மேலும் அறிய

நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை வெளியில் வருவதை தவிருங்கள் - சேலம் ஆட்சியர் அறிவுறுத்தல்

மோர், இளநீர், உப்பு மற்றும் மோர் கலந்த அரிசிக் கஞ்சி, உப்பு கலந்த எலுமிச்சை பழச்சாறு ஆகியவற்றைப் பருகலாம்.

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இந்த ஆண்டு கோடை வெப்பத்தில் தாக்கம் அதிக அளவில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் 100 டிகிரிக்கு மேல் இருந்து வருகிறது. சூரியன் உதயமானது காலை 5:30 மணிக்கு தோன்றுகிறது. காலை 11 மணி முதல் மதியம் 4 மணி வரை வெயிலில் தாக்கும் மிகவும் அதிகரித்து உள்ளது. இது மட்டும் இன்றி காற்றில் வெப்பம் அதிக அளவில் உள்ளது வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வைக்கின்றனர். பள்ளி மற்றும் கல்லூரிகளில் தேர்வுகள் நடைபெற்று வருவதால் மாணவர்களுக்கு அரை நாள் மட்டுமே பள்ளி செயல்படுகிறது. காலை பள்ளிக்கு வரும் மாணவர்கள் மதியமும், மதியம் பள்ளிக்கு வரும் மாணவர்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று வெயிலில் அளவு 105.08 டிகிரியாக பதிவாகி இருந்தது. இன்று 106.1 டிகிரியாக பதிவாகியுள்ளது.

நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை வெளியில் வருவதை தவிருங்கள் - சேலம் ஆட்சியர் அறிவுறுத்தல்

நாளுக்குநாள் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, கோடை வெயில் அதிகரித்துவரும் சூழ்நிலையில் அவசிய காரணங்கள் தவிர நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை வெளியில் வருவதைத் தவிர்த்தல் வேண்டும். அவசிய காரணங்களால் வெளியே செல்லும் பயணத்தின்போது குடிநீர் பாட்டில் எடுத்துச் செல்ல வேண்டும். தேவையில்லாமல் வெயிலில் வெளியே செல்வதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். மேலும், வியர்வை எளிதாக வெளியேறும் வகையில் மிருதுவான, தளர்ந்த, கற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும் என்றும், திறந்த வெளியில் வேலை செய்யும் போது தலையில் பருத்தி துணி அல்லது துண்டு அணிந்து வேலை செய்ய வேண்டும். கடினமாக வேலை செய்யும் போது களைப்பாக இருந்தால் நிழலில் சற்று ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். சூரிய வெப்பம் அதிகமாக உள்ள திறந்த வெளியில் வேலை செய்யும் போது களைப்பு, தலைவலி, தலைசுற்றல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், உடனடியாக வெப்பம் குறைவாக உள்ள குளிர்ந்த இடத்திற்குச் செல்லலாம். மயக்கம், உடல் சோர்வு, அதிக அளவு தாகம், தலைவலி, கால், மணிக்கட்டு அல்லது அடி வயிற்றில் வலி ஏற்பட்டால் அருகிலுள்ள நபரை உதவிக்கு அழைக்கலாம். மிகவும் சோர்வாகவோ, மயக்கமாகவோ இருந்தால் 108 ஆம்புலன்சை மருத்துவ உதவிக்கு அழைக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை வெளியில் வருவதை தவிருங்கள் - சேலம் ஆட்சியர் அறிவுறுத்தல்

மேலும், கோடை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள அதிக அளவிலான நீர் பருக வேண்டும். தாகம் இல்லை என்றாலும் போதிய அளவிலான நீர் பருக வேண்டும். சூடான பானங்கள் பருகுவதைத் தவிர்க்கவும். அதிக அளவில் மோர், இளநீர், உப்பு மற்றும் மோர் கலந்த அரிசிக் கஞ்சி, உப்பு கலந்த எலுமிச்சை பழச்சாறு ஆகியவற்றைப் பருகலாம். குறிப்பாக, கோடைகாலத்தில் குளிர்ந்த நீரால் குளிப்பது மிகுந்த நன்மையை அளிக்கும். சூரிய ஒளி நேரடியாக படும் ஜன்னல் மற்றும் கதவுகள் ஆகியவற்றை திரைச்சீலைகளால் மூட வேண்டும். இரவு நேரங்களில் குளிர்ந்த காற்று வருமாறு ஜன்னல்களைத் திறந்து வைத்துக் கொள்ளலாம். வாகனங்களுக்குள் குழந்தைகளை விட்டுச் செல்லுதலைத் தவிர்க்க வேண்டும். மேலும், வெயில் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆஸ்பிரின் மற்றும் பாராசிட்டமால் மாத்திரைகளைக் கொடுக்கக் கூடாது. குறிப்பாக, மது அருந்துதல் மற்றும் கேஸ் நிரப்பப்பட்ட குளிர் பானங்களை அருந்துதல், அளவுக்கு அதிகமான தேனீர் மற்றும் காபி அருந்துதல், அதிக அளவில் இனிப்பு சேர்க்கப்பட்ட பானங்கள் அருந்துவதைத் தவிர்த்திட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

செம வாசம்! சேலத்தில் ஆடிப் பிறப்பையொட்டி தேங்காய் சுட்ட மக்கள்! இதன் பின்னணியில் இருக்கும் ரகசியம் என்ன?
செம வாசம்! சேலத்தில் ஆடிப் பிறப்பையொட்டி தேங்காய் சுட்ட மக்கள்! இதன் பின்னணியில் இருக்கும் ரகசியம் என்ன?
மேட்டூர் அருகே மெய்சிலிர்க்க வைக்கும் வரலாற்று பொக்கிஷம்! காவிரி கரையில் பூமிக்கு அடியில் 3,600 ஆண்டுகால மர்மம் உடைந்தது!
மேட்டூர் அருகே மெய்சிலிர்க்க வைக்கும் வரலாற்று பொக்கிஷம்! காவிரி கரையில் பூமிக்கு அடியில் 3,600 ஆண்டுகால மர்மம் உடைந்தது!
பாமகவில் மீண்டும் பூகம்பம்; ராமதாஸ் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறார்? - போட்டுடைத்த பாமக முன்னாள் எம்.எல்.ஏ
பாமகவில் மீண்டும் பூகம்பம்; ராமதாஸ் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறார்? - போட்டுடைத்த பாமக முன்னாள் எம்.எல்.ஏ
'இஎஸ்ஐ, பிஎஃப் கேட்கக்கூடாது’ ரூ.100 பத்திரத்தில் எழுதி வாங்கிக் கொள்ளும் கொத்தடிமை முறை - தூய்மை பணியாளர்களுக்கு நடக்கும் கொடுமை
'இஎஸ்ஐ, பிஎஃப் கேட்கக்கூடாது’ ரூ.100 பத்திரத்தில் எழுதி வாங்கிக் கொள்ளும் கொத்தடிமை முறை - தூய்மை பணியாளர்களுக்கு நடக்கும் கொடுமை

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iraq Vs Donald Trump: 'ட்ரம்ப்பை கொல்பவருக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி'; ஈராக்கிய பயங்கரவாதக் குழு அதிரடி அறிவிப்பு
'ட்ரம்ப்பை கொல்பவருக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி'; ஈராக்கிய பயங்கரவாதக் குழு அதிரடி அறிவிப்பு
Udhayanithi Stalin:
Udhayanithi Stalin: "லட்சக்கணக்கான இளைஞர்கள் ஏமாற்றம்.." காவலர் நியமனம் ஒத்திவைப்பிற்கு உதயநிதி கண்டனம்
செடான் கார்களில் பின்புற வைப்பர் ஏன் இல்லை? அறிவியல், வடிவமைப்பு ரகசியம்
செடான் கார்களில் பின்புற வைப்பர் ஏன் இல்லை? அறிவியல், வடிவமைப்பு ரகசியம்
CM Vijay: அமைச்சர்களுக்கு கட்டுப்பட மறுக்கும் அதிகாரிகள்..? அடுத்த ஆக்ஷனுக்கு ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
CM Vijay: அமைச்சர்களுக்கு கட்டுப்பட மறுக்கும் அதிகாரிகள்..? அடுத்த ஆக்ஷனுக்கு ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
US Iran War: பின்னி பெடலெடுக்கும் ஈரான்! அமெரிக்க போர் விமானங்கள், ஜோர்டான் விமானப்படை தளம் அழிப்பு என அறிவிப்பு
பின்னி பெடலெடுக்கும் ஈரான்! அமெரிக்க போர் விமானங்கள், ஜோர்டான் விமானப்படை தளம் அழிப்பு என அறிவிப்பு
MG Motor NEV Architecture: டாடா, மஹிந்திராவின் தூக்கத்தை கெடுக்கப் போகும் எம்ஜி; EV, Hybrid கார்களில் புதிய தொழில்நுட்பம்; அது என்ன.?
டாடா, மஹிந்திராவின் தூக்கத்தை கெடுக்கப் போகும் எம்ஜி; EV, Hybrid கார்களில் புதிய தொழில்நுட்பம்; அது என்ன.?
Best Speed for Car Mileage: ‘மைலேஜை தீர்மானிக்கும் வேகம்‘; எந்த வேகத்தில் கார் ஓட்டினால் அதிகபட்ச மைலேஜ் கிடைக்கும் தெரியுமா.?
‘மைலேஜை தீர்மானிக்கும் வேகம்‘; எந்த வேகத்தில் கார் ஓட்டினால் அதிகபட்ச மைலேஜ் கிடைக்கும் தெரியுமா.?
Vanni Arasu:
Vanni Arasu: "ரூ.154 கோடியை ரிலீஸ் பண்ணுங்க..." ராம்தாஸ் அத்வாலேவிற்கு வன்னி அரசு நேரில் மனு!
Embed widget