மேலும் அறிய

தருமபுரி: மக்கள் பிரதிநிதிகளை புறக்கணித்து வரும் மாவட்ட நிர்வாகம் - அதிமுக எம்எல்ஏக்கள் போராட்டம்

திமுக ஆட்சி அமைத்ததில் இருந்து தருமபுரி சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு தராமல் திமுக மாவட்ட பொறுப்பாளர்களை வைத்து அரசு நிகழ்ச்சிகளை நடத்துவதாக புகார்.

தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து மக்கள் பிரதிநிதிகளை புறக்கணித்து வரும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்தினர்.
 
தருமபுரி மாவட்டத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி  5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ,பாலக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் அதிமுகவின் வேட்பாளர்கள் வெற்றி பெற்று எம்எல்ஏவாக உள்ளனர். இந்நிலையில் திமுக ஆட்சி அமைத்ததில் இருந்து தருமபுரி மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை அரசு நிகழ்ச்சிகளில் அழைப்பு தராமல் திமுக மாவட்ட பொறுப்பாளர்களை வைத்து பூமி பூஜை மற்றும் அரசு நிகழ்ச்சிகளை நடத்துவதாக புகார் இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று காலை அரூர் அடுத்த கீழானூர் வாணகயாற்றின் குறுக்கே ரூ.4.40 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம் அமைக்க திமுக மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி பூமி பூஜை செய்துள்ளார். இதற்கு அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமாருக்கு தகவல் தெரிவிக்காமல் நடைபெற்றுள்ளது.
 

தருமபுரி: மக்கள் பிரதிநிதிகளை புறக்கணித்து வரும் மாவட்ட நிர்வாகம் - அதிமுக எம்எல்ஏக்கள் போராட்டம்
 
தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் புறக்கணித்து திட்டங்கள் செயல்படுத்துவதாக கூறி, மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து, அதிமுகவின்  எம்எல்ஏக்கள் வே.சம்பத்குமார், ஏ.கோவிந்தசாமி இருவரும் தருமபுரி ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில்  ஈடுபட்டனர்.  
 
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அரூர் சட்டப்பேரவை உறுப்பினர் சம்பத்குமார், அரூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட கீழனூர் பகுதியில் 4 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கடந்த அதிமுக காலத்தில் பாலம் அமைப்பதற்கு அனுமதி பெறப்பட்ட நிலையில் இன்று தருமபுரி திமுக பொருப்பாளர் தடங்கம் சுப்பிரமணி பூமி பூஜை செய்துள்ளார். இப்பகுதியின் சட்டப்பேரவை உறுப்பினரான தனக்கு தகவல் தராமல் பூமி பூஜை நடைபெற்றுள்ளது . அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களை புறக்கணித்து பூமி பூஜைகள் மற்றும் திறப்பு விழாக்கள் நடைபெறுகிறது . இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் ஏற்கனவே  புகார் தெரிவித்தோம். ஆனால் அதிகாரிகள் தகவல் ஏதும் தராமல் பூமி பூஜை நடைபெற்று உள்ளது. தான் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் என்பதால் புறக்கணிக்கிறார்களா என்று சந்தேகமாக உள்ளது.
 

தருமபுரி: மக்கள் பிரதிநிதிகளை புறக்கணித்து வரும் மாவட்ட நிர்வாகம் - அதிமுக எம்எல்ஏக்கள் போராட்டம்
 
 
வேலூர் மாவட்டத்தில் அதிமுக மாவட்ட செயலாளர் அப்பு பாலத்தை திறந்து வைத்தார் என்பதற்காக வேலூர் காவல் துறை அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளது. அதேபோல் தருமபுரி மாவட்ட திமுக மாவட்ட பொருப்பாளர் தடங்கம் சுப்பிரமணி மீது வழக்கு பதிவு செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து புறக்கணித்து வரும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மாவட்ட திட்ட அலுவலர் பாபு பேச்சுவார்த்தை நடத்தி ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தது எடுத்து தர்ணா போராட்டத்தை கைவிட்டனர். மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சட்டமன்ற உறுப்பினர்கள் நடத்திய தர்ணா போராட்டத்தால், பெரும் பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

அனைத்து பெண்களுக்கும் இலவசப் பேருந்து பயணம்; எப்போது அமல்? அமைச்சர் பார்த்திபன் தகவல்
அனைத்து பெண்களுக்கும் இலவசப் பேருந்து பயணம்; எப்போது அமல்? அமைச்சர் பார்த்திபன் தகவல்
பத்மஸ்ரீ விருதுடன் சேலம் திரும்பிய சிற்பி ராஜா காளியப்பா கவுண்டர்: சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு
பத்மஸ்ரீ விருதுடன் சேலம் திரும்பிய சிற்பி ராஜா காளியப்பா கவுண்டர்: சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு
தமிழகத்திலேயே முதல் முறை; உயிர்பிழைத்த தாய், குழந்தை.. திக் திக் நிமிடங்களை வென்ற சேலம் மருத்துவர்கள் - நெகிழ்ச்சிப் பின்னணி
தமிழகத்திலேயே முதல் முறை; உயிர்பிழைத்த தாய், குழந்தை.. திக் திக் நிமிடங்களை வென்ற சேலம் மருத்துவர்கள் - நெகிழ்ச்சிப் பின்னணி
குற்றவாளிகளைப் பிடிக்க 'ரத்தப் பலி' - போலீஸ் ஸ்டேஷனில் நடந்த விசித்திர பூஜை
குற்றவாளிகளைப் பிடிக்க 'ரத்தப் பலி' - போலீஸ் ஸ்டேஷனில் நடந்த விசித்திர பூஜை

வீடியோ

TVK Reels Viral Video : எம்.எல்.ஏ CHAIR-ல் தவெகவினர்! தொடரும் ரீல்ஸ் அட்டூழியம்.. வைரல் வீடியோ
CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் போட்ட உத்தரவு என்ன?
CM Vijay: ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் போட்ட உத்தரவு என்ன?
CM Vijay: சமரசமே கூடாது! பெண்கள் பாதுகாப்பிற்காக ஐஏஎஸ், ஐபிஸ் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவு என்ன?
CM Vijay: சமரசமே கூடாது! பெண்கள் பாதுகாப்பிற்காக ஐஏஎஸ், ஐபிஸ் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவு என்ன?
முதலமைச்சர் விஜய் 6 மணி வரை தலைமைச் செயலகத்தில் இருப்பது எதற்கு தெரியுமா?
முதலமைச்சர் விஜய் 6 மணி வரை தலைமைச் செயலகத்தில் இருப்பது எதற்கு தெரியுமா?
CM Vijay: அந்த துயரத்திற்கு பிறகு! அடுத்த வாரம் கரூர் செல்லப்போகும் முதலமைச்சர் விஜய்?
CM Vijay: அந்த துயரத்திற்கு பிறகு! அடுத்த வாரம் கரூர் செல்லப்போகும் முதலமைச்சர் விஜய்?
Trump on Iran: அய்யா, இதுவாவது உண்மையா.! ஈரான் கேட்டதாக ட்ரம்ப் போட்ட புதிய பதிவு; என்ன சொல்லியிருக்கார் பாருங்க
அய்யா, இதுவாவது உண்மையா.! ஈரான் கேட்டதாக ட்ரம்ப் போட்ட புதிய பதிவு; என்ன சொல்லியிருக்கார் பாருங்க
விஜய் கட்சிக்கு விசிக செக் வைக்கிறதா? - திருமாவளவன் என்ன சொல்கிறார்?
விஜய் கட்சிக்கு விசிக செக் வைக்கிறதா? - திருமாவளவன் என்ன சொல்கிறார்?
Minister Ghilli Sarath : ’போதைப்பொருள் புகார்’ தவெக அமைச்சர் சரத் நீக்கம்..? – தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய் அணி..!
’போதைப்பொருள் புகார்’ தவெக அமைச்சர் சரத் நீக்கம்..?
பாக்யராஜூக்கு நிம்மதியாக அஞ்சலி கூட செலுத்த விடல...மீடியாவின் இரக்கமற்ற செயல்..ராதிகா வேதனை
பாக்யராஜூக்கு நிம்மதியாக அஞ்சலி கூட செலுத்த விடல...மீடியாவின் இரக்கமற்ற செயல்..ராதிகா வேதனை
Embed widget