மேலும் அறிய

Thunivu Theatre Chaos : ’தான் பண்ண விஷயம் தனக்கே..’ பதறிய ரசிகர்கள்.. சேலத்தில் துணிவு படம் பார்க்க வந்த ரசிகருக்கு ஏற்பட்ட சோகம்...

அவர் உடைத்த கண்ணாடியின் ஒரு பகுதி அவரது வலது காலில் ஆழமான காயத்தை உண்டாக்கியது.

நடிகர் அஜித் குமார் நடித்துள்ள துணிவு திரைப்படம் இன்று அதிகாலை ஒரு மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி சேலம் மாவட்டத்தில் இன்று அதிகாலை ஒரு மணிக்கு 12 திரையரங்குகளில் துணிவு திரைப்படம் திரையிடப்பட்டது. முன்னதாக நேற்று இரவு 10 மணிக்கு திரையரங்குகளில் குவிந்த அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக சேலம் ஏஆர்ஆர்எஸ் மல்டிபிளக்ஸ் திரையரங்கில் 5 திரைகளிலும் துணிவு படம் அதிகாலை ஒரு மணிக்கு வெளியிடப்படும் என அறிவித்திருந்தனர். இதனை அறிந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட அஜித் ரசிகர்கள் காவல்துறையின் அனுமதி இன்றி பட்டாசுகளை வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

Thunivu Theatre Chaos : ’தான் பண்ண விஷயம் தனக்கே..’ பதறிய ரசிகர்கள்.. சேலத்தில் துணிவு படம் பார்க்க வந்த ரசிகருக்கு ஏற்பட்ட சோகம்...

இதனிடையே, சேலம் மாவட்டம் சித்தனுர் பகுதியைச் சேர்ந்த குமார் (20) என்ற இளைஞர் தனது 40 நண்பர்களுடன் ஏஆர்ஆர்எஸ் திரையரங்கிற்கு வந்துள்ளார். அப்போது மது போதையில் இருந்த குமார் நண்பர்களுடன் திரையரங்கம் அமைந்துள்ள சாலையில் நடனம் ஆடிக் கொண்டிருந்தார். திரையரங்கில் கதவினை திறந்தவுடன் அனைவரும் உள்ளே சென்றனர். அப்போது மது போதையில் அங்கிருந்த கண்ணாடி ஒன்றை தனது கையால் குமார் உடைத்தார். அங்கிருந்து ரசிகர்களின் கூட்ட நெரிசலில் கீழே விழுந்த குமார் காலில் அவர் உடைத்த கண்ணாடியின் ஒரு பகுதி அவரது வலது காலில் ஆழமான காயத்தை உண்டாக்கியது. பின்னர் அங்கிருந்த குமாரின் நண்பர்கள் இருசக்கர வாகனத்தில் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். காலில் ஆழமான காயம் ஏற்பட்டதால் ரத்தப்போக்கு ஏற்பட்டு குமார் சுயநினைவின்றி சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் துணிவு படம் பார்க்க வந்த அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Thunivu Theatre Chaos : ’தான் பண்ண விஷயம் தனக்கே..’ பதறிய ரசிகர்கள்.. சேலத்தில் துணிவு படம் பார்க்க வந்த ரசிகருக்கு ஏற்பட்ட சோகம்...

இந்த நிலையில் படம் ரிலீஸ் ஆகும் சமயத்தில் ரசிகர்கள் இடையே தகராறு ஏற்படக்கூடாது என்பதற்காக காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி, தியேட்டர் வளாகத்திலும், பொது இடங்களிலும் மேளம் அடித்துக் கொண்டு, ஊர்வலமாக சென்று பொது மக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு செய்யக்கூடாது. சினிமா பார்க்க வரும் பொதுமக்களுக்கு தொல்லை தரக் கூடாது. சினிமா தியேட்டருக்குள் வரும் ரசிகர்கள் எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்களை எதையும் எடுத்து வரக்கூடாது. குடிபோதையில் தியேட்டருக்கு வரக்கூடாது. மேடை மீது ஏறி ஆட்டம் போடக்கூடாது. தியேட்டரில் பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டால் ரசிகர் மன்றங்களே பொறுப்பேற்க வேண்டும். அதற்குரிய இழப்பீடு தர வேண்டும். ரசிகர்மன்ற காட்சிகள் திரையிடும்போது ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு சம்பந்தப்பட்ட ரசிகர் மன்றங்களே பொறுப்பேற்க வேண்டும்.

ரசிகர்களை ஒழுங்குபடுத்த போதுமான தன்னார்வலர்களை ரசிகர் மன்றத்தினர் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் நியமிக்க வேண்டும் என்றும் காவல்துறையினர் தரப்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 

இதற்கு முந்தைய காலங்களில் விஜய் மற்றும் அஜித் குமார் திரைப்படங்கள் தனித்தனியே வெளியான போது ரசிகர்கள் திரையரங்கம் கண்ணாடி, கதவுகள் போன்றவற்றிற்கு சேதங்களை ஏற்படுத்தினர். எனவே இந்த முறை காவல்துறையினர் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டுப்பாடுகளை ரசிகர் மன்றம் பொறுப்பாளர்களிடம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

PIT BULL , ROTTWEILLER DOG: பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
Country Chicken : ‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
BS6 Vs BS5 Vs BS4: கார்களுக்கு விதிக்கப்பட்ட தடை.. BS6 Vs BS5 Vs BS4 என்ன வித்தியாசம்? ஏன் அவசியம்?
BS6 Vs BS5 Vs BS4: கார்களுக்கு விதிக்கப்பட்ட தடை.. BS6 Vs BS5 Vs BS4 என்ன வித்தியாசம்? ஏன் அவசியம்?
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PIT BULL , ROTTWEILLER DOG: பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
Country Chicken : ‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
BS6 Vs BS5 Vs BS4: கார்களுக்கு விதிக்கப்பட்ட தடை.. BS6 Vs BS5 Vs BS4 என்ன வித்தியாசம்? ஏன் அவசியம்?
BS6 Vs BS5 Vs BS4: கார்களுக்கு விதிக்கப்பட்ட தடை.. BS6 Vs BS5 Vs BS4 என்ன வித்தியாசம்? ஏன் அவசியம்?
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
Car Price Hike: ரெண்டே வாரம்.. கிடுகிடுவென உயரப்போகும் விலை, எந்தெந்த ப்ராண்ட், கார்களுக்கு தெரியுமா?
Car Price Hike: ரெண்டே வாரம்.. கிடுகிடுவென உயரப்போகும் விலை, எந்தெந்த ப்ராண்ட், கார்களுக்கு தெரியுமா?
தமிழ் கலை ஆசிரியர்கள் பணி: ரூ.1.25 லட்சம் ஊதியம்- என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
தமிழ் கலை ஆசிரியர்கள் பணி: ரூ.1.25 லட்சம் ஊதியம்- என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget