மேலும் அறிய

அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை சீர்குலைந்து விட்டது - அமைச்சர் சிவசங்கர்

இந்தியாவிலேயே 21000க்கும் அதிமான பேருந்து இயங்கும் நிலை தமிழ்நாட்டில் மட்டும்தான் உள்ளது - போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர்

விழுப்புரம்:  அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை சீர்குலைந்து விட்டதாகவும் திமுக ஆட்சியில் போக்குவரத்து துறை சிறப்பாக செயல்படுவதாகவும் இந்தியாவிலையே அதிக அளவவில் அரசு பேருந்து இயக்ககூடிய மாநிலமாக உள்ளதாகவும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்  தெரிவித்துள்ளார்

தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு மற்றும் விருப்ப ஓய்வு பெற்றவர்கள் பணியின் போது உயிரிழந்த வாரிசு தாரர்களுக்கு பணி ஓய்வு கால பணப்பலன்கள் வழங்கும் நிகழ்வு வழுதரெட்டியிலுள்ள சட்டக்கல்லூரியில் போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்றது. இதில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி , சிறுபான்மையின நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் லட்சுமணன் புகழேந்தி, எம்பி ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.எஸ்.எஸ்.சிவசங்கர் கூறியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப்பொறுப்பேற்ற நாளிலிருந்து போக்குவரத்துத்துறை சிறப்பான முறையில் செயல்பட்டும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். இதுமட்டுமல்லாமல், போக்குவரத்துத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களின் நலனை கருத்தில்கொண்டு, கடந்த ஆட்சிக்காலத்தில் வழங்கப்படாமல் இருந்த நிலுவைத் தொகையினை எல்லாம் வழங்கி வருகிறார்கள்.

முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்கள்தான், போக்குவரத்துறையினை ஏற்படுத்தினார். அந்த வகையில், இந்தியாவிலேயே 21000க்கும் அதிமான பேருந்து இயங்கும் நிலை தமிழ்நாட்டில் மட்டும்தான் உள்ளது. இதுமட்டுமல்லாமல், போக்குவரத்துறை ஊழியர்கள் ஓய்வூ பெற்ற பின்னரும் ஓய்வூதியம் பெற்று பயனடைந்தும் வருகிறார்கள். டாக்டர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக 2006 முதல் 2011 வரையிலான கால கட்டத்தில் 15,000-க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் நியமிக்கப்பட்டனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் போக்குவரத்துத்துறையினை சீரமைத்து, அனைத்து பணியாளர்களும் மாதம் முதல் தேதியன்றே ஊதியம் பெறுகின்ற நிலையினை உருவாக்கிக் கொடுத்துள்ளார்கள். மேலும், பொதுமக்கள் நலனை கருத்திற்கொண்டு பேருந்து கட்டணத்தினை உயர்த்தாமல் உள்ளார்கள். இதுமட்டுமல்லாமல், மகளிர் கட்டணமில்லா பேருந்து சேவை வசதியினையும் தொடர்ந்து வழங்கி வருகிறார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் போக்குவரத்துறைக்கென்று கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆண்டொன்றுக்கு ரூ.2,500/- கோடி நிதியுதவி வழங்கி வருகிறார்கள். இதன் காரணமாகவே, போக்குவரத்துத்துறை ஊழியர்கள் மாதந்தோறும் ஊதியம் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்பொழுது தமிழ்நாடு முதலமைச்சர், புதியதாக பேருந்துகள் வாங்குவதற்கான நிதிஒதுக்கீடு செய்துள்ளார்கள். மேலும், அரசு போக்குவரத்து கழகத்திற்கும், கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்திற்கும் புதிய ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் நியமிக்கவும் அரசாணை வழங்கியுள்ளார்கள். எனவே, போக்குவரத்துத்துறை சிறப்பாக செயல்படுவதற்கும், போக்குவரத்துத்துறை பணியாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திக்கொள்ளவும் வழிவகை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்கள் என தெரிவித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

HDFC வாடிக்கையாளர் கவனத்திற்கு.. 14 மணி நேரத்திற்கு முடங்கப்போகும் சேவைகள்!
HDFC வாடிக்கையாளர் கவனத்திற்கு.. 14 மணி நேரத்திற்கு முடங்கப்போகும் சேவைகள்!
Breaking News LIVE:  ஜெயலலிதா புகைப்படம் தற்போது எல்லோருக்கும் தேவைப்படுகிறது - வி.கே.சசிகலா
Breaking News LIVE: ஜெயலலிதா புகைப்படம் தற்போது எல்லோருக்கும் தேவைப்படுகிறது - வி.கே.சசிகலா
Zika virus:உஷார்! அதிவேகமாக பரவும் ஜிகா வைரஸ்: மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
Zika virus:உஷார்! அதிவேகமாக பரவும் ஜிகா வைரஸ்: மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
PM Modi:அடுத்த 5 ஆண்டுகள் வறுமையை ஒழிக்க பாடுபடுவோம் - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு!
அடுத்த 5 ஆண்டுகள் வறுமையை ஒழிக்க பாடுபடுவோம் - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK PMK Alliance : பாமக போஸ்டரில் ஜெ. படம்! EPS மாஸ்டர் ப்ளான்!விறுவிறுக்கும் விக்கிரவாண்டிHathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
HDFC வாடிக்கையாளர் கவனத்திற்கு.. 14 மணி நேரத்திற்கு முடங்கப்போகும் சேவைகள்!
HDFC வாடிக்கையாளர் கவனத்திற்கு.. 14 மணி நேரத்திற்கு முடங்கப்போகும் சேவைகள்!
Breaking News LIVE:  ஜெயலலிதா புகைப்படம் தற்போது எல்லோருக்கும் தேவைப்படுகிறது - வி.கே.சசிகலா
Breaking News LIVE: ஜெயலலிதா புகைப்படம் தற்போது எல்லோருக்கும் தேவைப்படுகிறது - வி.கே.சசிகலா
Zika virus:உஷார்! அதிவேகமாக பரவும் ஜிகா வைரஸ்: மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
Zika virus:உஷார்! அதிவேகமாக பரவும் ஜிகா வைரஸ்: மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
PM Modi:அடுத்த 5 ஆண்டுகள் வறுமையை ஒழிக்க பாடுபடுவோம் - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு!
அடுத்த 5 ஆண்டுகள் வறுமையை ஒழிக்க பாடுபடுவோம் - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு!
Coolie: விக்ரமை தொடர்ந்து கூலி! ஒளிப்பதிவாளரை புக் செய்த லோகி! ரஜினி படத்தில் இணையும் பிரபலங்கள்?
Coolie: விக்ரமை தொடர்ந்து கூலி! ஒளிப்பதிவாளரை புக் செய்த லோகி! ரஜினி படத்தில் இணையும் பிரபலங்கள்?
TVK Vijay: திமுக வழியில் நடிகர் விஜய்! நீட் விவகாரத்தில் கொந்தளித்த தளபதி!
TVK Vijay: திமுக வழியில் நடிகர் விஜய்! நீட் விவகாரத்தில் கொந்தளித்த தளபதி!
அரசு வேலை வாங்கித் தருவதாக  ரூ. 5 லட்சம் மோசடி - போலி நிருபர் கைது
அரசு வேலை வாங்கித் தருவதாக  ரூ. 5 லட்சம் மோசடி - போலி நிருபர் கைது
Vijay Speech: ஜாலியா படிங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்- விஜய் அட்வைஸ்!
ஜாலியா படிங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்- விஜய் அட்வைஸ்!
Embed widget