மேலும் அறிய

குடியேறும் போராட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் - தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

தருபுரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட வந்த மாற்றுத் திறனாளிகளை, காவல் துறையினர் தடுத்ததால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில குடியேறும் போராட்டம் நடைபெற்றது. இதில் அரசு உத்தரவை மதிக்காத ஆட்சியர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து, போராடிய மாற்றுத் திறனாளிகள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்தும், காவல் துறையினர் மாற்று த்திறனாளிகள் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் தோறும் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்த வேண்டும், 100 நாள் வேலைத் திட்டத்தில் உள்ள குளறுபடிகளை நீக்க பிடியோக்கள்  மூலம் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட 27 கோரிக்கைகளை வலியுறுத்தி,  குடியேறும் போராட்டத்திற்காக மாற்றுத் திறனாளிகள் ஒன்றிணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைவதற்கு முயற்சித்தனர். அப்பொழுது காவல் துறையினர் அவர்களை உள்ளே விடாமல் தடுத்தனர். இதனால்  காவல் துறையினருக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மாற்றுத் திறனாளிகள் திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சேலம் பிரதான சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து மாற்றுத் திறனாளிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

குடியேறும் போராட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் - தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு
 
அப்பொழுது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத் திறனாளிகள் நூற்றுக்கு மேற்பட்டவர் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், மாவட்ட ஆட்சியர் தங்களிடம் நேரடியாக குறைகளை கேட்டு அறிய வரும் வரை போராட்டத்தை கைவிட போவதில்லை என தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் மாவட்ட ஆட்சியர் மாற்றுத் திறனாளிகளை சந்திக்க வரவில்லை. இதனால் மனமுடைந்த மாற்றுத் திறனாளிகள் நாள் முழுக்க காத்திருந்தாலும் நம் மீது மாவட்ட நிர்வாகத்திற்கும், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறைக்கு இரக்கம் வராது.  இந்த ஆட்சியர் உள்ளிட்டோர் செயல்படாதவர்களாகவே இருக்கிறார்கள். எனவே நமது போராட்டத்தை மாநில அளவில் முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று முடிவு எடுத்து அவர்களாகவே போராட்டத்தை கைவிட்டு கலந்து சென்றனர். தொடர்ந்து ஐந்து மணி நேரத்திற்கு மேலாக மாற்றுத் திறனாளிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தலைப்பு செய்திகள்

வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
கோயில்களில் கொடிமரம் அமைக்கனுமா? அறநிலையத்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு - என்னென்ன?
கோயில்களில் கொடிமரம் அமைக்கனுமா? அறநிலையத்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு - என்னென்ன?
நீட் தேர்வை உடனே ரத்து செய்ங்க!- டெல்லி சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிரடி காட்டிய சௌமியா அன்புமணி!
நீட் தேர்வை உடனே ரத்து செய்ங்க!- டெல்லி சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிரடி காட்டிய சௌமியா அன்புமணி!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
கோயில்களில் கொடிமரம் அமைக்கனுமா? அறநிலையத்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு - என்னென்ன?
கோயில்களில் கொடிமரம் அமைக்கனுமா? அறநிலையத்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு - என்னென்ன?
நீட் தேர்வை உடனே ரத்து செய்ங்க!- டெல்லி சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிரடி காட்டிய சௌமியா அன்புமணி!
நீட் தேர்வை உடனே ரத்து செய்ங்க!- டெல்லி சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிரடி காட்டிய சௌமியா அன்புமணி!
Trump Tariff on India: போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
Samsung Silicon-Carbon Battery: சாம்சங் பிரியர்களுக்கு குட் நியூஸ்.! சிலிகான்-கார்பன் பேட்டரியுடன் வரும் கேலக்ஸி Z சீரிஸ்; என்ன சிறப்பு.?
சாம்சங் பிரியர்களுக்கு குட் நியூஸ்.! சிலிகான்-கார்பன் பேட்டரியுடன் வரும் கேலக்ஸி Z சீரிஸ்; என்ன சிறப்பு.?
iPhone 17 Price Hike: மக்களே.! ஐபோன் 17 வாங்குற ஐடியா இருந்தா உடனே போங்க; ஆகஸ்ட்ல எக்கச்சக்கமா விலை ஏறப்போகுது.!
மக்களே.! ஐபோன் 17 வாங்குற ஐடியா இருந்தா உடனே போங்க; ஆகஸ்ட்ல எக்கச்சக்கமா விலை ஏறப்போகுது.!
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
Embed widget