மேலும் அறிய

தருமபுரியில் சிதிலமடைந்த தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கான மறு வாழ்வு இல்லம் - சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை

’’தூய்மை பணியாளர்கள் வருவதில்லை, தொண்டு நிறுவனம் கட்டி கொடுத்த வீடுகள் பழுதாகி வசிக்க முடியவில்லை, சாலை சரியில்லை நடக்க முடியவில்லை’’

கடந்த காலங்களில் சமூகத்தில் தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களை புறந்தள்ளி வைத்து பார்க்கும் நிலை இருந்து வந்தது. இதனால் தமிழக அரசு தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு என்னும் திட்டத்தை உருவாக்கி, தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய வசதிகளை செய்து புதிதாக குடியிருப்பு பகுதிகளில் தங்க வைத்து வந்தது. தொடர்ந்து தொழுநோய் என்பது ஒருவரிடம் இருந்து ஒருவருக்கு பரவாது என்று, பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, இந்த நோயை அறவே ஒழிக்க வேண்டும் என்பதற்கு  மருந்துகளை வழங்கி முற்றிலுமாக குணப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் ஆண்டுதோறும் ஜனவரி 30 ஆம் தேதி தேசிய தொழுநோய் ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டு  வருகிறது.
 

தருமபுரியில் சிதிலமடைந்த தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கான மறு வாழ்வு இல்லம் - சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை
 
தருமபுரி மாவட்டத்தில் தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு முகாம் தருமபுரி இலக்கியம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பாரதியார் நகர் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதில் தருமபுரி மாவட்டம் மட்டுமல்லாமல், திருவண்ணாமலை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகாசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தொழுநோயால் பாதிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்களுக்கு அரசு இலவசமாக வீட்டுமனை பட்டா வழங்கி, குடிநீர் உள்ளிட்ட போதிய அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளது. இந்த மக்கள் அரசு வழங்கும் உதவித் தொகையை வைத்துக் கொண்டும், நியாய விலை கடையில் வழங்கும் பொருட்களை வைத்து தங்களது வாழ்வாதாரத்தை நகர்த்தி வருகின்றனர்.
 

தருமபுரியில் சிதிலமடைந்த தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கான மறு வாழ்வு இல்லம் - சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை
 
 
ஆனால் மேலும் தங்களது வருவாய்க்காக அருகிலுள்ள பகுதிகளில் தூக்கி வீசப்படுகின்ற, இரும்பு, தகரம், பிளாஸ்டிக், மதுபாட்டில்கள் ஆகியவற்றை சேகரித்து வருவாய் ஈட்டி வருகின்றனர்.ஆனால் அரசு வழங்குகின்ற உதவித் தொகையில் சிலருக்கு மாதம் ரூ.1500, சிலருக்கு ரூ.1000 என வழங்கப்பட்டு வருகிறது. தற்பொழுது தமிழக முதல்வர் உதவி தொகையை 2000 ஆக உயர்த்தி தருவதாக கூறியுள்ளார். இந்த அரசு வழங்குகின்ற ஊக்கத்தொகையை வைத்து மாதம் முழுவதும் குடும்பம் நடத்துவதற்கு முடியவில்லை. எனவே 2000 ரூபாய் என்பதை 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி கொடுத்தால் தங்களது வாழ்க்கையை மாதம் முழுவதும் நடத்திக் கொள்ள வசதியாக இருக்கும். அதேபோல் இலக்கியம்பட்டி ஊராட்சி சேர்ந்த துப்புரவு பணியாளர்கள் கிராமங்களை தூய்மை செய்யவும், கழிவுநீர்க் கால்வாய்களை சுத்தம் செய்வதற்கும் வருவதில்லை. இதனால் தாங்கள் வசிக்கும் பகுதியை முழுமையாக தூய்மையாக வைக்க முடியவில்லை.
 

தருமபுரியில் சிதிலமடைந்த தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கான மறு வாழ்வு இல்லம் - சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை
 
 அதேபோல் கடந்த 20 ஆண்டுகளாக இந்த பகுதியில் தரமான சாலை அமைத்துக் கொடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் வரை மனு அளித்து வருகிறோம். இதுவரையிலும் தங்களுக்கு தேவையான சாலை வசதி கிடைக்கவில்லை.அரசின் சார்பில் போதிய அளவில் தங்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் தொண்டு நிறுவனங்கள் தங்களுக்கு குடிநீரை சுத்திகரிப்பு செய்து சுத்தமாக அருந்துவதற்கு தேவையான இயந்திரங்களை அமைத்துக் கொடுத்துள்ளனர். ஆனால் அரசு வழங்கிய இலவச வீட்டு மனை பட்டாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தொண்டு நிறுவனங்கள் வீடுகளைக் கட்டிக் கொடுத்தனர். தற்பொழுது வீடுகள் முழுவதும் பழுதாகி மழைக் காலங்களில் மழைநீர் வழிந்து வருகிறது. மேலும் வீடு முழுவதுமாக விழுகின்ற நிலையில் இருந்து வருகிறது. அந்த வீடுகளில் தங்களால் குடியிருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
 

தருமபுரியில் சிதிலமடைந்த தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கான மறு வாழ்வு இல்லம் - சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை
 
எனவே தமிழக அரசு எங்களின் வீடுகளை புதுப்பித்து கொடுக்க வேண்டும். எங்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு தூய்மை காவலர்களை அனுப்பி சுற்றுப் புறத்தை தூய்மையாக வைக்கவும், கழிவுநீர் கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நியாய விலை கடைக்கு 3 கி.மீ. தொலைவில் உள்ள வெண்ணாம்பட்டிக்கு சென்று வரும் நிலையுள்ளது. அரசு இலவசமாக வழங்கும் பொருட்களை வீட்டுக்கு கொண்டு வர, ஆட்டோவில் கொண்டு வர ரூ.150 செலவாகிறது. சில நேரங்களில் பொருட்கள் கிடைப்பதில்லை. மேலும் மக்கள் கூட்டமாக இருக்கும்போது, தொழு நோயாளிகள் என எங்களை தள்ளி விடுறாங்க. எனேவே பாரதியார் நகரில் நியாய விலை கடை அமைத்து தர வேண்டும். அதேபோல் எங்களின் மீது வாழ்வாதாரத்தின் மீது கருணை கூர்ந்து மாதம் வழங்கும் உதவித் தொகையை 3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

'என்னை ஏன் பேசவிடல?' - தவெக எம்எல்ஏவை ரவுண்ட் கட்டிய திமுகவினர்; பாதியிலேயே கிளம்பினார் - என்ன நடந்தது?
'என்னை ஏன் பேசவிடல?' - தவெக எம்எல்ஏவை ரவுண்ட் கட்டிய திமுகவினர்; பாதியிலேயே கிளம்பினார் - என்ன நடந்தது?
வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் முதலமைச்சரே! இல்லனா.., - தவெக அரசுக்கு விவசாயிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை என்ன?
வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் முதலமைச்சரே! இல்லனா.., - தவெக அரசுக்கு விவசாயிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை என்ன?
ஆட்டோமேட்டிக் லாக் உயிரைப் பறித்ததா? - சேலம் கார் விபத்தில் கணவன், மனைவி பலியான அதிர்ச்சிப் பின்னணி
ஆட்டோமேட்டிக் லாக் உயிரைப் பறித்ததா? - சேலம் கார் விபத்தில் கணவன், மனைவி பலியான அதிர்ச்சிப் பின்னணி
Salem power shutdown: சேலத்தின் முக்கிய பகுதிகளில் நாளை மின்தடை... லிஸ்டில உங்க பகுதியும் இருக்கா ?
Salem power shutdown: சேலத்தின் முக்கிய பகுதிகளில் நாளை மின்தடை... லிஸ்டில உங்க பகுதியும் இருக்கா ?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்
10 நிமிட MEETING 4 முக்கிய கோரிக்கைகள் மோடியுடன் முதல்வர் விஜய்!
தமிழ்நாட்டுக்கு புதிய DGP UPSC ஓகே சொன்ன 3 பேர்! விஜய்யின் CHOICE யார்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK to TVK: அதிமுகவில் விழுந்த அடுத்த விக்கெட்; தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்; யார் தெரியுமா.?
அதிமுகவில் விழுந்த அடுத்த விக்கெட்; தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்; யார் தெரியுமா.?
Gold Silver Rate May 28th: நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்.! இன்று ஒரே நாளில் தங்கம் விலை அதிரடியாக குறைவு; தற்போது விலை என்ன.?
நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்.! இன்று ஒரே நாளில் தங்கம் விலை அதிரடியாக குறைவு; தற்போது விலை என்ன.?
CM Vijay: கையகப்படுத்தப்பட்ட பரந்தூர் நிலங்கள்! திருப்பித் தருமா தவெக அரசு? விஜய்யின் முடிவு என்ன?
CM Vijay: கையகப்படுத்தப்பட்ட பரந்தூர் நிலங்கள்! திருப்பித் தருமா தவெக அரசு? விஜய்யின் முடிவு என்ன?
America Strikes Iran: யப்பா, மறுபடியும் முதல்ல இருந்தா.! மீண்டும் தொடங்கும் போர்.! ஈரான் மீது அமெரிக்கா புதிய தாக்குதல்
யப்பா, மறுபடியும் முதல்ல இருந்தா.! மீண்டும் தொடங்கும் போர்.! ஈரான் மீது அமெரிக்கா புதிய தாக்குதல்
Trump Warns Oman: ட்ரம்ப்பின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.! ஓமனை தகர்த்துவிடுவேன் என எச்சரிக்கை; எதற்காக தெரியுமா.?
ட்ரம்ப்பின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.! ஓமனை தகர்த்துவிடுவேன் என எச்சரிக்கை; எதற்காக தெரியுமா.?
CV Shanmugam: இபிஎஸ்-யிடம் தஞ்சமா? MLA பதவி ராஜினாமாவா? சிவி சண்முகம் இன்று முக்கிய முடிவு!
CV Shanmugam: இபிஎஸ்-யிடம் தஞ்சமா? MLA பதவி ராஜினாமாவா? சிவி சண்முகம் இன்று முக்கிய முடிவு!
Tamilnadu Headlines: இன்று பக்ரீத் கொண்டாட்டம்! ராகுல், சோனியாவை சந்திக்கும் விஜய் - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Headlines: இன்று பக்ரீத் கொண்டாட்டம்! ராகுல், சோனியாவை சந்திக்கும் விஜய் - தமிழகத்தில் இதுவரை
தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில்: அடுத்த இரு நாட்களுக்கான வானிலை நிலவரம்!
தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில்: அடுத்த இரு நாட்களுக்கான வானிலை நிலவரம்!
Embed widget