மேலும் அறிய

Governor R.N.Ravi: "இளைஞர்கள் பணத்தை நோக்கி மட்டும் செல்லாமல், நெசவு தொழிலை அர்ப்பணிப்போடு தொடர வேண்டும்" - ஆளுநர் ஆர்.என்.ரவி

சேலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகை தந்துள்ள தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மேச்சேரியில் நெசவாளர் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

சேலம் மாவட்டம் மேச்சேரியில் சிறந்த நெசவாளர்களுக்கான விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக மேச்சேரி வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு நெசவாளர்கள் தரப்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து நெசவாளர்கள் சங்க பிரதிநிதிகளுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய நெசவாளர்கள் சேலம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் 15 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் நெசவுத் தொழில் ஈடுபட்டு வருவதாகவும், இதில் 73 சதவீதம் பேர் மகளிர் இருப்பதாகவும் கூறினார். மேலும் 30 ஆயிரம் பேர் மறைமுகமாக நெசவுத் தொழில் மூலம் பயனடைந்து வருவதாகவும் கூறினர். சேலம் பகுதி நெசவாளர்கள் மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்கள் பயனடையும் வகையில் சேலத்தில் ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். 

நெசவாளர்கள் தெரிவித்த கோரிக்கைகள் மீது மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதியளித்தார்.

Governor R.N.Ravi:

இதைத்தொடர்ந்து, மேச்சேரியில் அகில இந்திய கைத்தறி நெசவாளர்கள் நல சங்கம் சார்பில் நெசவாளர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் 50 ஆண்டுகளுக்கு மேலாக நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வரும் சிறந்த நெசவாளர்கள் 100 பேருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி விருதுகளை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர், மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறேன். மேச்சேரி கிராமத்தினர் அளித்த அன்பும், வரவேற்பும் மனதை நெகிழச் செய்து விட்டது. ஏன் இந்தப் பகுதிக்கு நீண்ட காலமாக வராமல் போய்விட்டதை நினைத்து வருந்துகிறேன். மனித நாகரீகத்தின் முதல் அடையாளமாக ஆடை திகழ்கிறது. அனைத்து மனிதர்களுக்கும் ஆடையளிக்கும் நெசவாளர்கள் மிகவும் முக்கியமானவர்கள். நான் மிகவும் பின்தங்கிய கிராமத்தில் இருந்து வந்திருக்கிறேன். கிராம மக்களின் நேர்மையான அன்பும் அக்கறையும் எப்படி இருக்கும் என்பது எனக்குத் தெரியும். மேச்சேரி கிராம மக்கள் அளித்த அன்பு என்னுடைய சிறுவயதில் கிராமத்தில் இருந்த உணர்வைத் தருகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாக ஜவுளிகளை உற்பத்தி செய்தவற்கும் உலகின் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதிலும் இந்திய நாடு முன்னோடியாக திகழ்கிறது. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவும் இந்தியாவில் இருந்து ஜவுளிப் பொருட்கள் பிறநாடுகளுக்கு வணிகம் செய்தது ரோம பேரரசின் குறிப்பில் உள்ளது. மிகப் பெரிய ரோமப் பேரரசு நம்முடன் விரும்பி வணிகம் செய்தது வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. 55 கோடி தங்க நாணயங்கள் கொடுத்து ஜவுளிப் பொருட்கள், பட்டு சேலைகளை வாங்கியுள்ளனர். 

Governor R.N.Ravi:

இன்றைக்கு நவநாகரீக காலத்தில் பல்வேறு மாற்றங்கள் நெசவாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. எனினும், பிரதமர் நரேந்திர மோடி கைத்தறி நெசவாளர்களின் நலன் மீது அக்கறை காட்டி வருகிறார். இளைஞர்கள் நெசவுத் தொழிலுக்கு வருவதற்கு ஆர்வமில்லாமல் இருப்பது எனக்குத் தெரியும். நெசவுத் தொழிலுக்கு ஈடாக உலகின் சிறந்த தொழில் இல்லை. நெசவாளர்களின் கைகளால் உருவாக்கப்படும் பொருட்களின் மனிதனின் மனதை நேரடியாக சென்றடைகிறது. இளைஞர்கள் பணத்தை நோக்கி மட்டும் செல்லாமல், இந்த தொழிலை அர்ப்பணிப்போடு தொடர வேண்டும். 

நெசவாளர்கள் உருவாக்கும் ஆடைகள் மனிதர்களுக்கு மட்டுமல்லாது கடவுளுக்கு பயன்படுகிறது. அத்தகைய நெசவாளர்கள் நிறைந்த மேச்சேரிக்கு வந்தது தெய்வீக அனுபவத்தை தருகிறது. நெசவாளர்களின் கோரிக்கைகள், பிரச்சினைகளுக்கான தீர்வுகள் குறித்து மத்திய அரசு மற்றும் அமைச்சர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு நெசவாளருக்கு விருது வழங்கும் போதும், அவர்களின் எளிமை, அர்ப்பணிப்பு, தொழிலில் நேர்மை எனக்கு தெய்வீக அனுபவத்தை வழங்கியுள்ளது. மேச்சேரி மக்கள் அளித்த அனுபவம் வாழ்நாள் முழுக்க மறக்க முடியாது என்று பேசினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"நாளை திருவண்ணாமலை கிரிவலம் வரவேண்டாம்” பக்தர்களுக்கு அறிவுறுத்தல்..!
சென்னை அருகே கரையை கடக்கிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்
சென்னை அருகே கரையை கடக்கிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்
TN Rain News LIVE: சென்னை அருகே கரையைக் கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் - எப்போது தெரியுமா..?
TN Rain News LIVE: சென்னை அருகே கரையைக் கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் - எப்போது தெரியுமா..?
நாளை எந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை தெரியுமா?
நாளை எந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chennai rain : வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு! அடுத்த 2 நாட்களுக்கு... வானிலை மையம் சொல்வது என்ன?Thamo Anbarasan : ”ஒன்னும் வேலை நடக்கலயே” ரெய்டு விட்ட அமைச்சர்! விழிபிதுங்கி நின்ற அதிகாரிகள்Bridge Car Parking : ”கார்களுக்கு அபராதமா?” கார்களை எங்கே நிறுத்தலாம்? ஆக்‌ஷனில் இறங்கிய காவல்துறைEB Office Alcohol | பணி நேரத்தில் மது அருந்தியமின்வாரிய ஊழியர்கள் “ஏய் யாருடா நீங்க...”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நாளை திருவண்ணாமலை கிரிவலம் வரவேண்டாம்” பக்தர்களுக்கு அறிவுறுத்தல்..!
சென்னை அருகே கரையை கடக்கிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்
சென்னை அருகே கரையை கடக்கிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்
TN Rain News LIVE: சென்னை அருகே கரையைக் கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் - எப்போது தெரியுமா..?
TN Rain News LIVE: சென்னை அருகே கரையைக் கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் - எப்போது தெரியுமா..?
நாளை எந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை தெரியுமா?
நாளை எந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை தெரியுமா?
சென்னையை எப்போது கடக்கிறது காற்றழுத்தம்:  பயணிக்கும் பாதையின் வரைபடம் இதோ.!
சென்னையை எப்போது கடக்கிறது காற்றழுத்தம்: பயணிக்கும் பாதையின் வரைபடம் இதோ.!
Governor About Chennai Rain:
Governor About Chennai Rain: "மழைப்பாதிப்புகளை அரசு உரிய முறையில் கையாளும் என நம்புகிறேன்" -ஆளுநர் ஆர்.என்.ரவி
Diwali Gift: ஊழியர்களுக்கு செம சர்ப்ரைஸ்; தீபாவளிக்கு பரிசா கார்,பைக் வழங்கிய சென்னை நிறுவனம்!
Diwali Gift: ஊழியர்களுக்கு செம சர்ப்ரைஸ்; தீபாவளிக்கு பரிசா கார்,பைக் வழங்கிய சென்னை நிறுவனம்!
Villupuram school holiday: கொட்டும் மழை.. விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
கொட்டும் மழை.. விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
Embed widget