மேலும் அறிய

தருமபுரியில் சிதிலமடைந்த தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கான மறு வாழ்வு இல்லம் - சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை

’’தூய்மை பணியாளர்கள் வருவதில்லை, தொண்டு நிறுவனம் கட்டி கொடுத்த வீடுகள் பழுதாகி வசிக்க முடியவில்லை, சாலை சரியில்லை நடக்க முடியவில்லை’’

கடந்த காலங்களில் சமூகத்தில் தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களை புறந்தள்ளி வைத்து பார்க்கும் நிலை இருந்து வந்தது. இதனால் தமிழக அரசு தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு என்னும் திட்டத்தை உருவாக்கி, தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய வசதிகளை செய்து புதிதாக குடியிருப்பு பகுதிகளில் தங்க வைத்து வந்தது. தொடர்ந்து தொழுநோய் என்பது ஒருவரிடம் இருந்து ஒருவருக்கு பரவாது என்று, பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, இந்த நோயை அறவே ஒழிக்க வேண்டும் என்பதற்கு  மருந்துகளை வழங்கி முற்றிலுமாக குணப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் ஆண்டுதோறும் ஜனவரி 30 ஆம் தேதி தேசிய தொழுநோய் ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டு  வருகிறது.
 

தருமபுரியில் சிதிலமடைந்த தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கான மறு வாழ்வு இல்லம் - சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை
 
தருமபுரி மாவட்டத்தில் தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு முகாம் தருமபுரி இலக்கியம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பாரதியார் நகர் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதில் தருமபுரி மாவட்டம் மட்டுமல்லாமல், திருவண்ணாமலை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகாசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தொழுநோயால் பாதிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்களுக்கு அரசு இலவசமாக வீட்டுமனை பட்டா வழங்கி, குடிநீர் உள்ளிட்ட போதிய அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளது. இந்த மக்கள் அரசு வழங்கும் உதவித் தொகையை வைத்துக் கொண்டும், நியாய விலை கடையில் வழங்கும் பொருட்களை வைத்து தங்களது வாழ்வாதாரத்தை நகர்த்தி வருகின்றனர்.
 

தருமபுரியில் சிதிலமடைந்த தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கான மறு வாழ்வு இல்லம் - சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை
 
 
ஆனால் மேலும் தங்களது வருவாய்க்காக அருகிலுள்ள பகுதிகளில் தூக்கி வீசப்படுகின்ற, இரும்பு, தகரம், பிளாஸ்டிக், மதுபாட்டில்கள் ஆகியவற்றை சேகரித்து வருவாய் ஈட்டி வருகின்றனர்.ஆனால் அரசு வழங்குகின்ற உதவித் தொகையில் சிலருக்கு மாதம் ரூ.1500, சிலருக்கு ரூ.1000 என வழங்கப்பட்டு வருகிறது. தற்பொழுது தமிழக முதல்வர் உதவி தொகையை 2000 ஆக உயர்த்தி தருவதாக கூறியுள்ளார். இந்த அரசு வழங்குகின்ற ஊக்கத்தொகையை வைத்து மாதம் முழுவதும் குடும்பம் நடத்துவதற்கு முடியவில்லை. எனவே 2000 ரூபாய் என்பதை 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி கொடுத்தால் தங்களது வாழ்க்கையை மாதம் முழுவதும் நடத்திக் கொள்ள வசதியாக இருக்கும். அதேபோல் இலக்கியம்பட்டி ஊராட்சி சேர்ந்த துப்புரவு பணியாளர்கள் கிராமங்களை தூய்மை செய்யவும், கழிவுநீர்க் கால்வாய்களை சுத்தம் செய்வதற்கும் வருவதில்லை. இதனால் தாங்கள் வசிக்கும் பகுதியை முழுமையாக தூய்மையாக வைக்க முடியவில்லை.
 

தருமபுரியில் சிதிலமடைந்த தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கான மறு வாழ்வு இல்லம் - சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை
 
 அதேபோல் கடந்த 20 ஆண்டுகளாக இந்த பகுதியில் தரமான சாலை அமைத்துக் கொடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் வரை மனு அளித்து வருகிறோம். இதுவரையிலும் தங்களுக்கு தேவையான சாலை வசதி கிடைக்கவில்லை.அரசின் சார்பில் போதிய அளவில் தங்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் தொண்டு நிறுவனங்கள் தங்களுக்கு குடிநீரை சுத்திகரிப்பு செய்து சுத்தமாக அருந்துவதற்கு தேவையான இயந்திரங்களை அமைத்துக் கொடுத்துள்ளனர். ஆனால் அரசு வழங்கிய இலவச வீட்டு மனை பட்டாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தொண்டு நிறுவனங்கள் வீடுகளைக் கட்டிக் கொடுத்தனர். தற்பொழுது வீடுகள் முழுவதும் பழுதாகி மழைக் காலங்களில் மழைநீர் வழிந்து வருகிறது. மேலும் வீடு முழுவதுமாக விழுகின்ற நிலையில் இருந்து வருகிறது. அந்த வீடுகளில் தங்களால் குடியிருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
 

தருமபுரியில் சிதிலமடைந்த தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கான மறு வாழ்வு இல்லம் - சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை
 
எனவே தமிழக அரசு எங்களின் வீடுகளை புதுப்பித்து கொடுக்க வேண்டும். எங்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு தூய்மை காவலர்களை அனுப்பி சுற்றுப் புறத்தை தூய்மையாக வைக்கவும், கழிவுநீர் கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நியாய விலை கடைக்கு 3 கி.மீ. தொலைவில் உள்ள வெண்ணாம்பட்டிக்கு சென்று வரும் நிலையுள்ளது. அரசு இலவசமாக வழங்கும் பொருட்களை வீட்டுக்கு கொண்டு வர, ஆட்டோவில் கொண்டு வர ரூ.150 செலவாகிறது. சில நேரங்களில் பொருட்கள் கிடைப்பதில்லை. மேலும் மக்கள் கூட்டமாக இருக்கும்போது, தொழு நோயாளிகள் என எங்களை தள்ளி விடுறாங்க. எனேவே பாரதியார் நகரில் நியாய விலை கடை அமைத்து தர வேண்டும். அதேபோல் எங்களின் மீது வாழ்வாதாரத்தின் மீது கருணை கூர்ந்து மாதம் வழங்கும் உதவித் தொகையை 3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Weather Update: சென்னைக்கு வார்னிங்..! 4 மாவட்டங்களில் மிக கனமழை, 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - இன்றைய தமிழக வானிலை
TN Weather Update: சென்னைக்கு வார்னிங்..! 4 மாவட்டங்களில் மிக கனமழை, 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - இன்றைய தமிழக வானிலை
Parasakthi : சிவகார்த்திகேயனின் பராசக்தி காட்சிகள் ரத்து..அதிர்ச்சியில் ரசிகர்கள்
Parasakthi : சிவகார்த்திகேயனின் பராசக்தி காட்சிகள் ரத்து..அதிர்ச்சியில் ரசிகர்கள்
Sridhar Vembu: விவாகரத்து..! மனைவிக்கு கல்தா, சொத்துகளை மாற்றிய ஸ்ரீதர் வேம்பு? ரூ.15,278 கோடியை செலுத்த உத்தரவு
Sridhar Vembu: விவாகரத்து..! மனைவிக்கு கல்தா, சொத்துகளை மாற்றிய ஸ்ரீதர் வேம்பு? ரூ.15,278 கோடியை செலுத்த உத்தரவு
Kia EV2: ப்ராண்டின் குட்டி மின்சார கார்..! கியா புதிய எஸ்யுவி மாடலின் அம்சங்கள், ரேஞ்ச்? இந்தியாவில் எப்போது?
Kia EV2: ப்ராண்டின் குட்டி மின்சார கார்..! கியா புதிய எஸ்யுவி மாடலின் அம்சங்கள், ரேஞ்ச்? இந்தியாவில் எப்போது?
ABP Premium

வீடியோ

Aarti Ravi vs Ravi Mohan | ”சுயமரியாதை பத்தி நீ பேசலாமா?”ஒரு உண்மையை சொல்றேன்”ரவி மோகன் Vs ஆர்த்தி
Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: சென்னைக்கு வார்னிங்..! 4 மாவட்டங்களில் மிக கனமழை, 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - இன்றைய தமிழக வானிலை
TN Weather Update: சென்னைக்கு வார்னிங்..! 4 மாவட்டங்களில் மிக கனமழை, 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - இன்றைய தமிழக வானிலை
Parasakthi : சிவகார்த்திகேயனின் பராசக்தி காட்சிகள் ரத்து..அதிர்ச்சியில் ரசிகர்கள்
Parasakthi : சிவகார்த்திகேயனின் பராசக்தி காட்சிகள் ரத்து..அதிர்ச்சியில் ரசிகர்கள்
Sridhar Vembu: விவாகரத்து..! மனைவிக்கு கல்தா, சொத்துகளை மாற்றிய ஸ்ரீதர் வேம்பு? ரூ.15,278 கோடியை செலுத்த உத்தரவு
Sridhar Vembu: விவாகரத்து..! மனைவிக்கு கல்தா, சொத்துகளை மாற்றிய ஸ்ரீதர் வேம்பு? ரூ.15,278 கோடியை செலுத்த உத்தரவு
Kia EV2: ப்ராண்டின் குட்டி மின்சார கார்..! கியா புதிய எஸ்யுவி மாடலின் அம்சங்கள், ரேஞ்ச்? இந்தியாவில் எப்போது?
Kia EV2: ப்ராண்டின் குட்டி மின்சார கார்..! கியா புதிய எஸ்யுவி மாடலின் அம்சங்கள், ரேஞ்ச்? இந்தியாவில் எப்போது?
TVK VIJAY: சைலண்ட் மோடில் விஜய், ஆதவ் அர்ஜூனா.! வாயை திறக்காததற்கு இது தான் காரணமா.?
சைலண்ட் மோடில் விஜய், ஆதவ் அர்ஜூனா.! வாயை திறக்காததற்கு இது தான் காரணமா.?
TASMAC Holiday: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாள் விடுமுறை.! மதுப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்த தமிழக அரசு
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாள் விடுமுறை.! மதுப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்த தமிழக அரசு
5 நாள் தொடர் விடுமுறை.! கோவை, நெல்லை, திருப்பூர், செங்கோட்டைக்கு சிறப்பு ரயில்- தெற்கு ரயில்வே அறிவிப்பு
5 நாள் தொடர் விடுமுறை.! கோவை, நெல்லை, திருப்பூர், செங்கோட்டைக்கு சிறப்பு ரயில்- தெற்கு ரயில்வே அறிவிப்பு
DMDK Alliance: முந்திரிக் கொட்டை மாதிரி சொல்லனுமா? கூட்டணி அறிவிப்பில் தொண்டர்களை ஏமாற்றிய பிரேமலதா விஜயகாந்த்
DMDK Alliance: முந்திரிக் கொட்டை மாதிரி சொல்லனுமா? கூட்டணி அறிவிப்பில் தொண்டர்களை ஏமாற்றிய பிரேமலதா விஜயகாந்த்
Embed widget