மேலும் அறிய

சிறைச்சாலையில் 3 மாதத்தில் இரண்டு டன் காய்கறிகள் சாகுபடி - சேலம் திறந்த வெளி சிறையின் புதிய முயற்சி

தக்காளி, கத்திரிக்காய், வெண்டைக்காய், புடலங்காய், பீர்க்கங்காய், முள்ளங்கி பூசணி போன்ற பல்வேறு வகையான காய்கறிகளும், கீரை வகைகள், வாழைப்பழம் மற்றும் இளநீர் இங்கு சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.

சேலம் திறந்த வெளி சிறைச்சாலையில் கடந்த மூன்று மாதத்தில் இரண்டு டன் காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக சிறைத்துறை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் திறந்த வெளி சிறைச்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த சிறைச்சாலையில் நன்னடத்தை அடிப்படையில் 10 சிறை வாசிகள் உள்ளனர். மொத்தம் 10.5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இந்த சிறைச் சாலையில் தக்காளி, கத்திரிக்காய், வெண்டைக்காய், புடலங்காய், பீர்க்கங்காய், முள்ளங்கி பூசணி போன்ற பல்வேறு வகையான காய்கறிகளும், கீரை வகைகள், வாழைப்பழம் மற்றும் இளநீர் இங்கு சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. 

சிறைச்சாலையில் 3 மாதத்தில் இரண்டு டன் காய்கறிகள் சாகுபடி - சேலம் திறந்த வெளி சிறையின் புதிய முயற்சி

இதேபோல் 15 கால்நடைகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 1964 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திறந்தவெளி சிறை சாலை கரடு முரடான நிலப்பரப்பாக இருந்தது. கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த நிலப்பரப்பு சமன் செய்யப்பட்டு விளை நிலமாக மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. திறந்த வெளி சிறைச்சாலையின் செயல்பாடுகள் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சேலம் சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் கூறுகையில், இங்கு சிறைவாசிகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட வேளாண் சாகுபடி வாயிலாக கடந்த மூன்று மாதங்களில் இரண்டு டன் காய்கறிகள் விளைவிக்கப்பட்டுள்ளன என்றும், இங்கு விளைவிக்கப்பட்ட புடலங்காய், கத்திரிக்காய், முள்ளங்கி, பீட்ரூட் உள்ளிட்ட பல்வேறு வகையான காய்கறிகள் அனைத்தும் சேலம் மத்திய சிறைக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும் இங்கு வளர்க்கப்படும் பசு மாடுகளின் மூலம் இங்கிருந்து நாள்தோறும் சுமார் 15 லிட்டர் பால் உள்பட மாதத்திற்கு சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரையிலான காய்கறிகள் சிறைச்சாலைக்கு அனுப்புவதாகவும் அவர் தெரிவித்தார். எதிர்வரும் நாட்களில் மஞ்சள் மற்றும் கூடுதல் காய்கறிகளைக் உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்களை நடவு செய்யவும் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தில் ரசாயன கலப்பு இல்லாத இயற்கை உரங்களை பயன்படுத்தி மட்டுமே சாகுபடி செய்யப்படுவதால் விளை பொருட்கள் அனைத்தும் தரமானதாகவும் சுவையானதாகவும் இருக்கும் என்றும் சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறைச்சாலையில் 3 மாதத்தில் இரண்டு டன் காய்கறிகள் சாகுபடி - சேலம் திறந்த வெளி சிறையின் புதிய முயற்சி

சேலம் மத்திய சிறையில் உள்ள சிறைவாசிகள் நன்னடத்தை அடிப்படையில் இதுபோன்று விவசாயத்திற்காக பயன்படுத்தப்படுவதும், அதைக் கொண்டு சிறைச்சாலையில் உள்ள சிறைவாசிகளுக்கு இயற்கையான முறையில் உணவு அளிக்கப்படுவது மிகுந்த ஆரோக்கியத்தை ஏற்படுத்துவதாக கூறுகின்றனர். சேலம் மத்திய சிறையில் இந்த நடவடிக்கையை தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் செய்தால் சிறை வாசிகளுக்கு விவசாயம் குறித்த விழிப்புணர்வு கொடுப்பதோடு சிறை வாசிகளுக்கு இயற்கையான உணவு பொருட்கள் உணவில் சேர்க்க தமிழக அரசு நடவடிக்கை பட வேண்டும் என கூறுகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
கொந்தளித்த விவசாயிகள்.. பரபரப்பில் மயிலாடுதுறை..
கொந்தளித்த விவசாயிகள்.. பரபரப்பில் மயிலாடுதுறை..
TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
எஸ்பிபி-க்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் உதயமான ஜாம்பவான் பாடகர் - யாரு தெரியுமா? எப்படி?
எஸ்பிபி-க்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் உதயமான ஜாம்பவான் பாடகர் - யாரு தெரியுமா? எப்படி?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
Embed widget