மேலும் அறிய

கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு வரும் காவிரி நீர்- 14,000 கன அடியில் இருந்து 16,000 ஆக அதிகரிப்பு

’’நேற்று மாலை வினாடிக்கு 14,000 கன அடியாக நீர்வரத்து உயர்ந்தது. இந்நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 16,000 கன அடியாக அதிகரித்தது’’

கர்நாடக அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் முழு கொள்ளளவை எட்டி வருகிற நிலையில் அணைகளின் பாதுகாப்பு கருதி  தமிழகத்திற்கு வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு கடந்த இரு தினங்களுக்கு முன்பு 17,651 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. கிருஷ்ணராஜசாகர் அணையின் மொத்த கொள்ளளவான 124.80 அடியில் தற்போது 116.44 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு நீர்வரத்து 15,730 கன அடியாக உள்ள நிலையில் விநாடிக்கு 10,900 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கபினி அணையின் மொத்த கொள்ளளவான 84 அடியில் தற்போது 83.45 அடியாக நீர்மட்டம் உள்ளது.  அணைக்கு நீர்வரத்து 12,000 கன அடியாக உள்ள நிலையில் அணைக்கு வரும் நீரை அப்படியே வெளியேற்றப்பட்டுள்ளது. இதனால் நேற்று காலை நிலவரப்படி கர்நாடக அணைகளிலிருந்து, காவிரி ஆற்றில் வினாடிக்கு 22,900 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு வரும் காவிரி நீர்- 14,000 கன அடியில் இருந்து 16,000 ஆக அதிகரிப்பு  
இதனை தொடர்ந்து தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து கடந்த 10 நாட்களாக குறைந்து வந்தது.  நேற்று காலை வினாடிக்கு 9,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, படிப்படியாக அதிகரித்தது. நேற்று மாலை வினாடிக்கு 14,000 கன அடியாக நீர்வரத்து உயர்ந்தது. இந்நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 16,000 கன அடியாக அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல் மெயினருவி, சினியருவி, ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி, பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளித்து வருகிறது.
 
ஆனால் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா காரணமாக ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் அருவிகளில் அழகை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் இல்லாமல், வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் கர்நாடக அணைகளிலிருந்து வினாடிக்கு 22,900 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், படிப்படியாக நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் தொடர்ந்து நீர்வரத்து குறித்து  மத்திய நீர்வள ஆணைய அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு வரும் காவிரி நீர்- 14,000 கன அடியில் இருந்து 16,000 ஆக அதிகரிப்பு
 
கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட இந்த தண்ணீர் இன்று மாலைக்குள் தமிழக எல்லையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால், நீர்திறப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக சரிந்து வந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் உயர வாய்ப்புள்ளது. இதனால் டெல்டா மாவட்டத்திற்கு தேவையான தண்ணீரை  திறக்கவும் வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் நடைபெறும் குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் 12ஆம் தேதி நீரானது திறக்கப்பட்டது. 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Savukku shankar: வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
Savukku Shankar: எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
EPS ADMK: அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
OPS vs EPS: கை விட்ட பாஜக.! கடைசி சான்ஸும் அவுட்... ஓபிஎஸ் போட்ட புதிய பிளான்.?
கை விட்ட பாஜக.! கடைசி சான்ஸும் அவுட்... வேறு வழியில்லாமல் ஓபிஎஸ் போட்ட புதிய பிளான்.?
ABP Premium

வீடியோ

Kaliyammal Joins TVK | காளியம்மாளுக்கு மகளிரணி? டிக் அடித்த விஜய்! குஷியில் தவெகவினர்! | NTK | Vijay
Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Savukku shankar: வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
Savukku Shankar: எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
EPS ADMK: அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
OPS vs EPS: கை விட்ட பாஜக.! கடைசி சான்ஸும் அவுட்... ஓபிஎஸ் போட்ட புதிய பிளான்.?
கை விட்ட பாஜக.! கடைசி சான்ஸும் அவுட்... வேறு வழியில்லாமல் ஓபிஎஸ் போட்ட புதிய பிளான்.?
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
Embed widget