மேலும் அறிய

திருமண நாளில் உயிரிழந்த மகன்... பள்ளி திறந்த 2 வது நாளில் நடந்த சோகம்... உறவினர்கள் போராட்டம்!

அரூர் அடுத்த தனியார் பள்ளியில் படித்த 5-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்ததால், உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வந்தனர்.

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கருப்பிளைப்பட்டி கிராமத்தை சேர்ந்த அன்பரசு-மகேஸ்வரி மகன் இன்பராஜ், அருகில் உள்ள தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறந்தவுடன், மாணவன் வழக்கம் போல் பள்ளிக்கு வந்துள்ளான். மாணவன் பள்ளியில் மிகவும் சோர்வாக இருந்திருக்கிறார். ஆனால் பள்ளி ஆசிரியர்கள் பெரியதாக எடுத்துக் கொள்ளாமல், இதை பெற்றோருக்கு தெரிவிக்காமல், அலட்சியம் காட்டி வந்ததாக கூறப்படுகிறது. நேற்று மாணவனின் பெற்றோருக்கு திருமண நாள் என்பதால், தந்தை அன்பரசு, தனது குழந்தையை கோவிலுக்கு அழைத்து செல்ல பள்ளிக்கு வந்திருக்கிறார்.

ஆனால் பள்ளியில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக காக்க வைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவர்கள் பள்ளியை விட்டு வெளிய வருவதை பார்த்த அன்பரசு, தனது மகனை தேடி வகுப்பறைக்கே சென்றுள்ளார். அப்போது மூன்று ஆசிரியர்கள் தன் மகன் முகத்தில் தண்ணீர் தெளித்து கொண்டிருப்பதை பார்த்து, பதறிப் போய், ஓடி மகனை தூக்கி தட்டி பார்த்துள்ளார். அப்பொழுது மகன் பேச்சில்லாமல், மயங்கிய நிலையில் இருந்துள்ளான். தொடர்ந்து பதறி அடித்து தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதால், மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தொடர்ந்து தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, அங்கு சுமார் 2 மணி நேரம் சிகிச்சை தீவிர அளிக்கப்பட்டுள்ளது. ஆனால்  சிகிச்சை பலனின்றி மாணவன் இன்பராஜ்  உயிரிழந்துள்ளார்.


திருமண நாளில் உயிரிழந்த மகன்... பள்ளி திறந்த 2 வது நாளில் நடந்த சோகம்... உறவினர்கள் போராட்டம்!

இதனையடுத்து நேற்று பள்ளி நிர்வாகத்திடம் தன் மகனின் உடல்நிலை பற்றி ஏன் எங்களுக்குச் சொல்லவில்லை என்று கேட்டு, சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளியின் நுழைவாயில் முன்பு அமர்ந்து  முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை தடுக்க முயற்சித்தனர். அப்போது காவல் துறை, பொதுமக்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, சிறிது நேரம் பரபரப்பானது. இதனை தொடர்ந்து காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச  பேச்சுவார்த்தையில் நடத்தினர். அப்பொழுது சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக, பொதுமக்களிடம் உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு உறவினர்கள் கலைந்து சென்றனர். இந்த ஆண்டு பள்ளி தொடங்கிய 2-வது நாளில் ஐந்தாம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

தலைப்பு செய்திகள்

இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!
இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!
"ராகுல் கிட்ட மேகதாது பத்தி ஏன் பேசல?" - விஜய்யைக் கேள்வி கேட்டு வெளுத்த இயக்குநர் கெளதமன்
எல்லாமே தளபதி மேஜிக்தான்! சேலத்து வண்டி வேடிக்கையில் கெத்து காட்டிய அமெரிக்க விஜய் ரசிகர்!
எல்லாமே தளபதி மேஜிக்தான்! சேலத்து வண்டி வேடிக்கையில் கெத்து காட்டிய அமெரிக்க விஜய் ரசிகர்!
சரசரவென உயரும் மேட்டூர் அணை? ஒரே நாளில் நீர்வரத்து அதிரடி உயர்வு... லேட்டஸ்ட் நிலவரம் இதோ!
சரசரவென உயரும் மேட்டூர் அணை? ஒரே நாளில் நீர்வரத்து அதிரடி உயர்வு... லேட்டஸ்ட் நிலவரம் இதோ!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Embed widget