மேலும் அறிய

தருமபுரி மாவட்டத்தில் காலியாக உள்ள 3 உள்ளாட்சி பதவிகளுக்கு வாக்குப்பதிவு விறுவிறு

13 பதவிகளுக்கு வேட்பாளர்கள் களத்தில் போட்டியிட்டனர். இதில் 10 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியின்றி வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தற்போது 3 பதவிகளுக்கு வாக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக இருந்த 14 பதவிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் பாலக்கோடு ஒன்றியம் குடியனஹள்ளி கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு மனு தாக்கல் செய்த 3 பேரின் மனுக்கள் தள்ளுபடி ஆனது. இதனால் அந்த ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான இடைத்தேர்தல் நடைபெறவில்லை. தொடர்ந்து மீதமுள்ள 13 பதவிகளுக்கு வேட்பாளர்கள் களத்தில் போட்டியிட்டனர். இதில் 10 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியின்றி வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தற்போது 3 பதவிகளுக்கு வேட்பாளர்கள் போட்டியாக களத்தில் உள்ளனர். இதில் பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அரூர் ஒன்றியத்தை சேர்ந்த 15 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கிய, தருமபுரி மாவட்ட ஊராட்சி குழு 18-ஆவது வார்டு உறுப்பினர் பதவி, நல்லம்பள்ளி ஒன்றியம் எச்சனஹள்ளி கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கடத்தூர் ஒன்றியம் சில்லாரஹள்ளி கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய மூன்று பதவிகளுக்கான இடை தேர்தல் நடைபெறுகிறது. 

தருமபுரி மாவட்டத்தில் காலியாக உள்ள 3 உள்ளாட்சி பதவிகளுக்கு வாக்குப்பதிவு விறுவிறு
 
இதில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு அதிமுக, திமுக, அமமுக, தேமுதிக, பாமக, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த எட்டு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதேபோல் எச்சனஹள்ளி கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு இரண்டு பேரும், கடத்தூர் ஒன்றியம் சில்லாரஹள்ளி கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 3 பேரும் போட்டியிடுகின்றனர். இந்தத் தேர்தலில் மொத்தம் 57,364 வாக்காளர்கள் வாக்கு பதிவு செய்ய உள்ளனர்.  இதற்காக 93 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. 

தருமபுரி மாவட்டத்தில் காலியாக உள்ள 3 உள்ளாட்சி பதவிகளுக்கு வாக்குப்பதிவு விறுவிறு
 
இதில் 21 வாக்குச் சாவடிகள் மிகவும் பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 50 சதவீத வாக்குச்சாவடிகளுக்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டும், வீடியோ கிராபர்கள் மூலம் வாக்குப் பதிவு,  பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த இடைத்தேர்தல் வாக்கு பதிவினை 10 நுண் பார்வையாளர்கள் வாக்குப் பதிவு மையங்களை பார்வையிட்டு வருகின்றனர். இந்த இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இதில் கொரோனா கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டு, வாக்காளர்கள் சமூக இடைவெளியுடன், வரிசையில் நின்று வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். இந்த வாக்குப் பதிவு மையங்களில் 700-க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடி அலுவலர்கள் பணியமர்த்தப் பட்டுள்ளனர். தொடர்ந்து காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

சரசரவென உயரும் மேட்டூர் அணை? ஒரே நாளில் நீர்வரத்து அதிரடி உயர்வு... லேட்டஸ்ட் நிலவரம் இதோ!
சரசரவென உயரும் மேட்டூர் அணை? ஒரே நாளில் நீர்வரத்து அதிரடி உயர்வு... லேட்டஸ்ட் நிலவரம் இதோ!
மேகதாது அணை: 'சட்டத்திற்கு புறம்பானது' - சௌமியா அன்புமணி சாடல்
மேகதாது அணை: 'சட்டத்திற்கு புறம்பானது' - சௌமியா அன்புமணி சாடல்
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...
மேகதாது அணை கட்டினால் டெல்டா பாலைவனமாகும்: எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை
மேகதாது அணை கட்டினால் டெல்டா பாலைவனமாகும்: எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
Sedan Cars: இனி நாமதான்! இந்திய சந்தையை அதிரவைக்கும் 3 செடான் கார்கள்; மாடல், விலை விவரம்
Sedan Cars: இனி நாமதான்! இந்திய சந்தையை அதிரவைக்கும் 3 செடான் கார்கள்; மாடல், விலை விவரம்
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
Embed widget