மேலும் அறிய

தருமபுரி: மக்கள் பிரதிநிதிகளை புறக்கணித்து வரும் மாவட்ட நிர்வாகம் - அதிமுக எம்எல்ஏக்கள் போராட்டம்

திமுக ஆட்சி அமைத்ததில் இருந்து தருமபுரி சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு தராமல் திமுக மாவட்ட பொறுப்பாளர்களை வைத்து அரசு நிகழ்ச்சிகளை நடத்துவதாக புகார்.

தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து மக்கள் பிரதிநிதிகளை புறக்கணித்து வரும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்தினர்.
 
தருமபுரி மாவட்டத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி  5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ,பாலக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் அதிமுகவின் வேட்பாளர்கள் வெற்றி பெற்று எம்எல்ஏவாக உள்ளனர். இந்நிலையில் திமுக ஆட்சி அமைத்ததில் இருந்து தருமபுரி மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை அரசு நிகழ்ச்சிகளில் அழைப்பு தராமல் திமுக மாவட்ட பொறுப்பாளர்களை வைத்து பூமி பூஜை மற்றும் அரசு நிகழ்ச்சிகளை நடத்துவதாக புகார் இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று காலை அரூர் அடுத்த கீழானூர் வாணகயாற்றின் குறுக்கே ரூ.4.40 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம் அமைக்க திமுக மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி பூமி பூஜை செய்துள்ளார். இதற்கு அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமாருக்கு தகவல் தெரிவிக்காமல் நடைபெற்றுள்ளது.
 

தருமபுரி: மக்கள் பிரதிநிதிகளை புறக்கணித்து வரும் மாவட்ட நிர்வாகம் - அதிமுக எம்எல்ஏக்கள் போராட்டம்
 
தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் புறக்கணித்து திட்டங்கள் செயல்படுத்துவதாக கூறி, மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து, அதிமுகவின்  எம்எல்ஏக்கள் வே.சம்பத்குமார், ஏ.கோவிந்தசாமி இருவரும் தருமபுரி ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில்  ஈடுபட்டனர்.  
 
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அரூர் சட்டப்பேரவை உறுப்பினர் சம்பத்குமார், அரூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட கீழனூர் பகுதியில் 4 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கடந்த அதிமுக காலத்தில் பாலம் அமைப்பதற்கு அனுமதி பெறப்பட்ட நிலையில் இன்று தருமபுரி திமுக பொருப்பாளர் தடங்கம் சுப்பிரமணி பூமி பூஜை செய்துள்ளார். இப்பகுதியின் சட்டப்பேரவை உறுப்பினரான தனக்கு தகவல் தராமல் பூமி பூஜை நடைபெற்றுள்ளது . அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களை புறக்கணித்து பூமி பூஜைகள் மற்றும் திறப்பு விழாக்கள் நடைபெறுகிறது . இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் ஏற்கனவே  புகார் தெரிவித்தோம். ஆனால் அதிகாரிகள் தகவல் ஏதும் தராமல் பூமி பூஜை நடைபெற்று உள்ளது. தான் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் என்பதால் புறக்கணிக்கிறார்களா என்று சந்தேகமாக உள்ளது.
 

தருமபுரி: மக்கள் பிரதிநிதிகளை புறக்கணித்து வரும் மாவட்ட நிர்வாகம் - அதிமுக எம்எல்ஏக்கள் போராட்டம்
 
 
வேலூர் மாவட்டத்தில் அதிமுக மாவட்ட செயலாளர் அப்பு பாலத்தை திறந்து வைத்தார் என்பதற்காக வேலூர் காவல் துறை அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளது. அதேபோல் தருமபுரி மாவட்ட திமுக மாவட்ட பொருப்பாளர் தடங்கம் சுப்பிரமணி மீது வழக்கு பதிவு செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து புறக்கணித்து வரும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மாவட்ட திட்ட அலுவலர் பாபு பேச்சுவார்த்தை நடத்தி ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தது எடுத்து தர்ணா போராட்டத்தை கைவிட்டனர். மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சட்டமன்ற உறுப்பினர்கள் நடத்திய தர்ணா போராட்டத்தால், பெரும் பரபரப்பு நிலவியது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
TVK VIJAY: ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு.! 43 நிபந்தனைகளை விதித்த போலீஸ்- என்னென்ன தெரியுமா.?
ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு.! 43 நிபந்தனைகளை விதித்த போலீஸ்- என்னென்ன தெரியுமா.?
BJP ELECTION PLAN: தமிழகத்தை குறிவைக்கும் பாஜக.! பக்கா ஸ்கெட்ச் போட்டு 3 மத்திய அமைச்சர்களை களம் இறக்கிய அமித்ஷா
தமிழகத்தை குறிவைக்கும் பாஜக.! பக்கா ஸ்கெட்ச் போட்டு 3 மத்திய அமைச்சர்களை களம் இறக்கிய அமித்ஷா
ABP Premium

வீடியோ

DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
TVK VIJAY: ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு.! 43 நிபந்தனைகளை விதித்த போலீஸ்- என்னென்ன தெரியுமா.?
ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு.! 43 நிபந்தனைகளை விதித்த போலீஸ்- என்னென்ன தெரியுமா.?
BJP ELECTION PLAN: தமிழகத்தை குறிவைக்கும் பாஜக.! பக்கா ஸ்கெட்ச் போட்டு 3 மத்திய அமைச்சர்களை களம் இறக்கிய அமித்ஷா
தமிழகத்தை குறிவைக்கும் பாஜக.! பக்கா ஸ்கெட்ச் போட்டு 3 மத்திய அமைச்சர்களை களம் இறக்கிய அமித்ஷா
MGNREGA Scheme: 100 நாள் வேலை திட்டத்திற்கு கோவிந்தா.. மாநில அரசுகளின் தலையில் செலவை கட்டும் மத்திய அரசு
MGNREGA Scheme: 100 நாள் வேலை திட்டத்திற்கு கோவிந்தா.. மாநில அரசுகளின் தலையில் செலவை கட்டும் மத்திய அரசு
"கிறிஸ்தவம் என்றால் புனிதம்... என் பெயர் ஐயப்பன்" - கிறிஸ்துமஸ் விழாவில் திமுக எம்எல்ஏ ஆச்சரிய பேச்சு
வரலாற்று வெற்றியா? அடிச்சுவிடும் பாஜக - புள்ளி விவரங்களுடன் கிழித்து தொங்க விடும் ஜான் ப்ரிட்டாஸ்
வரலாற்று வெற்றியா? அடிச்சுவிடும் பாஜக - புள்ளி விவரங்களுடன் கிழித்து தொங்க விடும் ஜான் ப்ரிட்டாஸ்
Free Laptop: மாணவர்களுக்கு எப்போது முதல் லேப்டாப்? அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்ன அசத்தல் தகவல்!
Free Laptop: மாணவர்களுக்கு எப்போது முதல் லேப்டாப்? அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்ன அசத்தல் தகவல்!
Embed widget