![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Mannargudi Jeeyar: இஸ்லாமிய, கிறிஸ்துவ ஆலயங்களை தமிழக அரசின் அறநிலைத்துறை கீழ் கொண்டு வர முடியுமா? -மன்னார்குடி ஜீயர் கேள்வி
இந்து தர்மத்திற்காக அயராது உழைத்து வரும் பிரதமர் நரேந்திர மோடி 3 வது முறை மட்டுமல்ல தொடர்ந்து பிரதமராக நீடிப்பார் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
![Mannargudi Jeeyar: இஸ்லாமிய, கிறிஸ்துவ ஆலயங்களை தமிழக அரசின் அறநிலைத்துறை கீழ் கொண்டு வர முடியுமா? -மன்னார்குடி ஜீயர் கேள்வி Mannarkudi Jeeyar says Is it possible to bring Islamic and Christian temples under the Aranilayathurai department of TN govt - TNN Mannargudi Jeeyar: இஸ்லாமிய, கிறிஸ்துவ ஆலயங்களை தமிழக அரசின் அறநிலைத்துறை கீழ் கொண்டு வர முடியுமா? -மன்னார்குடி ஜீயர் கேள்வி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/14/139bfbd86b698186c514bcc6af0cad331718354783153113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
காஞ்சிபுரத்தை சேர்ந்த தனியார் ஜவுளிக்கடையின் கிளை திறப்பு விழா இன்று சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. இந்த திறப்பு விழா நிகழ்வில் மன்னார்குடி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சென்டலங்கார சம்பத் குமார் ராமானுஜர் ஜீயர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டியும், குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து கடைகளில் உள்ள காஞ்சிபுரம் சில்க்ஸ் பட்டு சேலைகளை பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மன்னார்குடி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ராமானுஜ ஜீயர் கூறும்போது, "தமிழகத்தில் இந்து கோயில்கள் அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது ஆனால் இஸ்லாமிய, கிருத்துவ, தேவாலயங்கள் அறநிலையில் துறை கட்டுப்பாட்டில் இல்லை. தற்போது உள்ள திமுக அரசுக்கு தெம்பும், திராணியும் இருந்தால் அறநிலைத்துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்றார்.
ஒவ்வொரு முறையும் அனைவருக்கும் சமம், எல்லோருக்கும் எல்லாமும் என கூறிவரும் திமுக அரசு இந்துக்களுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது. மேலும், இந்து கோவில்களை மட்டும் அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது இந்துக்களுக்கு அவமானம் என தெரிவித்தார். இஸ்லாமிய, கிருத்துவ தேவாலயங்களை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியவில்லை எனில் இந்து கோவில்களை அறநிலையத்துறையிடமிருந்து விடுவிக்க வேண்டும் என்று கூறினார். தமிழகம் முழுவதும் உள்ள திருக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், இதை அரசு பணத்தில் செய்யாமல் கோவில்களுக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் பணத்தை வைத்து கும்பாபிஷேக விழாவை நடத்தி வருகின்றனர். இந்து சமய அறநிலையத்துறையில் நிறைய ஊழல்கள் நடந்துள்ளது என குற்றம் சாட்டினர்.
மேலும், இந்தியாவில் 3 வது முறையாக மோடி பதவியேற்று உள்ளது வரவேற்கத்தக்கது. இந்து தர்மத்தை நிலை நாட்ட கூடிய மோடி தொடர்ந்து நீடிக்க வேண்டும். இந்து தர்மத்திற்காக அயராது உழைக்கும் நரேந்திர மோடி மூன்றாவது முறை மட்டுமல்ல தொடர்ந்து பிரதமராக நீடிப்பார் என தெரிவித்தார். மேலும் திமுக அரசு இந்துக்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்து இந்து விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் தேர்தலின் போது இந்துக்களை விரிவாக பேசும் தலைவர்கள் கோவில் கோவிலாக சுற்றி வருகின்றனர் என என விமர்சனம் செய்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)