மேலும் அறிய

தருமபுரியில் கல்லறை திருநாள்..உறவினரின் சமாதியில் மலர் தூவி மரியாதை செலுத்திய மக்கள்!

தருமபுரியில் கல்லறை திருநாளை ஒட்டி கிறிஸ்தவர்கள், உறவினரின் சமாதியில் மலர் தூவி மெழுகுவர்த்தி ஏற்றி மரியாதை செலுத்தினர்.

உயிர் நீத்த கிறிஸ்தவர்கள் சமாதியில் பூஜை செய்யும் நாளாக ஆண்டுதோறும் கல்லறை திருநாள் அனுசரிக்கப்படுகிறது. இன்று கல்லறை திருநாளையொட்டி தருமபுரி நகரப் பகுதி, மற்றும் வெளிப்புறத்தில் இருக்கும் கல்லறைகளில் பிரார்த்தனை செய்வதற்கு கிறிஸ்தவர்கள் காலை முதல் வரத் தொடங்கினர். சிறியவர் முதல் பெரியவர் வரை குடும்பத்தோடு கல்லறைக்குச் சென்று உறவினர்களின் சமாதியை சுத்தம் செய்து வழிபாடு மேற்கொண்டனர். சிலர் முன்னதாகவே சமாதிக்கு வர்ணம் பூசி மலர்கள் வைத்து அழகு படுத்தி இருந்தனர்.
 

தருமபுரியில் கல்லறை திருநாள்..உறவினரின் சமாதியில் மலர் தூவி மரியாதை செலுத்திய மக்கள்!
 
வடகிழக்கு பருவமழை தொடங்கியதை ஒட்டி கல்லறை திருநாளிலும்  இடைவிடாது மழை பெய்து வந்தாலும், மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் குடை பிடித்துக் கொண்டு கல்லறைக்கு சென்று மலர் தூவி, சிலுவைக்கு மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றியும், சாம்பிராணி புகையிட்டு வழிபாடு நடத்தினர். மேலும் உயிர் நீத்தவர்கள் விரும்பி சாப்பிட்ட பலகாரங்களை சமாதி முன் வைத்து மக்கள் வழிபாடு நடத்தினர். 

 
அரூர் பேருந்து நிலையத்தில், திமுக சார்பில் இந்தி திணிப்பு எதிராக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த துண்டறிக்கை வினியோகம்.
 
தமிழகத்தில் மத்திய பாஜக அரசு இந்தியை திணிக்க முயற்சி செய்து வருவதாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எதிர்த்து குரல் கொடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் இருமுடி கொள்கை தான், மூன்றாவது மொழிக்கு இடமில்லை என்ற போராட்டம் நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட, திமுக சார்பில் மாநில முழுவதும் பாராட்டுங்கள் நடைபெற்றது. தொடர்ந்து இந்தி திணிப்புக்கு எதிராக பொதுக்கூட்டங்கள் நடத்தி வருகின்றனர். 
 

தருமபுரியில் கல்லறை திருநாள்..உறவினரின் சமாதியில் மலர் தூவி மரியாதை செலுத்திய மக்கள்!
 
இந்நிலையில் தருமபுரி மேற்கு மாவட்ட திமுக சார்பில் அரூர் பேருந்து நிலையத்தில், கடைவீதி உள்ளிட்ட இடங்களில் திமுக மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் தலைமையில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் துண்டறிக்கை வினியோகம் செய்தனர். இதில் ஒரே நாடு, ஒரே மதம், ஒரு தேர்தல் என்ற வரிசையில், ஒரே மொழியை திணித்து மற்ற தேசிய இன மக்களின் மொழிகளை அழிக்க பார்க்கிறது. மேலும் இந்தி பேசும் மாநில மக்களை அரசியல் ரீதியாக கவருவதற்கு, மற்ற மொழி பேசும் மக்களை இரண்டாம் தர குடிமக்களாக பாஜக தலைமை கருதுகின்றது. தொடர்ந்து மத்திய அரசு, இந்தி அரசாக செயல்பட்டு வருவதாக வாசகங்களை அச்சிட்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ மனோகரன், மாவட்ட  துணை செயலாளர் ஆ.மணி, முருகன் பேரூராட்சி தலைவர் இந்திராணி துணை தலைவர் தனபால் நகர செயலாளர் முல்லைரவி  உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
"நீட் வினாத்தாள் லீக்கானது உண்மை" தேர்வு ரத்து செய்யப்படுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
Breaking News LIVE: ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு: ஆருத்ரா தொடர்பு குறித்து விசாரிக்கவேண்டும் - செல்வபெருந்தகை
Breaking News LIVE: ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு: ஆருத்ரா தொடர்பு குறித்து விசாரிக்கவேண்டும் - செல்வபெருந்தகை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Youtuber A2D issue  : யூடியூபரை சுத்துப்போட்ட கும்பல்! களத்தில் சென்னை POLICE! நடந்தது என்ன?Madurai News | அடிச்சது பாருங்க லக்..சிதறிய ரூ.500  நோட்டுகள் அள்ளிச் சென்ற மக்கள்Rahul Gandhi On Hathras | ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கிய அதிர்ச்சி சம்பவம்..ராகுலின் அதிரடி ACTIONSalem VCK cadre | ”கதையை முடிக்கிறேன் பாரு” மிரட்டும் விசிக நிர்வாகி! பெண் அலுவலருடன் வாக்குவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
"நீட் வினாத்தாள் லீக்கானது உண்மை" தேர்வு ரத்து செய்யப்படுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
Breaking News LIVE: ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு: ஆருத்ரா தொடர்பு குறித்து விசாரிக்கவேண்டும் - செல்வபெருந்தகை
Breaking News LIVE: ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு: ஆருத்ரா தொடர்பு குறித்து விசாரிக்கவேண்டும் - செல்வபெருந்தகை
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
Arun IPS: மெக்கானிக்கல் இன்ஜினியர் முதல் சென்னை கமிஷனர் வரை! யார் இந்த அருண் ஐ.பி.எஸ்.?
Arun IPS: மெக்கானிக்கல் இன்ஜினியர் முதல் சென்னை கமிஷனர் வரை! யார் இந்த அருண் ஐ.பி.எஸ்.?
வால்பாறை சுற்றுலா செல்ல பாஸ்ட் டேக் வசதி அறிமுகம் ; இனி சோதனை சாவடியில் காத்திருக்க வேண்டியதில்லை
வால்பாறை சுற்றுலா செல்ல பாஸ்ட் டேக் வசதி அறிமுகம் ; இனி சோதனை சாவடியில் காத்திருக்க வேண்டியதில்லை
கோவையில் சோகம்; தண்ணீர் தொட்டியில் தாய், மகள்கள் சடலமாக மீட்பு
கோவையில் சோகம்; தண்ணீர் தொட்டியில் தாய், மகள்கள் சடலமாக மீட்பு
Embed widget