மேலும் அறிய

சேலத்தில் புதிய பேருந்து நிலையத்திற்கு கருணாநிதி பெயர் வைக்க மாநகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்

மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கும் சமமாக நிதி ஒதுக்கி பணிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் கூறினார்.

சேலம் மாநகராட்சியின் இயல்பு கூட்டம் இன்று நடைபெற்றது. சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் தலைமைகள் நடைபெற்ற கூட்டம் நடைபெறுகிறது. சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிப்பதாக கூறினார். பின்னர், மாநகராட்சி உறுப்பினர்கள் பேசத் தொடங்கினர். அதிமுக கவுன்சிலர் யாதவ மூர்த்தி பேசும்போது, 15 வது நிதி குழுவில் ஒதுக்கீடு செய்யப்பட்ட பணத்தில் மார்ச் மாதத்திற்குள் மாநகராட்சியில் பணிகள் முடிக்கப்பட வேண்டும். ஆனால் அதற்குரிய ஒதுக்கீடு பணம் இதுவரை வரவில்லை. மார்ச் மாதத்திற்கு உள்ளாக எப்படி நிதி ஒதுக்கி பணிகள் செய்வீர்கள்? எனக் கேள்வி எழுப்பினார். இதற்கு திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மன்ற கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இவர்களை மேயர் ராமச்சந்திரன் அமைதிப்படுத்தினார்.

சேலத்தில் புதிய பேருந்து நிலையத்திற்கு கருணாநிதி பெயர் வைக்க மாநகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்

இதன் பின்னர் அதிமுக கவுன்சிலர்கள் சிலர் எழுந்து, சில வார்டுகளுக்கு மட்டும் அதிக நிதி ஒதுக்கப்படுகிறது. அதிமுக கவுன்சிலர்கள் வார்டுகளுக்கு நிதி அதிக ஒதுக்கப்படுவதில்லை என தெரிவித்து பேசினார். இதற்கு மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் இனி உரிய நிதி ஒதுக்கப்படும் என உறுதியளித்தார். பின்னர் திமுக கவுன்சிலர் 34 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஈசன் இளங்கோ பேசும்போது, சேலம் பழைய பேருந்து நிலையத்தில் ஈரடுக்கு பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையத்திற்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பெயர் வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இன்று நடந்த மாநகராட்சி கூட்டத்தில் சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் கலந்து கொண்டார். மாமன்ற கூட்டத்தில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், நிதி நிலையை அடிப்படையாகக் கொண்டு மாநகராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. கடந்த ஆட்சியின் போது உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருந்ததால் மத்திய அரசிடம் இருந்து கிடைக்க வேண்டிய பல்லாயிரம் கோடி நிதி கிடைக்கவில்லை. மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல்வராக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தினார். மாநகராட்சியில் நடைபெற்று வரும் பணிகளில் உள்ள இடையூறுகள் குறித்து மாமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருக்கு தெரிவித்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

சேலத்தில் புதிய பேருந்து நிலையத்திற்கு கருணாநிதி பெயர் வைக்க மாநகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்

பணியாளர்களுக்கு சம்பளம் கூட கொடுக்க முடியாத நிலையே கடந்த ஆட்சியில் இருந்தது. அரசு நிதி ஒதுக்கினாலும் கூட பல்வேறு காரணங்களால் பணி துவங்குவதில் காலதாமதம் ஏற்படும் சூழ்நிலை இருந்தது. கடந்த கால நிதிநிலை பிரச்சினைகளை முதலமைச்சர் சீர் செய்து தற்போது நிதிநிலை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தெளிவான வளர்ச்சி நிறைந்த மாநிலமாக தமிழகம் இருக்கும் வகையில் நிதிநிலை அறிக்கை அமையும். அனைத்து வார்டுகளிலும் மக்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்கிற எண்ணம் மாமன்ற உறுப்பினர்களுக்கு இருக்கும். மாநகராட்சி ஆணையாளர் அனைத்து வார்டுக்கும் சமமான நிதியை ஒதுக்கி தர வேண்டும். அந்த நிதியின் அடிப்படையில் வார்டு மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள மாமன்ற உறுப்பினர்கள் செயல்பட முடியும். நிதி நிலையை பொறுத்தவரை கொஞ்சம் கொஞ்சமாக தற்போது வளர்ச்சி உள்ளது. ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்ற பாகுபாடு இன்றி அனைவரும் கடமையை ஆற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Indigo Flights: போச்சா.. நாங்க ரெடி என அறிவித்த இண்டிகோ விமான நிறுவனம்.. 10% ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு
Indigo Flights: போச்சா.. நாங்க ரெடி என அறிவித்த இண்டிகோ விமான நிறுவனம்.. 10% ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு
KKR IPL: சீன் போட்ட வெங்கடேஷ் அய்யர்? கொல்கத்தா அணியில் ஒப்பந்தம்? பயிற்சியாளர் உடைத்த உண்மைகள்
KKR IPL: சீன் போட்ட வெங்கடேஷ் அய்யர்? கொல்கத்தா அணியில் ஒப்பந்தம்? பயிற்சியாளர் உடைத்த உண்மைகள்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Indigo Flights: போச்சா.. நாங்க ரெடி என அறிவித்த இண்டிகோ விமான நிறுவனம்.. 10% ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு
Indigo Flights: போச்சா.. நாங்க ரெடி என அறிவித்த இண்டிகோ விமான நிறுவனம்.. 10% ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு
KKR IPL: சீன் போட்ட வெங்கடேஷ் அய்யர்? கொல்கத்தா அணியில் ஒப்பந்தம்? பயிற்சியாளர் உடைத்த உண்மைகள்
KKR IPL: சீன் போட்ட வெங்கடேஷ் அய்யர்? கொல்கத்தா அணியில் ஒப்பந்தம்? பயிற்சியாளர் உடைத்த உண்மைகள்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
Embed widget