணம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளைக்கூட நிறைவேற்ற முடியாமல், வாழ்வா? சாவா? எனும் கொடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அரசு அறிவித்துள்ளக் கட்டுப்பாடுகள், பெட்ரோல், டீசல் விலை ஆகியவற்றின் அதீத விலை உயர்வு போன்றவைகள் காரணமாக வாடகை வாகனத்தொழிலானது இழப்பையே சந்தித்து வருகிறது. இவை மட்டுமின்றி, சாலை வரி, சுங்க வரி, மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வரிகள் போன்றவற்றின் விளைவாக எளிய மக்களால் வாடகை வாகனத்தொழிலைத் தொடர்ந்து நடத்த முடியாமல் கைவிடும் கொடுமையான சூழலே நிலவுகிறது. இதனால், தமிழகத்திலுள்ள பல்லாயிரக்கணக்கான வாடகை வாகன ஓட்டுநர்களின் குடும்பங்கள் பசியில் வாடி, வறுமையில் உழலும் நிலைக்குத் தள்ளப்பட்டு அவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில் வங்கிகளும், தனியார் நிதி நிறுவனங்களும் வாடகை வாகனங்களுக்கான கடன் தவணையை உடனடியாகச் செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது சிறிதும் மனிதத்தன்மையற்ற செயலாகும். ஆகவே, தமிழக அரசு இவ்விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு வாடகை வாகன ஓட்டுனர்கள் வாழ்வு நசிந்துவிடாமல் பாதுகாக்க வேண்டியது அவசியமாகிறது

'வாடகை வாகன ஓட்டுநர்களின் கடன் தவணைகளுக்கு கால அவகாசம் அளிக்க வேண்டும்’’ -  சீமான் கோரிக்கை

பொதுமுடக்கம் முடிவுற்றாலும் இயல்பு நிலைக்குத் திரும்பக் குறைந்தபட்சம் ஓராண்டு காலமாவது ஆகும் எனும்போது அதனைக் கருத்திற்கொண்டு தமிழக அரசு, வாடகை வாகனக் கடனுக்கான மாதத்தவணைகளை அடுத்த ஆண்டு மே மாதம் வரை கட்டாயப்படுத்தி வசூலிக்கக் கூடாது எனவும், இந்த உத்தரவானது வங்கிகளுக்கு மட்டுமன்றி சிறு,குறு மற்றும் தனியார் நிதி நிறுவனங்களுக்கும் பொருந்தும் வகையில் தமிழக அரசு விரிவான உத்தரவினைப் பிறப்பிக்க வேண்டும் எனவும் கோருகிறேன். மேலும், தமிழகத்தில் வணிக ஓட்டுநர் உரிமம் அல்லது ஓட்டுநர் உரிமம் வைத்துள்ள அனைத்து வாடகை வாகன ஓட்டுநர்களுக்கும் துயர் துடைப்பு நிதியாக ரூ.10,000 வழங்க வேண்டும் எனவும், அனைத்துத்தரப்பு மக்களும் பெரும் பொருளாதாரப் பின்னடைவில் இருப்பதால் தமிழகத்திலுள்ள அனைத்து சுங்கச் சாவடிகளிலும் குறைந்தபட்சம் அடுத்த ஓராண்டு காலத்திற்குச் சுங்கக் கட்டணம் வசூலிப்பதற்குத் தடை விதிக்க முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், இப்பேரிடர் காலத்தில் அன்றாடப் பிழைப்புக்கே வழியின்றி அல்லலுறும் வாடகை வாகன ஓட்டுநர்களின் மிக நியாயமான இக்கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றி, பல்லாயிரக்கணக்கான குடும்பங்களுக்கு மறுவாழ்வளிக்குமாறு நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசைக் கேட்டுக்கொள்வதாக சீமான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்?  அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்? அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
தமிழ்நாட்டில் நடக்கும் அநியாயத்தைப் பாருங்க! யாரு இந்தியை திணிக்குறாங்க? அண்ணாமலை ஆவேசம்
தமிழ்நாட்டில் நடக்கும் அநியாயத்தைப் பாருங்க! யாரு இந்தியை திணிக்குறாங்க? அண்ணாமலை ஆவேசம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jolarpettai Murder: LIFT-ல் சிக்கிய எம்.பி! 1 மணி நேரம் திக்.. திக்! மயங்கிய காங்.கட்சியினர்”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | Collector

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்?  அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்? அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
தமிழ்நாட்டில் நடக்கும் அநியாயத்தைப் பாருங்க! யாரு இந்தியை திணிக்குறாங்க? அண்ணாமலை ஆவேசம்
தமிழ்நாட்டில் நடக்கும் அநியாயத்தைப் பாருங்க! யாரு இந்தியை திணிக்குறாங்க? அண்ணாமலை ஆவேசம்
Annamalai: இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக அரசை கிழித்த அண்ணாமலை
Annamalai: இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக அரசை கிழித்த அண்ணாமலை
மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
மகா கும்பமேளாவில் குடும்பத்துடன் விஜய் தேவரகொண்டா...கங்கையில் நீராடி பிரார்த்தனை
மகா கும்பமேளாவில் குடும்பத்துடன் விஜய் தேவரகொண்டா...கங்கையில் நீராடி பிரார்த்தனை
WPL 2025 RCB VS DC : இறுதி போட்டியில் தோல்வி.. பழிதீர்க்குமா டெல்லி கேபிடல்ஸ்! பெங்களூருவுடன் மோதல்..
WPL 2025 RCB VS DC : இறுதி போட்டியில் தோல்வி.. பழிதீர்க்குமா டெல்லி கேபிடல்ஸ்! பெங்களூருவுடன் மோதல்..
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.