மேலும் அறிய

தருமபுரியில் சிதிலமடைந்த தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கான மறு வாழ்வு இல்லம் - சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை

’’தூய்மை பணியாளர்கள் வருவதில்லை, தொண்டு நிறுவனம் கட்டி கொடுத்த வீடுகள் பழுதாகி வசிக்க முடியவில்லை, சாலை சரியில்லை நடக்க முடியவில்லை’’

கடந்த காலங்களில் சமூகத்தில் தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களை புறந்தள்ளி வைத்து பார்க்கும் நிலை இருந்து வந்தது. இதனால் தமிழக அரசு தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு என்னும் திட்டத்தை உருவாக்கி, தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய வசதிகளை செய்து புதிதாக குடியிருப்பு பகுதிகளில் தங்க வைத்து வந்தது. தொடர்ந்து தொழுநோய் என்பது ஒருவரிடம் இருந்து ஒருவருக்கு பரவாது என்று, பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, இந்த நோயை அறவே ஒழிக்க வேண்டும் என்பதற்கு  மருந்துகளை வழங்கி முற்றிலுமாக குணப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் ஆண்டுதோறும் ஜனவரி 30 ஆம் தேதி தேசிய தொழுநோய் ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டு  வருகிறது.
 

தருமபுரியில் சிதிலமடைந்த தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கான மறு வாழ்வு இல்லம் - சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை
 
தருமபுரி மாவட்டத்தில் தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு முகாம் தருமபுரி இலக்கியம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பாரதியார் நகர் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதில் தருமபுரி மாவட்டம் மட்டுமல்லாமல், திருவண்ணாமலை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகாசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தொழுநோயால் பாதிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்களுக்கு அரசு இலவசமாக வீட்டுமனை பட்டா வழங்கி, குடிநீர் உள்ளிட்ட போதிய அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளது. இந்த மக்கள் அரசு வழங்கும் உதவித் தொகையை வைத்துக் கொண்டும், நியாய விலை கடையில் வழங்கும் பொருட்களை வைத்து தங்களது வாழ்வாதாரத்தை நகர்த்தி வருகின்றனர்.
 

தருமபுரியில் சிதிலமடைந்த தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கான மறு வாழ்வு இல்லம் - சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை
 
 
ஆனால் மேலும் தங்களது வருவாய்க்காக அருகிலுள்ள பகுதிகளில் தூக்கி வீசப்படுகின்ற, இரும்பு, தகரம், பிளாஸ்டிக், மதுபாட்டில்கள் ஆகியவற்றை சேகரித்து வருவாய் ஈட்டி வருகின்றனர்.ஆனால் அரசு வழங்குகின்ற உதவித் தொகையில் சிலருக்கு மாதம் ரூ.1500, சிலருக்கு ரூ.1000 என வழங்கப்பட்டு வருகிறது. தற்பொழுது தமிழக முதல்வர் உதவி தொகையை 2000 ஆக உயர்த்தி தருவதாக கூறியுள்ளார். இந்த அரசு வழங்குகின்ற ஊக்கத்தொகையை வைத்து மாதம் முழுவதும் குடும்பம் நடத்துவதற்கு முடியவில்லை. எனவே 2000 ரூபாய் என்பதை 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி கொடுத்தால் தங்களது வாழ்க்கையை மாதம் முழுவதும் நடத்திக் கொள்ள வசதியாக இருக்கும். அதேபோல் இலக்கியம்பட்டி ஊராட்சி சேர்ந்த துப்புரவு பணியாளர்கள் கிராமங்களை தூய்மை செய்யவும், கழிவுநீர்க் கால்வாய்களை சுத்தம் செய்வதற்கும் வருவதில்லை. இதனால் தாங்கள் வசிக்கும் பகுதியை முழுமையாக தூய்மையாக வைக்க முடியவில்லை.
 

தருமபுரியில் சிதிலமடைந்த தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கான மறு வாழ்வு இல்லம் - சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை
 
 அதேபோல் கடந்த 20 ஆண்டுகளாக இந்த பகுதியில் தரமான சாலை அமைத்துக் கொடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் வரை மனு அளித்து வருகிறோம். இதுவரையிலும் தங்களுக்கு தேவையான சாலை வசதி கிடைக்கவில்லை.அரசின் சார்பில் போதிய அளவில் தங்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் தொண்டு நிறுவனங்கள் தங்களுக்கு குடிநீரை சுத்திகரிப்பு செய்து சுத்தமாக அருந்துவதற்கு தேவையான இயந்திரங்களை அமைத்துக் கொடுத்துள்ளனர். ஆனால் அரசு வழங்கிய இலவச வீட்டு மனை பட்டாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தொண்டு நிறுவனங்கள் வீடுகளைக் கட்டிக் கொடுத்தனர். தற்பொழுது வீடுகள் முழுவதும் பழுதாகி மழைக் காலங்களில் மழைநீர் வழிந்து வருகிறது. மேலும் வீடு முழுவதுமாக விழுகின்ற நிலையில் இருந்து வருகிறது. அந்த வீடுகளில் தங்களால் குடியிருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
 

தருமபுரியில் சிதிலமடைந்த தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கான மறு வாழ்வு இல்லம் - சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை
 
எனவே தமிழக அரசு எங்களின் வீடுகளை புதுப்பித்து கொடுக்க வேண்டும். எங்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு தூய்மை காவலர்களை அனுப்பி சுற்றுப் புறத்தை தூய்மையாக வைக்கவும், கழிவுநீர் கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நியாய விலை கடைக்கு 3 கி.மீ. தொலைவில் உள்ள வெண்ணாம்பட்டிக்கு சென்று வரும் நிலையுள்ளது. அரசு இலவசமாக வழங்கும் பொருட்களை வீட்டுக்கு கொண்டு வர, ஆட்டோவில் கொண்டு வர ரூ.150 செலவாகிறது. சில நேரங்களில் பொருட்கள் கிடைப்பதில்லை. மேலும் மக்கள் கூட்டமாக இருக்கும்போது, தொழு நோயாளிகள் என எங்களை தள்ளி விடுறாங்க. எனேவே பாரதியார் நகரில் நியாய விலை கடை அமைத்து தர வேண்டும். அதேபோல் எங்களின் மீது வாழ்வாதாரத்தின் மீது கருணை கூர்ந்து மாதம் வழங்கும் உதவித் தொகையை 3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Bharat Taxi Fare: கேப் டிரைவர்கள், பயணிகளுக்கு ஜாக்பாட்.! இன்று முதல் 'பாரத் டேக்ஸி'; கட்டணம் இவ்வளவுதானா.?!
கேப் டிரைவர்கள், பயணிகளுக்கு ஜாக்பாட்.! இன்று முதல் 'பாரத் டேக்ஸி'; கட்டணம் இவ்வளவுதானா.?!
Bangladesh Attack on Hindu: இதெல்லாம் சரியில்ல.! வங்கதேசத்தில் தொடரும் அட்டூழியம்; மேலும் ஒரு இந்து இளைஞர் மீது தீ வைப்பு
இதெல்லாம் சரியில்ல.! வங்கதேசத்தில் தொடரும் அட்டூழியம்; மேலும் ஒரு இந்து இளைஞர் மீது தீ வைப்பு
Zelensky Vs Putin: “200 ட்ரோன்களை ஏவி தாக்குதல்“; ரஷ்யா மீது குற்றச்சாட்டை அடுக்கும் ஜெலன்ஸ்கி; நடப்பது என்ன.?
“200 ட்ரோன்களை ஏவி தாக்குதல்“; ரஷ்யா மீது குற்றச்சாட்டை அடுக்கும் ஜெலன்ஸ்கி; நடப்பது என்ன.?
Switzerland Bar Blast: ஸ்விட்சர்லாந்தில் சோகம்; 40 பேர் பலி; பாரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பயங்கர வெடி விபத்து
ஸ்விட்சர்லாந்தில் சோகம்; 40 பேர் பலி; பாரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பயங்கர வெடி விபத்து
ABP Premium

வீடியோ

Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bharat Taxi Fare: கேப் டிரைவர்கள், பயணிகளுக்கு ஜாக்பாட்.! இன்று முதல் 'பாரத் டேக்ஸி'; கட்டணம் இவ்வளவுதானா.?!
கேப் டிரைவர்கள், பயணிகளுக்கு ஜாக்பாட்.! இன்று முதல் 'பாரத் டேக்ஸி'; கட்டணம் இவ்வளவுதானா.?!
Bangladesh Attack on Hindu: இதெல்லாம் சரியில்ல.! வங்கதேசத்தில் தொடரும் அட்டூழியம்; மேலும் ஒரு இந்து இளைஞர் மீது தீ வைப்பு
இதெல்லாம் சரியில்ல.! வங்கதேசத்தில் தொடரும் அட்டூழியம்; மேலும் ஒரு இந்து இளைஞர் மீது தீ வைப்பு
Zelensky Vs Putin: “200 ட்ரோன்களை ஏவி தாக்குதல்“; ரஷ்யா மீது குற்றச்சாட்டை அடுக்கும் ஜெலன்ஸ்கி; நடப்பது என்ன.?
“200 ட்ரோன்களை ஏவி தாக்குதல்“; ரஷ்யா மீது குற்றச்சாட்டை அடுக்கும் ஜெலன்ஸ்கி; நடப்பது என்ன.?
Switzerland Bar Blast: ஸ்விட்சர்லாந்தில் சோகம்; 40 பேர் பலி; பாரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பயங்கர வெடி விபத்து
ஸ்விட்சர்லாந்தில் சோகம்; 40 பேர் பலி; பாரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பயங்கர வெடி விபத்து
ஜன.6 வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்கலைன்னா சஸ்பெண்ட்; வெளியான அதிரடி தகவல்!
ஜன.6 வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்கலைன்னா சஸ்பெண்ட்; வெளியான அதிரடி தகவல்!
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மாற்றம்! புதிய தேதிகள் அறிவிப்பு: மாணவர்கள் கவனத்துக்கு!
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மாற்றம்! புதிய தேதிகள் அறிவிப்பு: மாணவர்கள் கவனத்துக்கு!
iPhone Mega Discount: ஐபோன் பிரியர்களுக்கு ஜாக்பாட்.! புத்தாண்டில் ரூ.16,000-த்திற்கு மேல் தள்ளுபடி; எந்த மாடல் தெரியுமா.?
ஐபோன் பிரியர்களுக்கு ஜாக்பாட்.! புத்தாண்டில் ரூ.16,000-த்திற்கு மேல் தள்ளுபடி; எந்த மாடல் தெரியுமா.?
Cigarette price: பிப்.1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு; ஒரு சிகரெட்டின் விலை ரூ.72 ஆ? என்னென்ன பொருட்களுக்கு எவ்வளவு அதிகம்?
Cigarette price: பிப்.1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு; ஒரு சிகரெட்டின் விலை ரூ.72 ஆ? என்னென்ன பொருட்களுக்கு எவ்வளவு அதிகம்?
Embed widget