மேலும் அறிய

குடியேறும் போராட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் - தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

தருபுரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட வந்த மாற்றுத் திறனாளிகளை, காவல் துறையினர் தடுத்ததால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில குடியேறும் போராட்டம் நடைபெற்றது. இதில் அரசு உத்தரவை மதிக்காத ஆட்சியர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து, போராடிய மாற்றுத் திறனாளிகள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்தும், காவல் துறையினர் மாற்று த்திறனாளிகள் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் தோறும் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்த வேண்டும், 100 நாள் வேலைத் திட்டத்தில் உள்ள குளறுபடிகளை நீக்க பிடியோக்கள்  மூலம் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட 27 கோரிக்கைகளை வலியுறுத்தி,  குடியேறும் போராட்டத்திற்காக மாற்றுத் திறனாளிகள் ஒன்றிணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைவதற்கு முயற்சித்தனர். அப்பொழுது காவல் துறையினர் அவர்களை உள்ளே விடாமல் தடுத்தனர். இதனால்  காவல் துறையினருக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மாற்றுத் திறனாளிகள் திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சேலம் பிரதான சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து மாற்றுத் திறனாளிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

குடியேறும் போராட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் - தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு
 
அப்பொழுது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத் திறனாளிகள் நூற்றுக்கு மேற்பட்டவர் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், மாவட்ட ஆட்சியர் தங்களிடம் நேரடியாக குறைகளை கேட்டு அறிய வரும் வரை போராட்டத்தை கைவிட போவதில்லை என தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் மாவட்ட ஆட்சியர் மாற்றுத் திறனாளிகளை சந்திக்க வரவில்லை. இதனால் மனமுடைந்த மாற்றுத் திறனாளிகள் நாள் முழுக்க காத்திருந்தாலும் நம் மீது மாவட்ட நிர்வாகத்திற்கும், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறைக்கு இரக்கம் வராது.  இந்த ஆட்சியர் உள்ளிட்டோர் செயல்படாதவர்களாகவே இருக்கிறார்கள். எனவே நமது போராட்டத்தை மாநில அளவில் முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று முடிவு எடுத்து அவர்களாகவே போராட்டத்தை கைவிட்டு கலந்து சென்றனர். தொடர்ந்து ஐந்து மணி நேரத்திற்கு மேலாக மாற்றுத் திறனாளிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

New Year 2026: புத்தாண்டு பிறந்த முதல் நாடு; நமக்கு முன்பே புத்தாண்டு கொண்டாடும் நாடுகள் எவை.?
புத்தாண்டு பிறந்த முதல் நாடு; நமக்கு முன்பே புத்தாண்டு கொண்டாடும் நாடுகள் எவை.?
Edappadi Palanisamy: “உயிர் பயத்திலேயே தமிழக மக்கள் வாழ வேண்டுமா.?“ - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி
“உயிர் பயத்திலேயே தமிழக மக்கள் வாழ வேண்டுமா.?“ - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி
Russia Putin Ukraine War: “உக்ரைன் போரில் வெற்றி பெறுவோம்“; ஆண்டின் கடைசி உரையில் கூறிய புதின்; அப்போ ட்ரம்ப்போட முயற்சி.?!
“உக்ரைன் போரில் வெற்றி பெறுவோம்“; ஆண்டின் கடைசி உரையில் கூறிய புதின்; அப்போ ட்ரம்ப்போட முயற்சி.?!
Gold Rate Dec.31st: புத்தாண்டில் இன்ப அதிர்ச்சி; ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் விலை குறைந்த தங்கம்; தற்போதைய விலை என்ன.?
புத்தாண்டில் இன்ப அதிர்ச்சி; ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் விலை குறைந்த தங்கம்; தற்போதைய விலை என்ன.?
ABP Premium

வீடியோ

Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
New Year 2026: புத்தாண்டு பிறந்த முதல் நாடு; நமக்கு முன்பே புத்தாண்டு கொண்டாடும் நாடுகள் எவை.?
புத்தாண்டு பிறந்த முதல் நாடு; நமக்கு முன்பே புத்தாண்டு கொண்டாடும் நாடுகள் எவை.?
Edappadi Palanisamy: “உயிர் பயத்திலேயே தமிழக மக்கள் வாழ வேண்டுமா.?“ - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி
“உயிர் பயத்திலேயே தமிழக மக்கள் வாழ வேண்டுமா.?“ - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி
Russia Putin Ukraine War: “உக்ரைன் போரில் வெற்றி பெறுவோம்“; ஆண்டின் கடைசி உரையில் கூறிய புதின்; அப்போ ட்ரம்ப்போட முயற்சி.?!
“உக்ரைன் போரில் வெற்றி பெறுவோம்“; ஆண்டின் கடைசி உரையில் கூறிய புதின்; அப்போ ட்ரம்ப்போட முயற்சி.?!
Gold Rate Dec.31st: புத்தாண்டில் இன்ப அதிர்ச்சி; ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் விலை குறைந்த தங்கம்; தற்போதைய விலை என்ன.?
புத்தாண்டில் இன்ப அதிர்ச்சி; ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் விலை குறைந்த தங்கம்; தற்போதைய விலை என்ன.?
TASMAC liquor : புத்தாண்டில் மதுப்பிரியர்களுக்கு கொண்டாட்டம்.! டாஸ்மாக் சொன்ன சூப்பர் நியூஸ்
புத்தாண்டில் மதுப்பிரியர்களுக்கு கொண்டாட்டம்.! டாஸ்மாக் சொன்ன சூப்பர் நியூஸ்
Iran Economic Crisis: ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி; போராட்டத்தில் குதித்த மாணவர்கள்; ஒரு டாலருக்கு இவ்ளோ ரியாலா.?
ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி; போராட்டத்தில் குதித்த மாணவர்கள்; ஒரு டாலருக்கு இவ்ளோ ரியாலா.?
PONGAL GIFT TOKEN: வீட்டிற்கே வருது பொங்கல் பரிசு டோக்கன்.! எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்
வீட்டிற்கே வருது பொங்கல் பரிசு டோக்கன்.! எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்
2025ம் ஆண்டின் சிறந்த இரவு.. கோலியின் கையில் ஐபிஎல்.. RCB ரசிகர்களின் 18 வருட ஏக்கம்!
2025ம் ஆண்டின் சிறந்த இரவு.. கோலியின் கையில் ஐபிஎல்.. RCB ரசிகர்களின் 18 வருட ஏக்கம்!
Embed widget