மேலும் அறிய

தனியார் சேவைக்கு செல்லும் வாடிக்கையாளர்கள்; கேபிள் டிவி ஆபரேட்டர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு

கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக அரசு கேபிள் டிவி இணைப்பு ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளதால், தனியார் சேவைக்கு வாடிக்கையாளர்கள் செல்வதால் கேபிள் டிவி ஆபரேட்டர்களின் வாழ்வாதாரம் பாதித்துள்ளது

அரசு கேபிள் டிவி இணைப்புகள் கிடைக்காததால் வாடிக்கையாளர்கள் தனியார் சேவைக்கு செல்வதால் வாழ்வாதாரம் பாதிப்பதாக கூறி, அரசு கேபிள் டிவி இணைப்பை சரி செய்து கொடுக்க வலியுறுத்தி தருமபுரி மாவட்ட கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
 
தருமபுரி மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட கேபிள் டிவி ஆபரேட்டர்கள் அரசு கேபிளில் டேக் டிவி செட்டாப் பாக்ஸ் பெற்று வாடிக்கையாளர்களுக்கு கேபிள் டிவி இணைப்பை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் தருமபுரி மாவட்டம் முழுவதும் 50,000 மேற்பட்ட டேக் டிவி செட்டாப் பாக்ஸை வாடிக்கையாள்ர்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக அரசு கேபிள் டிவி இணைப்பு ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதில் சாஃப்ட்வேர் பிரச்சினையால் தமிழகம் முழுவதும் அரசு கேபிள் டிவி சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் தனியார் சேவைகளை நாடி செல்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு கேபிள் டிவி இணைப்புகளில் உள்ள வாடிக்கையாளர்கள், தற்பொழுது தனியார் சேவையை நோக்கி செல்லத் தொடங்கியுள்ளனர். இதனால் அரசு கேபிள் டிவி இணைப்பில், கேபிள் டிவி ஆபரேட்டர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலையில் உள்ளது.
 
 

தனியார் சேவைக்கு செல்லும் வாடிக்கையாளர்கள்; கேபிள் டிவி ஆபரேட்டர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு
 
மேலும் கேபிள் டிவி இணைப்பு 10 நாட்களாக வராததால், மாதம் தோறும் வாடிக்கையாளர்களிடம் கட்டணம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் தருமபுரி மாவட்டத்தில் உள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்கள் இணைந்து, கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக அரசு கேபிள் டிவி இணைப்பு ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளதால், தனியார் சேவைக்கு வாடிக்கையாளர்கள் செல்வதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்க சூழல் உள்ளது. எனவே விரைந்து நடவடிக்கை எடுத்து அரசு கேபிள் டிவி இணைப்பை சரி செய்து கொடுக்க அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
 
 

 
 
தருமபுரி அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணி புரியும் ஊழியர்களுக்கு பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 

தனியார் சேவைக்கு செல்லும் வாடிக்கையாளர்கள்; கேபிள் டிவி ஆபரேட்டர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு
 
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துப்புரவு பணியாளர்கள் காவலர்கள் என 200க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த அடிப்படையில் கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். மேலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட காலங்களில் கொரோனா பாதிப்புக்குள்ளான நோயாளிகளை, எந்த ஒரு அச்சமும் இன்றி அறையை பராமரிப்பது, நோயாளிகளுக்கு உதவி செய்வது போன்ற பணிகளை செய்து வந்துள்ளனர். ஆனால் இந்த ஒப்பந்த பணியாளர்களுக்கு தேவையான ஓய்வறை, அமர்ந்து உணவு உண்பதற்கு போதிய இடவசதி மற்றும் கழிப்பறை வசதி உள்ளிட்டவைகள் செய்து தரப்படவில்லை. மேலும் ஒப்பந்த ஊழியர்கள் என்பதால் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் கண்ணிய குறைவாக நடத்தி வந்துள்ளனர். மேலும் கடந்த 10 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணி செய்து வரும் இந்த ஊழியர்களுக்கு ஊதிய உயர்வும் இல்லை.
 

தனியார் சேவைக்கு செல்லும் வாடிக்கையாளர்கள்; கேபிள் டிவி ஆபரேட்டர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு
 
 
இதனால் அரசு மருத்துவக் கல்லூரியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்கள் சார்பில்,  தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களை நாகரிகமாக நடத்த வேண்டும், தங்களுக்கு தேவையான ஓய்வறை, கழிவறை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். அதேபோல் ஊதிய உயர்வு கொடுத்து பணி, நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒப்பந்த ஊழியர்களை கண்ணிய குறைவாக நடத்தும் மருத்துவமனை ஊழியர்கள் செவிலியர்களை, கண்டித்து முழக்கங்களை எழுப்பினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மருத்துவமனை ஒப்பந்த ஊழியர்கள் தொழிற்சங்கத்தினர் என 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தலைப்பு செய்திகள்

மேட்டூர் அருகே மெய்சிலிர்க்க வைக்கும் வரலாற்று பொக்கிஷம்! காவிரி கரையில் பூமிக்கு அடியில் 3,600 ஆண்டுகால மர்மம் உடைந்தது!
மேட்டூர் அருகே மெய்சிலிர்க்க வைக்கும் வரலாற்று பொக்கிஷம்! காவிரி கரையில் பூமிக்கு அடியில் 3,600 ஆண்டுகால மர்மம் உடைந்தது!
பாமகவில் மீண்டும் பூகம்பம்; ராமதாஸ் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறார்? - போட்டுடைத்த பாமக முன்னாள் எம்.எல்.ஏ
பாமகவில் மீண்டும் பூகம்பம்; ராமதாஸ் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறார்? - போட்டுடைத்த பாமக முன்னாள் எம்.எல்.ஏ
'இஎஸ்ஐ, பிஎஃப் கேட்கக்கூடாது’ ரூ.100 பத்திரத்தில் எழுதி வாங்கிக் கொள்ளும் கொத்தடிமை முறை - தூய்மை பணியாளர்களுக்கு நடக்கும் கொடுமை
'இஎஸ்ஐ, பிஎஃப் கேட்கக்கூடாது’ ரூ.100 பத்திரத்தில் எழுதி வாங்கிக் கொள்ளும் கொத்தடிமை முறை - தூய்மை பணியாளர்களுக்கு நடக்கும் கொடுமை
பெண்களுக்கு குட் நியூஸ் வருமா? தனியார் பஸ்களிலும் இலவச பயணம் வேணும்! வலுக்கும் புதிய கோரிக்கை
பெண்களுக்கு குட் நியூஸ் வருமா? தனியார் பஸ்களிலும் இலவச பயணம் வேணும்! வலுக்கும் புதிய கோரிக்கை

வீடியோ

நாகர்கோவில் LOCKUP DEATH உடற்கூராய்வில் அதிர்ச்சி! 3 போலீஸார் அதிரடி கைது!
பட்டப்பகலில் திருட்டு !கல்லாப்பெட்டி சூறையாடல்..மர்ம நபர் கைவரிசை..
+2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
TVK vs ADMK:
TVK vs ADMK: "ஆற்றாமையில் அழுகல்.. தீர்ந்துபோன சக்தி.." இபிஎஸ்-ஐ சரமாரியாக விமர்சித்த தவெக!
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
Embed widget