மேலும் அறிய

திருமண நாளில் உயிரிழந்த மகன்... பள்ளி திறந்த 2 வது நாளில் நடந்த சோகம்... உறவினர்கள் போராட்டம்!

அரூர் அடுத்த தனியார் பள்ளியில் படித்த 5-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்ததால், உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வந்தனர்.

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கருப்பிளைப்பட்டி கிராமத்தை சேர்ந்த அன்பரசு-மகேஸ்வரி மகன் இன்பராஜ், அருகில் உள்ள தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறந்தவுடன், மாணவன் வழக்கம் போல் பள்ளிக்கு வந்துள்ளான். மாணவன் பள்ளியில் மிகவும் சோர்வாக இருந்திருக்கிறார். ஆனால் பள்ளி ஆசிரியர்கள் பெரியதாக எடுத்துக் கொள்ளாமல், இதை பெற்றோருக்கு தெரிவிக்காமல், அலட்சியம் காட்டி வந்ததாக கூறப்படுகிறது. நேற்று மாணவனின் பெற்றோருக்கு திருமண நாள் என்பதால், தந்தை அன்பரசு, தனது குழந்தையை கோவிலுக்கு அழைத்து செல்ல பள்ளிக்கு வந்திருக்கிறார்.

ஆனால் பள்ளியில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக காக்க வைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவர்கள் பள்ளியை விட்டு வெளிய வருவதை பார்த்த அன்பரசு, தனது மகனை தேடி வகுப்பறைக்கே சென்றுள்ளார். அப்போது மூன்று ஆசிரியர்கள் தன் மகன் முகத்தில் தண்ணீர் தெளித்து கொண்டிருப்பதை பார்த்து, பதறிப் போய், ஓடி மகனை தூக்கி தட்டி பார்த்துள்ளார். அப்பொழுது மகன் பேச்சில்லாமல், மயங்கிய நிலையில் இருந்துள்ளான். தொடர்ந்து பதறி அடித்து தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதால், மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தொடர்ந்து தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, அங்கு சுமார் 2 மணி நேரம் சிகிச்சை தீவிர அளிக்கப்பட்டுள்ளது. ஆனால்  சிகிச்சை பலனின்றி மாணவன் இன்பராஜ்  உயிரிழந்துள்ளார்.


திருமண நாளில் உயிரிழந்த மகன்... பள்ளி திறந்த 2 வது நாளில் நடந்த சோகம்... உறவினர்கள் போராட்டம்!

இதனையடுத்து நேற்று பள்ளி நிர்வாகத்திடம் தன் மகனின் உடல்நிலை பற்றி ஏன் எங்களுக்குச் சொல்லவில்லை என்று கேட்டு, சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளியின் நுழைவாயில் முன்பு அமர்ந்து  முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை தடுக்க முயற்சித்தனர். அப்போது காவல் துறை, பொதுமக்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, சிறிது நேரம் பரபரப்பானது. இதனை தொடர்ந்து காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச  பேச்சுவார்த்தையில் நடத்தினர். அப்பொழுது சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக, பொதுமக்களிடம் உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு உறவினர்கள் கலைந்து சென்றனர். இந்த ஆண்டு பள்ளி தொடங்கிய 2-வது நாளில் ஐந்தாம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

தலைப்பு செய்திகள்

பெண்களுக்கு குட் நியூஸ் வருமா? தனியார் பஸ்களிலும் இலவச பயணம் வேணும்! வலுக்கும் புதிய கோரிக்கை
பெண்களுக்கு குட் நியூஸ் வருமா? தனியார் பஸ்களிலும் இலவச பயணம் வேணும்! வலுக்கும் புதிய கோரிக்கை
தமிழ்நாட்டு தண்ணீரை பிரெஞ்சு கம்பெனிக்கு கொடுப்பதா? - விஜய் அரசை வெளுத்து வாங்கிய சீமான்! பின்னணி என்ன?
தமிழ்நாட்டு தண்ணீரை பிரெஞ்சு கம்பெனிக்கு கொடுப்பதா? - விஜய் அரசை வெளுத்து வாங்கிய சீமான்! பின்னணி என்ன?
எலக்ட்ரிக் யூனிக் சைக்கிளில் உலகை சுற்றும் சேலத்து இளைஞர்; ஒற்றை சக்கரம் கொண்ட இதன் சிறப்பம்சங்கள் மற்றும் விலை என்ன?
எலக்ட்ரிக் யூனிக் சைக்கிளில் உலகை சுற்றும் சேலத்து இளைஞர்; ஒற்றை சக்கரம் கொண்ட இதன் சிறப்பம்சங்கள் மற்றும் விலை என்ன?
பதவிக்காக கட்சி மாறுபவர்களுக்கு ஆப்பு.! 5 ஆண்டுகள் தேர்தலில் நிற்க தடை? - செக் வைத்த திக
பதவிக்காக கட்சி மாறுபவர்களுக்கு ஆப்பு.! 5 ஆண்டுகள் தேர்தலில் நிற்க தடை? - செக் வைத்த திக

வீடியோ

Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்
Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முதல்வர் விஜய் கீழே இறங்கி வந்து பணி நியமன ஆணை; 'கழிவிரக்கப் பார்வை'- திமுக கண்டனம்!
முதல்வர் விஜய் கீழே இறங்கி வந்து பணி நியமன ஆணை; 'கழிவிரக்கப் பார்வை'- திமுக கண்டனம்!
CM Vijay Perambur: ”என் தொகுதிக்கு இதெல்லாம் வேண்டும்” பெரம்பூருக்காக CM விஜயின் 7 கோரிக்கைகள் - ரூ.3 கோடி நிதி
”என் தொகுதிக்கு இதெல்லாம் வேண்டும்” பெரம்பூருக்காக CM விஜயின் 7 கோரிக்கைகள் - ரூ.3 கோடி நிதி
YUVA AI: மத்திய அரசின் இலவச ஏஐ படிப்பு- சான்றிதழுடன் வேலைவாய்ப்புக்கு வழி! விண்ணப்பிப்பது எப்படி?
YUVA AI: மத்திய அரசின் இலவச ஏஐ படிப்பு- சான்றிதழுடன் வேலைவாய்ப்புக்கு வழி! விண்ணப்பிப்பது எப்படி?
MK Stalin Dmk : சாட்டையை சுழற்றும் ஸ்டாலின்.! ஒரே வாரத்தில் தூக்கியடிக்கப்படும் திமுக நிர்வாகிகள்- ரெடியான லிஸ்ட்.?
சாட்டையை சுழற்றும் ஸ்டாலின்.! ஒரே வாரத்தில் தூக்கியடிக்கப்படும் திமுக நிர்வாகிகள்- ரெடியான லிஸ்ட்.?
CM Vijay: விஜயை பாடாய்படுத்தும் ஃபேன் பாய்ஸ்..! கோரிக்கைகளை உடனே நிறைவேற்றிய CM.. ”ஹக் டூ செல்ஃபி”
விஜயை பாடாய்படுத்தும் ஃபேன் பாய்ஸ்..! கோரிக்கைகளை உடனே நிறைவேற்றிய CM.. ”ஹக் டூ செல்ஃபி”
திமுக வரலாற்றுத் திரிபை தவெக அரசும் பின்பற்றுவதா? நவ.1தான் தமிழ்நாடு நாள்- சாடிய அன்புமணி
திமுக வரலாற்றுத் திரிபை தவெக அரசும் பின்பற்றுவதா? நவ.1தான் தமிழ்நாடு நாள்- சாடிய அன்புமணி
பெண்களை துரத்தும் தவெக நிர்வாகிகள்.. தூங்குகிறதா சிங்கப்பெண் படை? கேள்வி கேட்கும் நயினார் நாகேந்திரன்
பெண்களை துரத்தும் தவெக நிர்வாகிகள்.. தூங்குகிறதா சிங்கப்பெண் படை? கேள்வி கேட்கும் நயினார் நாகேந்திரன்
Thai Maman Thanga Mothiram : குழந்தைகளுக்கு தங்க மோதிரம் ரெடி.? 4.41 லட்சம் ஒரு கிராம் மோதிரத்திற்கு டெண்டர்- அசத்தும் விஜய் அரசு
குழந்தைகளுக்கு தங்க மோதிரம் ரெடி.? 4.41 லட்சம் ஒரு கிராம் மோதிரத்திற்கு டெண்டர்- அசத்தும் விஜய் அரசு
Embed widget