மேலும் அறிய

தருமபுரியில் கம்பு விளைச்சல் அதிகரிப்பு-பறவைகளை விரட்ட குடில் அமைத்து சத்தமிடும் பள்ளி மாணவர்கள்...!

’’கொரோனா விடுமுறையால், தங்களது பெற்றவர்களுக்கு உறுதுணையாக, காலை, மாலை இரு வேலைகளில் கம்பங்கொல்லையில் உயரமாக குடில் அமைத்து சத்தமிட்டு பறவைகளை விரட்டி வருகின்றனர்’’

தருமபுரி மாவட்டம் வானம் பார்த்த பூமியாக மானாவாரி பயிர்களை விவசாயிகள் அதிகமாக சாகுபடி செய்து வருகின்றனர். தமிழகத்திலேயே சிறு தானிய உற்பத்தியில் சிறப்பு வாய்ந்த மாவட்டம் என்ற பெயர் தருமபுரி மாவட்டத்திற்கு உண்டு. தருமபுரி மாவட்டத்தில் சோளம், ராகி, தினை, குதிரைவாலி, மக்காச்சோளம், கம்பு உள்ளிட்ட சிறு தானிய வகைகளை விவசாயிகள் அதிகப்படியாக சாகுபடி செய்து வருகின்றனர்.
 
தருமபுரியில் கம்பு விளைச்சல் அதிகரிப்பு-பறவைகளை விரட்ட குடில் அமைத்து சத்தமிடும் பள்ளி மாணவர்கள்...!
 
இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம், காரிமங்கலம், பாப்பிரெட்டிப்பட்டி  அரூர் உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில், விவசாயிகள் கம்பு சாகுபடி செய்துள்ளனர். கடந்த இரண்டு மாத காலமாக தருமபுரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதால், தற்போது கம்பு விளைச்சல் அமோகமாக உள்ளது. மேலும் கடந்த ஆண்டை விட, இந்தாண்டு மகசூல் அதிகமாகவும் கிடைத்துள்ளது.
 
தருமபுரியில் கம்பு விளைச்சல் அதிகரிப்பு-பறவைகளை விரட்ட குடில் அமைத்து சத்தமிடும் பள்ளி மாணவர்கள்...!
 
இந்நிலையில் கம்பு, சோளம் உள்ளிட்ட பயிர்களில், மகசூல் வைத்து கதிர் அறுவடைக்கு வரும் நேரத்தில் பறவைகள் வந்து கொறித்தது போக, மீதமுள்ளவை தான் விவசாயிகளுக்கு கிடைக்கும். இதனால் கம்பு விவசாயிகளுக்கு   மிகவும் பேரிழப்பு ஏற்படுவதாக தெரிவித்தனர். இதனால் இறைக்காக பறவைகள் வந்து செல்வதை தடுக்க, பறவைகளை விரட்டுவதற்காக விவசாயிகள், சோளம், கம்பு சாகுபடி செய்துள்ள வயல்களை சுற்றிலும், காற்றடித்தால் அசைந்து சத்தம் போடும் வகையில், இரண்டு பழைய சில்வர் தட்டுகளை வைப்பது, காலி வாட்டர் பாட்டில்களை வரிசையாக கட்டுதல், ஒலி நாடாக்களை கட்டுவது உள்ளிட்ட பல்வேறு உத்திகளை கையாண்டு வருகின்றனர்.
 
இந்நிலையில் அரூர் பகுதியில் நல்ல மகசூலுடன் அறுவடைக்கு தயாராக உள்ள கம்பங்கொல்லையில் சிட்டுக் குருவிகள், மைனா, பச்சைக்கிளி உள்ளிட்ட பறவைகள் தானியங்களை கொறித்து செல்கின்றனர். இதனால் விவசாயிகளுக்கு மகசூல் குறைவதால், அறுவடைக்கு தயாராக உள்ள கம்பங்கொல்லையில் விவசாயிகள் சத்தமிட்டு, இறைக்காக வரும் பறவைகளை விரட்டி வருகின்றனர்.
 
தருமபுரியில் கம்பு விளைச்சல் அதிகரிப்பு-பறவைகளை விரட்ட குடில் அமைத்து சத்தமிடும் பள்ளி மாணவர்கள்...!
 
இந்நிலையில் கொரோனா விடுமுறையால், தங்களது பெற்றவர்களுக்கு உறுதுணையாக, காலை, மாலை இரு வேலைகளில் அதிகப்படியான பறவைகள் வருவதால், பள்ளி மாணவர்கள் கம்பங்கொல்லையில் உயரமாக குடில் அமைத்து, சிறு சிறு பிளாஸ்டிக் கேன்களை வைத்து தட்டியும், சத்தமிட்டும் பறவைகளை விரட்டி வருகின்றனர். தொடர்ந்து வெயில் அடிக்கும் போது பறவைகள் வருகை குறைந்து விடும். அந்த நேரங்களில், இணைய தளம் மூலம் பள்ளியில் ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை, எழுதுதல், படித்தல் போன்ற படிப்பு தொடர்பான வேலைகளையும் செய்து வருகின்றனர். இந்த பணி மாணவர்களுக்கு பொதுபோக்காகவும், பெற்றோருக்கு உதவியாகவும்  இருப்பதாக, மாணவர்கள் தெரிவிக்கின்றனர். இதேப்போல் தருமபுரி மாவட்டம் முழுவதுமுள்ள விவசாயிகளும் கம்பு, சோளக் கதிர்களை கொறிக்க வரும் பறவைகளை சத்தம் போட்டு விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN TET 2026: சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்; எப்படி? என்ன தகுதி? முக்கிய தேதிகள்!
TN TET 2026: சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்; எப்படி? என்ன தகுதி? முக்கிய தேதிகள்!
வெளிநாடு கனவு நனவாகும்! ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை & பல திட்டங்கள்: ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு தமிழக அரசின் சாதனை!
வெளிநாடு கனவு நனவாகும்! ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை & பல திட்டங்கள்: ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு தமிழக அரசின் சாதனை!
Metro Rail: கோவை, மதுரைக்கான மெட்ரோ திட்டம் என்ன? எத்தனை ஆயிரம் கோடிகள் பட்ஜெட்? எவ்வளது தூரம் - விவரங்கள்
Metro Rail: கோவை, மதுரைக்கான மெட்ரோ திட்டம் என்ன? எத்தனை ஆயிரம் கோடிகள் பட்ஜெட்? எவ்வளது தூரம் - விவரங்கள்
காதலிக்க மறுத்த மாணவி படுகொலை: தமிழ்நாட்டில் சமூக விரோதிகளுக்குத்தான் பாதுகாப்பு- அன்புமணி கண்டனம்
காதலிக்க மறுத்த மாணவி படுகொலை: தமிழ்நாட்டில் சமூக விரோதிகளுக்குத்தான் பாதுகாப்பு- அன்புமணி கண்டனம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL
Saudi Bus Accident | 42 இந்தியர்கள் பலி!விபரீதமாய் முடிந்த ஹஜ் பயணம்சவுதி அரேபியாவில் பயங்கரம்
Vaithiyalingam joins ADMK| ”வாங்க வைத்திலிங்கம்”EPS கொடுத்த அசைன்மெண்ட்அதிமுகவின் டெல்டா கணக்கு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN TET 2026: சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்; எப்படி? என்ன தகுதி? முக்கிய தேதிகள்!
TN TET 2026: சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்; எப்படி? என்ன தகுதி? முக்கிய தேதிகள்!
வெளிநாடு கனவு நனவாகும்! ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை & பல திட்டங்கள்: ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு தமிழக அரசின் சாதனை!
வெளிநாடு கனவு நனவாகும்! ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை & பல திட்டங்கள்: ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு தமிழக அரசின் சாதனை!
Metro Rail: கோவை, மதுரைக்கான மெட்ரோ திட்டம் என்ன? எத்தனை ஆயிரம் கோடிகள் பட்ஜெட்? எவ்வளது தூரம் - விவரங்கள்
Metro Rail: கோவை, மதுரைக்கான மெட்ரோ திட்டம் என்ன? எத்தனை ஆயிரம் கோடிகள் பட்ஜெட்? எவ்வளது தூரம் - விவரங்கள்
காதலிக்க மறுத்த மாணவி படுகொலை: தமிழ்நாட்டில் சமூக விரோதிகளுக்குத்தான் பாதுகாப்பு- அன்புமணி கண்டனம்
காதலிக்க மறுத்த மாணவி படுகொலை: தமிழ்நாட்டில் சமூக விரோதிகளுக்குத்தான் பாதுகாப்பு- அன்புமணி கண்டனம்
Airplane: விமானங்கள் இரவில் சிவப்பு, மஞ்சள், பச்சை விளக்குகளில் ஒளிர்வது ஏன்? காரணம் தெரியுமா?
Airplane: விமானங்கள் இரவில் சிவப்பு, மஞ்சள், பச்சை விளக்குகளில் ஒளிர்வது ஏன்? காரணம் தெரியுமா?
RE Shotgun 650 : ஷாட்கன் 650 பைக் வாங்க திட்டமா? இந்த விஷயங்கள் தெரியாமா முடிவு பண்ணாதிங்க - டீடெய்ல் லிஸ்ட்
RE Shotgun 650 : ஷாட்கன் 650 பைக் வாங்க திட்டமா? இந்த விஷயங்கள் தெரியாமா முடிவு பண்ணாதிங்க - டீடெய்ல் லிஸ்ட்
Salary Hike: குஷியோ குஷி.! ரூ.12 ஆயிரத்திலிருந்து 18ஆயிரமாக ஊதியம் அதிகரிப்பு.! ஊழியர்கள் கொண்டாட்டம்
குஷியோ குஷி.. இரண்டு மடங்காக உயர்ந்த ஊதியம் .! ஊழியர்கள் கொண்டாட்டம்- யாருக்கெல்லாம் தெரியுமா.?
மதுரைக்கும், கோவைக்கும்
மதுரைக்கும், கோவைக்கும் "NO METRO"... பாஜகவின் பழிவாங்கும் சதியை முறியடிப்போம்- சீறும் மு.க.ஸ்டாலின்
Embed widget