மேலும் அறிய

தருமபுரியில் ரேஷன் கடைகளில் பேடிஎம் மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகம்

இணைய வழியில் பணம் செலுத்தும் வசதி, நல்ல வசதியாக இருப்பதாக பொதுமக்கள் மகிழ்ச்சி.

தருமபுரி மாவட்டத்தில் முதல் முறையாக இணைய வழி மூலம் ரேஷன் கடைகளில் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்த, பேடிஎம் கியூஆர் கோட் மூலம் ஸ்கேன் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. 
 
தருமபுரி மாவட்டத்தில் 4,68,595 குடும்ப அட்டைகள் உள்ளன. இதில் 498 முழுநேர நியாய விலை கடைகளும், 587 பகுதி நேர நியாய விலைக் கடைகளும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பொதுமக்களின் வசதிக்காக பல்வேறு இடங்களில் பகுதி நேர நியாய விலை திறக்கப்பட்டு வருகிறது. இதில் தருமபுரி அடுத்த அதகப்படி, சின்ன தடங்கம், செந்தில் நகரைச் சார்ந்த பகுதி மக்கள் நியாய விலை கடைக்கு,  நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது. சில நாட்களில் பொருட்கள் முழுவதுமாக கிடைக்காத சூழலும் இருந்து வருகிறது. இதனால் நீண்ட நாட்களாக பகுதி நேர நியாய விலை கடையை பிரித்துக் கொடுக்க வேண்டும் என செந்தில் நகர் சேர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

தருமபுரியில் ரேஷன் கடைகளில் பேடிஎம் மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகம்
 
இந்நிலையில் அதகப்பாடி கடையிலிருந்து, 215 குடும்ப அட்டைகளை பிரித்து செந்தில் நகரில் புதிய பகுதி நேர நியாய விலை கடை திறக்கப்பட்டது. இந்த பகுதி நேர நியாய விலைக் கடையை, தமிழ்நாடு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். இந்த புதிய நியாய விலைக் கடையில் தருமபுரி மாவட்டத்தில் முதன்முறையாக கியூஆர்  கோடு மூலம் பேடிஎம், கூகுள் பே போன்றவற்றில் பணம் செலுத்துவதற்கு வசதியாக இணைய வழி பண பரிவர்த்தனை சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனால் நியாய விலை கடைக்கு வரும் குடும்ப அட்டைதாரர்கள் பொருட்களை வாங்கிக் கொண்டு இணை வழி மூலம் ஸ்கேன் செய்து பணம் செலுத்தி வருகின்றனர்.

தருமபுரியில் ரேஷன் கடைகளில் பேடிஎம் மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகம்
 
மேலும், நாடு முழுவதும் எல்லா தரப்பிலும் உள்ள மக்கள் நவீன வசதி கொண்ட செல்போன்களை பயன்படுத்துவதால், பணத்தை கையில் வைக்காமல், செல்போனில் மூலமாக இணைய வழியில் பணப் பரிவர்த்தனை செய்து வருகின்றனர். ஆனால் அரசு அலுவலகங்கள் மற்றும் இணைய வழி சேவை மூலம் பண பரிவர்த்தனை செய்யும் வசதி இல்லாமல் இருந்து வந்தது. இதனால் அரசு அலுவலகங்களில் செலுத்த வேண்டிய கட்டணங்கள் உள்ளிட்டவைகளுக்கு  இணைய வழியின் மூலம் செலுத்த முடியாமல் மக்கள் பணம் கையில் எடுத்து வந்து நிலை இருந்து வந்தது. இதனால் பேருந்து பயணம், நியாய விலை கடை போன்றவற்றிற்கு வரும் வயதான முதியவர்கள் கையில் பணம் வைத்திருக்கின்ற பொழுது, தவறவிடுகின்ற சூழலும் இருந்து வருகிறது. தற்பொழுது தருமபுரி மாவட்டத்தில் முதல் முறையாக பேடிஎம் மூலம் க்யூஆர் கோட் ஸ்கேன் செய்து, இணைய வழியில் பணம் பரிவர்த்தனை செய்யும் வசதி தொடங்கப்பட்டுள்ளதால், கிராம மக்களுக்கு இது மிகுந்த வசதியாக இருப்பதாகவும், எல்லா இடங்களிலும் நவீன செல் போன் மூலமாக பணப் பரிவர்த்தனை செய்து வரும் நிலையில் தற்போது நியாய விலைக் கடைகளிலும் தொடங்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
 
மேலும், இந்த இணைய வழி திட்டத்தின் மூலம் பணப்பதிவு எத்தனை சேவையை மாவட்ட முழுவதும் உள்ள 1087 நியாய விலை கடைகளிலும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

Minister Keerthana : ’What is your father?’ அமைச்சர் கீர்த்தனாவிற்கு எதிராக வலுக்கும் கண்டனங்கள்..!
'English ல பேச தெரியாதா?’ புதிய சர்ச்சையில் அமைச்சர் கீர்த்தனா
TTV JOIN ADMK : அதிமுகவில் மீண்டும் டிடிவி.! முடிவெடுக்கும் எடப்பாடி.? இன்றைய கூட்டத்தில் நடந்த திடீர் ட்விஸ்ட்
அதிமுகவில் மீண்டும் டிடிவி.! முடிவெடுக்கும் எடப்பாடி.? இன்றைய கூட்டத்தில் நடந்த திடீர் ட்விஸ்ட்
இந்தியா முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடல்: உ.பி. முதலிடம்- தமிழ்நாட்டில் எத்தனை? மாணவர் நிலை?
இந்தியா முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடல்: உ.பி. முதலிடம்- தமிழ்நாட்டில் எத்தனை? மாணவர் நிலை?
கல்வி விற்பனைக்கே; வேலைக்கு அலையும் இளைஞர்கள்- பொறியியல் கல்லூரிகள் மூடலுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்
கல்வி விற்பனைக்கே; வேலைக்கு அலையும் இளைஞர்கள்- பொறியியல் கல்லூரிகள் மூடலுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Keerthana : ’What is your father?’ அமைச்சர் கீர்த்தனாவிற்கு எதிராக வலுக்கும் கண்டனங்கள்..!
'English ல பேச தெரியாதா?’ புதிய சர்ச்சையில் அமைச்சர் கீர்த்தனா
TTV JOIN ADMK : அதிமுகவில் மீண்டும் டிடிவி.! முடிவெடுக்கும் எடப்பாடி.? இன்றைய கூட்டத்தில் நடந்த திடீர் ட்விஸ்ட்
அதிமுகவில் மீண்டும் டிடிவி.! முடிவெடுக்கும் எடப்பாடி.? இன்றைய கூட்டத்தில் நடந்த திடீர் ட்விஸ்ட்
இந்தியா முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடல்: உ.பி. முதலிடம்- தமிழ்நாட்டில் எத்தனை? மாணவர் நிலை?
இந்தியா முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடல்: உ.பி. முதலிடம்- தமிழ்நாட்டில் எத்தனை? மாணவர் நிலை?
கல்வி விற்பனைக்கே; வேலைக்கு அலையும் இளைஞர்கள்- பொறியியல் கல்லூரிகள் மூடலுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்
கல்வி விற்பனைக்கே; வேலைக்கு அலையும் இளைஞர்கள்- பொறியியல் கல்லூரிகள் மூடலுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்
TVK Government : ‘விஜய் ஆட்சிக்கு எதிராக 19 எம்.எல்.ஏக்கள்’ பரபரப்பு தகவலை வெளியிட்ட திமுக..!
‘விஜய் ஆட்சிக்கு எதிராக 19 எம்.எல்.ஏக்கள்’ தகவலை வெளியிட்ட திமுக..!
Nissan Tekton Launching: க்ரெட்டா, சியாராவுக்கு செக் வைக்க வரும் 'பேபி பேட்ரோல்'.! 9-ம் தேதி மாஸாக இறங்கும் நிசான் டெக்டான்
க்ரெட்டா, சியாராவுக்கு செக் வைக்க வரும் 'பேபி பேட்ரோல்'.! 9-ம் தேதி மாஸாக இறங்கும் நிசான் டெக்டான்
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜூலை 7-ம் தேதி (07.07.2026) எங்கெங்க மின்சார தடை ஏற்படப் போகுதுன்னு பாருங்க
சென்னை மக்களே.! ஜூலை 7-ம் தேதி (07.07.2026) எங்கெங்க மின்சார தடை ஏற்படப் போகுதுன்னு பாருங்க
Diesel Hatchback: நாட்டின் ஒரே டீசல் ஹேட்ச்பேக்..! 35kM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங், பட்ஜெட்டில் ப்ரீமியம் கார்
நாட்டின் ஒரே டீசல் ஹேட்ச்பேக்..! 35kM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங், பட்ஜெட்டில் ப்ரீமியம் கார்
Embed widget