மேலும் அறிய

திருமண நாளில் உயிரிழந்த மகன்... பள்ளி திறந்த 2 வது நாளில் நடந்த சோகம்... உறவினர்கள் போராட்டம்!

அரூர் அடுத்த தனியார் பள்ளியில் படித்த 5-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்ததால், உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வந்தனர்.

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கருப்பிளைப்பட்டி கிராமத்தை சேர்ந்த அன்பரசு-மகேஸ்வரி மகன் இன்பராஜ், அருகில் உள்ள தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறந்தவுடன், மாணவன் வழக்கம் போல் பள்ளிக்கு வந்துள்ளான். மாணவன் பள்ளியில் மிகவும் சோர்வாக இருந்திருக்கிறார். ஆனால் பள்ளி ஆசிரியர்கள் பெரியதாக எடுத்துக் கொள்ளாமல், இதை பெற்றோருக்கு தெரிவிக்காமல், அலட்சியம் காட்டி வந்ததாக கூறப்படுகிறது. நேற்று மாணவனின் பெற்றோருக்கு திருமண நாள் என்பதால், தந்தை அன்பரசு, தனது குழந்தையை கோவிலுக்கு அழைத்து செல்ல பள்ளிக்கு வந்திருக்கிறார்.

ஆனால் பள்ளியில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக காக்க வைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவர்கள் பள்ளியை விட்டு வெளிய வருவதை பார்த்த அன்பரசு, தனது மகனை தேடி வகுப்பறைக்கே சென்றுள்ளார். அப்போது மூன்று ஆசிரியர்கள் தன் மகன் முகத்தில் தண்ணீர் தெளித்து கொண்டிருப்பதை பார்த்து, பதறிப் போய், ஓடி மகனை தூக்கி தட்டி பார்த்துள்ளார். அப்பொழுது மகன் பேச்சில்லாமல், மயங்கிய நிலையில் இருந்துள்ளான். தொடர்ந்து பதறி அடித்து தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதால், மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தொடர்ந்து தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, அங்கு சுமார் 2 மணி நேரம் சிகிச்சை தீவிர அளிக்கப்பட்டுள்ளது. ஆனால்  சிகிச்சை பலனின்றி மாணவன் இன்பராஜ்  உயிரிழந்துள்ளார்.


திருமண நாளில் உயிரிழந்த மகன்... பள்ளி திறந்த 2 வது நாளில் நடந்த சோகம்... உறவினர்கள் போராட்டம்!

இதனையடுத்து நேற்று பள்ளி நிர்வாகத்திடம் தன் மகனின் உடல்நிலை பற்றி ஏன் எங்களுக்குச் சொல்லவில்லை என்று கேட்டு, சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளியின் நுழைவாயில் முன்பு அமர்ந்து  முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை தடுக்க முயற்சித்தனர். அப்போது காவல் துறை, பொதுமக்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, சிறிது நேரம் பரபரப்பானது. இதனை தொடர்ந்து காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச  பேச்சுவார்த்தையில் நடத்தினர். அப்பொழுது சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக, பொதுமக்களிடம் உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு உறவினர்கள் கலைந்து சென்றனர். இந்த ஆண்டு பள்ளி தொடங்கிய 2-வது நாளில் ஐந்தாம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
ABP Premium

வீடியோ

Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
மத்திய அரசின் அடக்குமுறை: அமைச்சர் ஐ. பெரியசாமி கடும் எச்சரிக்கை! உரிமை பறிப்புக்கு எதிராக கொந்தளிப்பு
மத்திய அரசின் அடக்குமுறை: அமைச்சர் ஐ. பெரியசாமி கடும் எச்சரிக்கை! உரிமை பறிப்புக்கு எதிராக கொந்தளிப்பு
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Embed widget