மேலும் அறிய

தருமபுரி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை - கணக்கில் வராத 55,000 பறிமுதல்

அலுவலக கணக்கில் வராத 55 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் இருந்ததை லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர். இதனை கைப்பற்றிய இலஞ்ச ஒழிப்பு பிரிவு காவல் துறையினர் கைப்பற்றினர்

 தருமபுரி வட்டாட்சியர் அலுவலகம் அருகே  ஒருங்கிணைந்த பத்திர பதிவு அலுவலக வளாகம் செயல்பட்டு வருகிறது. இந்த  வளாகத்தில் தருமபுரி மேற்கு சார்பதிவாளர் அலுவலகம், இணை பதிவாளர் அலுவலகம், மாவட்ட பதிவாளர் (நிர்வாகம்) அலுவலகம், மாவட்ட பதிவாளர் (தணிக்கை) அலுவலகம் என ஐந்து அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பத்திர பதிவிற்கு வரும் பொதுமக்களிகற் அளவுக்கு அதிகமாக இலஞ்சம் பெறுவதாக, தருமபுரி மாவட்ட இலஞ்ச ஒழிப்பு துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. 
 

தருமபுரி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை - கணக்கில் வராத 55,000 பறிமுதல்
 
 
இதனையடுத்து தருமபுரி லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி இம்மானுவேல் ஞானசேகர் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் தருமபுரி மேற்கு சார் பதிவாளர் அலுவலகத்தில், அலுவலக கணக்கில் வராத 55 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் இருந்ததை லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர். இதனை கைப்பற்றிய இலஞ்ச ஒழிப்பு பிரிவு காவல் துறையினர் கைப்பற்றினர். தொடர்ந்து அலுவலகத்தில் 55 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் குறித்து தருமபுரி மேற்கு சார் பதிவாளர் லட்சுமிகாந்தன், மற்றும் அலுவலர்களிடம் இடம் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். தருமபுரி பத்திரவு பதிவு அலுவலகத்தில், இலஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தியதால்,பெரும் பரபரப்பானது.
 

 
தருமபுரியில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு - பட்டை நாமம் போட்டு ஒப்பாரி வைத்து போராட்டம் 
 
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி  அருகே சிப்காட் அமைக்க தமிழக அரசு அறிவித்தது. இதனால் சிப்காட் அமைக்க நல்லம்பள்ளி பகுதியில், சுமார் 1,773 ஏக்கர் நிலம் கையகப்படுத்தி உள்ளது.  மேலும் இப்பகுதிகளில் ஜவுளி பூங்கா  மற்றும்  எலக்ட்ரிக் பைக்குகள்  தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க உள்ளனர்.  மேலும் 400 ஏக்கர்  நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்த  சர்வே செய்து வருகின்றனர்.  

தருமபுரி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை - கணக்கில் வராத 55,000 பறிமுதல்
 
இதில்  அதியமான்கோட்டை அருகே உள்ள வெத்தலைக்காரன் கொட்டாய் சுற்றி உள்ள பகுதிகளில் சுமார் 400 ஏக்கருக்கு மேல்  விவசாய நிலங்கள் கையகப்படுத்த உள்ளனர்.  இந்த விவசாய நிலங்களில் நெல், கரும்பு, கேழ்வரகு, மரவள்ளி கிழங்கு, தொன்னை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்து வருகின்றனர். இதனால் தங்கள் விளை நிலங்களை கையகப்படுத்தாமல்  இதேப் பகுதியில் தரிசு நிலங்கள் உள்ளது. அந்த  இடங்களில் சிப்காட் அமைக்க வேண்டும் எனவும் கிராம மக்கள் தெரிவித்து, தங்கள் விளை நிலங்களை கையகப்படுத்த வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் அரசு அதிகாரிகள் நிலம் கையகப்படுத்தும் பணியினை தொடர்ந்து வருவதால், கிராம ம்க்கள் ஒன்றிணைந்து, தங்களது கிராமத்தில் உள்ள வீடுகளின் மீது  கருப்பு கொடி ஏந்தியும், கிராமத்தில உள்ள கோவில் அருகில் அமர்ந்து, வாயில் கறுப்பு துணி கட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
 

தருமபுரி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை - கணக்கில் வராத 55,000 பறிமுதல்
 
மேலும் ஆண்கள், பெண்கள், சிறியவர்கள் என அனைவரும்  நெற்றில் பட்டை நாமம் போட்டுக் கொண்டும், விவசாய நிலங்களை எடுக்க எதிர்ப்பு தெரிவித்து  பெண்கள் ஒப்பாரி வைத்து அழுது நூதன போராட்டத்தில் ஈடுப்பட்னர். தொடர்ந்து கிராம மக்களின் இந்த நூதன போராட்டத்தால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தலைப்பு செய்திகள்

"ராகுல் கிட்ட மேகதாது பத்தி ஏன் பேசல?" - விஜய்யைக் கேள்வி கேட்டு வெளுத்த இயக்குநர் கெளதமன்
எல்லாமே தளபதி மேஜிக்தான்! சேலத்து வண்டி வேடிக்கையில் கெத்து காட்டிய அமெரிக்க விஜய் ரசிகர்!
எல்லாமே தளபதி மேஜிக்தான்! சேலத்து வண்டி வேடிக்கையில் கெத்து காட்டிய அமெரிக்க விஜய் ரசிகர்!
சரசரவென உயரும் மேட்டூர் அணை? ஒரே நாளில் நீர்வரத்து அதிரடி உயர்வு... லேட்டஸ்ட் நிலவரம் இதோ!
சரசரவென உயரும் மேட்டூர் அணை? ஒரே நாளில் நீர்வரத்து அதிரடி உயர்வு... லேட்டஸ்ட் நிலவரம் இதோ!
மேகதாது அணை: 'சட்டத்திற்கு புறம்பானது' - சௌமியா அன்புமணி சாடல்
மேகதாது அணை: 'சட்டத்திற்கு புறம்பானது' - சௌமியா அன்புமணி சாடல்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget