மேலும் அறிய

வன்னியர் சங்க மாநாடு: ஒரே மேடையில் ராமதாஸ் - திருமா? பாமக கணக்கு இதுதானா?

கடந்த மாதம் ராமதாஸ் வெளியிட்ட நிழல் பட்ஜெட் தொடர்பாக பாமகவினர் திருமாவளவனை சந்தித்தது பரபரப்பாக பேசப்பட்டது.

விசிகவும் - பாமகவும் எதிரெதிர் துருவத்தில் இருந்தாலும், கடந்த சில நாட்களுக்கு முன்னர் விசிக தலைவர் திருமாவளவனை பாமகவின் முக்கிய நிர்வாகிகள் சந்தித்து வன்னியர் சங்க மாநாட்டிற்கான அழைப்பிதழை வழங்கி இருப்பது அரசியல் களத்தில் பேசு பொருளாகியுள்ளது. 2026-ல் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள சூழலில் இந்த இரண்டு கட்சிகளின் சந்திப்பும் திராவிடக் கட்சிகளை உற்று நோக்க வைத்திருக்கிறது.

சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் இப்போதே தீவிரமாக தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டது. அந்த வகையில் அதிமுக - பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்டு விட்டது. மறுபுறம் திமுக கூட்டணி சட்டமன்ற தேர்தலை தற்போது உள்ள கூட்டணிக் கட்சிகளோடே சந்திக்கப்போகிறதா அல்லது கூட்டணி மாறுமா என்பதெல்லாம் மில்லியன் டாலர் கேள்வியாகவே இருக்கிறது.

முக்கியமான சந்திப்பு

இச்சூழலில்தான் வட மாவட்டங்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பாமக மற்றும் விசிக சந்திப்பு நடைபெற்றிருக்கிறது. தமிழக அரசியலில் எதிரெதிர் திசையில் இந்த இரண்டு கட்சிகளும் இருந்தாலும் இந்த சந்திப்பு என்பது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

வரும் மே 11 ஆம் தேதி பாமக சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு நடைபெற உள்ளது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து பாமகவினரும் வன்னியர் சங்கத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொள்வார்கள் என்று தெரிகிறது.

12 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் மாநாடு

கடந்த 12 வருடங்களாக ஒரு சில காரணங்களால் இந்த மாநாடு நடத்தப்படாமல் இருந்தாலும் தற்போது மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளன.  மாநாடு நடைபெறும் இடத்திற்கே சென்று அன்புமணி ராமதாஸ் மாநாட்டு பணிகளை கவனித்து வருகிறார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மாநாடு நடைபெறுவதால் சாதி மத வேறுபாடு இல்லாமல் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அழைப்பு விடுத்திருக்கிறார்.

வாழ்த்து தெரிவித்த திருமாவளவன்

இச்சூழலில்தான் விசிக தலைவர் திருமாவளவனை சந்தித்த பாமகவின் முக்கிய நிர்வாகிகள், வன்னியர் சங்க மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என்று சால்வை அணிவித்து அவருக்கு அழைப்பிதழ் வழங்கியுள்ளனர். அப்போது மாநாடு வெற்றிபெற திருமாவளவன் வாழ்த்து தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

கடந்த மாதம் ராமதாஸ் வெளியிட்ட நிழல் பட்ஜெட் தொடர்பாக பாமகவினர் திருமாவளவனை சந்தித்தது பரபரப்பாக பேசப்பட்டது. 2026 சட்டமன்றத் தேர்தல் வர உள்ள சூழலில் எந்த கூட்டணியில் யார் இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவும் சூழலில் தற்போது மீண்டும் பாமகவினர் திருமாவளவனை சந்தித்திருப்பது திராவிடக் கட்சிகளை உற்று நோக்க வைத்திருக்கிறது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

திருப்பூரில் எஸ்.ஐ. படுகொலை: சட்டம் ஒழுங்கு எங்கே? எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!
திருப்பூரில் எஸ்.ஐ. படுகொலை: சட்டம் ஒழுங்கு எங்கே? எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!
Uttarkashi Cloudburst: கடவுளின் மரத்தை வெட்டியதுதான் உத்தரகாசி காட்டாற்று வெள்ளத்திற்கு காரணமா?
Uttarkashi Cloudburst: கடவுளின் மரத்தை வெட்டியதுதான் உத்தரகாசி காட்டாற்று வெள்ளத்திற்கு காரணமா?
அப்போது ஏன் குரல் கொடுக்கவில்லை ? அநீதியை ஏன் தட்டிக் கேட்கவில்லை ? - கேள்வி எழுப்பிய மேயர் பிரியா
அப்போது ஏன் குரல் கொடுக்கவில்லை ? அநீதியை ஏன் தட்டிக் கேட்கவில்லை ? - கேள்வி எழுப்பிய மேயர் பிரியா
TVK Vijay: விஜய் ஜாதகத்தில் ரகசியம்! திமுக-வை வெல்வாரா? ஜோதிடம் சொல்வது என்ன?
TVK Vijay: விஜய் ஜாதகத்தில் ரகசியம்! திமுக-வை வெல்வாரா? ஜோதிடம் சொல்வது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”ஏய் என்ன பேசிட்டு இருக்க”மேயருக்கு எதிராக போர்க்கொடி!அடித்துக் கொண்ட கவுன்சிலர்கள்
”ஷாருக்கானுக்கு தேசிய விருது ஒரு நியாயம் வேண்டாமா?”கொந்தளித்த நடிகை ஊர்வசி | Urvashi On  National Awards
காலியாகி கிடக்கும் கிராமம் ஒற்றை ஆளாய் நிற்கும் தாத்தா நாட்டாகுடியின் கண்ணீர் கதை | Sivagangai News
மோடி- துரை வைகோ சந்திப்பு! ஷாக்கான திமுகவினர்! காய் நகர்த்தும் பாஜக
TEA குடித்த டிரைவர் தற்கொலை முயற்சி விழுப்புரம் பணிமனையில் பரபரப்பு | Villupuram Driver Sucide

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருப்பூரில் எஸ்.ஐ. படுகொலை: சட்டம் ஒழுங்கு எங்கே? எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!
திருப்பூரில் எஸ்.ஐ. படுகொலை: சட்டம் ஒழுங்கு எங்கே? எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!
Uttarkashi Cloudburst: கடவுளின் மரத்தை வெட்டியதுதான் உத்தரகாசி காட்டாற்று வெள்ளத்திற்கு காரணமா?
Uttarkashi Cloudburst: கடவுளின் மரத்தை வெட்டியதுதான் உத்தரகாசி காட்டாற்று வெள்ளத்திற்கு காரணமா?
அப்போது ஏன் குரல் கொடுக்கவில்லை ? அநீதியை ஏன் தட்டிக் கேட்கவில்லை ? - கேள்வி எழுப்பிய மேயர் பிரியா
அப்போது ஏன் குரல் கொடுக்கவில்லை ? அநீதியை ஏன் தட்டிக் கேட்கவில்லை ? - கேள்வி எழுப்பிய மேயர் பிரியா
TVK Vijay: விஜய் ஜாதகத்தில் ரகசியம்! திமுக-வை வெல்வாரா? ஜோதிடம் சொல்வது என்ன?
TVK Vijay: விஜய் ஜாதகத்தில் ரகசியம்! திமுக-வை வெல்வாரா? ஜோதிடம் சொல்வது என்ன?
திருப்பூர், கோவை சம்பவங்கள்; காவல் நிலையத்தில்கூட சட்டம் ஒழுங்கு இல்லையா? கொந்தளித்த ஈபிஎஸ்!
திருப்பூர், கோவை சம்பவங்கள்; காவல் நிலையத்தில்கூட சட்டம் ஒழுங்கு இல்லையா? கொந்தளித்த ஈபிஎஸ்!
LIVE | Kerala Lottery Result Today (06.08.2025):
LIVE | Kerala Lottery Result Today (06.08.2025): வருகிறாள் தனலட்சுமி! லாட்டரியில் இன்று யாருக்கு என்ன பரிசுகள்?
திருப்பூரில் எஸ்எஸ்ஐ வெட்டி படுகொலை: அதிர்ச்சியில் முதல்வர்! ரூ.1 கோடி நிவாரணம்- 6 தனிப்படைகள் அமைப்பு
திருப்பூரில் எஸ்எஸ்ஐ வெட்டி படுகொலை: அதிர்ச்சியில் முதல்வர்! ரூ.1 கோடி நிவாரணம்- 6 தனிப்படைகள் அமைப்பு
கேரளாவில் பேரழிவு மழை: ரெட் அலர்ட் எச்சரிக்கை! வெள்ளத்தில் தத்தளிக்கும் மாவட்டங்கள்!
கேரளாவில் பேரழிவு மழை: ரெட் அலர்ட் எச்சரிக்கை! வெள்ளத்தில் தத்தளிக்கும் மாவட்டங்கள்!
Embed widget