மேலும் அறிய

ஓராண்டுக்கு பிறகு ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி

’’வெப்பம் அதிகரித்து வருவதால், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என்பதால், ஒகேனக்கல் சுற்றுலா தலத்தை நம்பியுள்ள தொழிலாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி’’

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து, ஆயில் மசாஜ் செய்தும், அருவியில் குளித்தும், பரிசல் சென்று அருவிகளின் அழகை கண்டு ரசித்து விட்டு செல்வது வழக்கம். இந்நிலையில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் அந்தந்த மாவட்ட நிர்வாக உத்தரவின் பேரில் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்தது. 
 

ஓராண்டுக்கு பிறகு ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி
 
இதனை தொடர்நது கடந்த ஓராண்டுக்கு முன்பு கொரோனா தொற்று அதிகமாக பரவியிருந்தது.  இதனால் மாவட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டது. அப்போது ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து தொற்று குறைந்ததால் தமிழக அரசு பல்வேறு தளர்வுகள் வழங்கியது. இந்த நிலையில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு சுற்றுலா பயணிகளுக்கு தொற்றுக்கு பாதிக்காத வகையில்,  சுற்றுலாப் பயணிகள் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும் எனவும் ஆற்றிலும் அருவி பகுதிகளிலும் குளிப்பதற்கு தடை விதித்து பல்வேறு நிபந்தனையுடன் சுற்றுலா தளம் செயல்பட்டு வந்தது. 
 

ஓராண்டுக்கு பிறகு ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி
 
 
தற்போது மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதால் சுற்றுலா பயணிகள் அருவியிலும், ஆற்று பகுதிகளிலும் குளிக்க மாவட்ட நிர்வாகம், அனுமதி வழங்கியுள்ளது. கடர்ந்த ஓராண்டிற்கு அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி என்ற அறிவிப்பால், சுற்றுலா பயணிகள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தற்போது வெப்பம் அதிகரித்து வருவதால், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என்பதால், ஒகேனக்கல் சுற்றுலா தலத்தை நம்பியுள்ள தொழிலாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 

 
வீட்டருகே இருந்த ஓலையில் தீ- தண்ணீர் ஊற்றி அணைத்து வாக்கு சேகரித்த திமுகவினர்
 

ஓராண்டுக்கு பிறகு ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி
 
தருமபுரி மாவட்டம் அரூர் வர்ணதீர்த்தம் பகுதியைச் சேர்ந்த அப்துல் என்பவர் வீட்டருகே அவரது நண்பர் ஒருவர் சுப நிகழ்ச்சிகளுக்கு, பந்தல் அமைப்பதற்காக சுமார் 500 தென்னங்கீற்று ஓலையை கொண்டு வந்து வைத்துள்ளார். இந்நிலையில் அந்த பகுதியில் தெருவில் இருந்த குப்பைகளுக்கு, யாரோ தீ வைத்துள்ளனர். அந்த தி காற்றின் திசையில் பரவி, அப்துல் என்பவர் வீட்டருகே இருந்த ஒலைகளின் மீது விழுந்து, தீப்பிடித்தது. இதனை அறிந்த அப்துல் வீட்டிலிருந்து தண்ணீர் எடுத்து வந்து, எரியும் நெருப்பை அணைக்க முயற்சி செய்தார்.
 

ஓராண்டுக்கு பிறகு ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி
 
அப்பொழுது அரூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து எம்.பி.செந்தில்குமார் திறந்த வேனில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்.  அந்த வழியாக அந்த திமுகவினர் ஓலை தீப்பிடித்து எரிவதை கண்டு உடனடியாக அந்தத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து வீட்டிலிருந்த தண்ணீரைக் கொண்டு வந்து தீ பரவாமல் முழுவதுமாக அணைத்தனர். இதனால் தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது. இந்த தீ கட்டுப்படுத்தப்பட்டதால், அருகில் இருந்த மக்கள் நிம்மதி அடைந்தனர்.

தலைப்பு செய்திகள்

சொந்த ஊரில் எடப்பாடி பழனிசாமி திடீர் தீவிர ஆலோசனை... சட்டமன்றத்தில் பேசப்போவது என்ன?
சொந்த ஊரில் எடப்பாடி பழனிசாமி திடீர் தீவிர ஆலோசனை... சட்டமன்றத்தில் பேசப்போவது என்ன?
‘புது நோய் வருது... மொட்டை அடிச்சா பணம் தருவோம்’ - மர்ம போன் காலை நம்பி ஏமாந்த பெண்கள்!
‘புது நோய் வருது... மொட்டை அடிச்சா பணம் தருவோம்’ - மர்ம போன் காலை நம்பி ஏமாந்த பெண்கள்!
நைலான் கயிறால் முடிந்த உயிர்! மனைவியை கொடூரமாகக் கொன்ற கணவன் - பின்னணி காரணம் என்ன?
நைலான் கயிறால் முடிந்த உயிர்! மனைவியை கொடூரமாகக் கொன்ற கணவன் - பின்னணி காரணம் என்ன?
ஏற்காடு மலைவாழ் கிராமத்தில் முதல் நீட் சாதனை! நிவேதாவின் மருத்துவக் கனவுக்கு அரசு உதவுமா?
ஏற்காடு மலைவாழ் கிராமத்தில் முதல் நீட் சாதனை! நிவேதாவின் மருத்துவக் கனவுக்கு அரசு உதவுமா?

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji : ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
Innova Crysta: பெருசு, சொகுசு… ரூ.6 லட்சம் முன்பணம் போதும்; இன்னோவா கிரிஸ்டாவை ஈஸியா EMI-ல் வாங்கலாம்- இதோ பிளான்
Innova Crysta: பெருசு, சொகுசு… ரூ.6 லட்சம் முன்பணம் போதும்; இன்னோவா கிரிஸ்டாவை ஈஸியா EMI-ல் வாங்கலாம்- இதோ பிளான்
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Ajinkya Rahane: 36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
Tata Harrier: டாடாவின் பாதுகாப்பான SUV யாருக்கு செட் ஆகாது? அப்படி என்ன குறை இருக்கு? மாற்று ஆப்ஷன்கள்?
டாடாவின் பாதுகாப்பான SUV யாருக்கு செட் ஆகாது? ஹாரியரில் என்ன குறை இருக்கு? மாற்று ஆப்ஷன்கள்
Ramayana Trailer: ரூ.4,000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
ரூ.4,000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
Super Speciality: DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
Chennai Corporation: CMDA வரிசையில் சென்னை மாநகராட்சி..! உச்சத்தில் கடன்சுமை, வருவாய் பற்றாக்குறை - அரசு உதவுமா?
CMDA வரிசையில் சென்னை மாநகராட்சி..! உச்சத்தில் கடன்சுமை, வருவாய் பற்றாக்குறை - அரசு உதவுமா?
Embed widget