சீமான் கைது செய்ய வாய்ப்பு குறைவுதான்.! ஆனால், இன்று இரவு முழுவதும் விசாரணை மேற்கொள்ளும் காவல்துறை..!
NTK Seeman: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் இன்று இரவு முழுக்க, காவல்துறை விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீமான் மீது பிரபல நடிகை அளித்த புகாரில் இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு , வளசரவாக்கம் காவல்துறை சம்மன் அனுப்பிய நிலையில், தருமபுரி சென்ற சீமான், விமான் மூலம் சென்னை வந்தடைந்தார். ஆனால், இன்று இரவு 8 மணிக்கு ஆஜராக வருமாறு, காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, காவல் நிலையம் புறப்பட்ட நிலையில், மீண்டும் நேரமானது நீட்டிக்கப்பட்ட நிலையில், சுமார் இரவு 9.30 மணியளவில் ஆஜராகினார்.
வளசரவாக்கத்தை சூழ்ந்த நாதகவினர்:
இந்த தருணத்தில் வளசரவாக்கம் காவல்துறை பகுதியில், நாதகவினர் குவிந்து வருகின்றனர். மேலும், அப்பகுதியில், ஆயுதப்படை காவல்துறயினர் பலத்த பாதுகாப்பில் ஈடுப்பட்டு உள்ளனர். இதனால், அப்பகுதியானது, பெரும் பரபரப்புடன் இருக்கிறது.
இந்நிலையில், இன்று இரவு சுமார் 12 மணி வரையிலும் சீமானிடம் விசாரணை செய்ய, காவல்துறை திட்டமிட்டிருக்கிறது. அப்போது, அவரிடம் 50க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டு, அந்த பதிலை நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கைது வாய்ப்பு குறைவு:
இந்த சூழ்நிலையில், சீமானை கைது செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும், நாளை சனி கிழமை மற்றும் நாளை மறுநாள் ஞாயிற்று கிழமை ஆகிய இரு தினங்கள் நீதிமன்றம் விடுமுறை என்பதால், சிறையில் வைக்க திட்டம் என்றும் கூறப்படுகிறது.
ஆனால், இன்று விசாரணை மட்டுமே நடைபெறும் என்றும், கேள்விகள் கேட்கப்பட்டு , பதில் பெறப்பட்டு பதிவு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும், கைது செய்யப்பட வாய்ப்பில்லை என தகவல் தெரிவிக்கின்றன. ஏனென்றால், காவல்துறை இன்று ஆஜராக கூறிய நிலையில், அதை ஏற்று ஆஜராகுகிறார். ஆஜராகவில்லை என்றால் மட்டுமே , விசாரணைக்கு ஒத்துழைப்பு இல்லை என கைது செய்யப்பட வாய்ப்பு இருக்கும் எனவும், அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவதால், கைது செய்யப்பட வாய்ப்பு குறைவு என்று கூறப்படுகிறது.
இதுமட்டுமன்றி, நாளை முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள். கைது செய்யப்பட்டா, தமிழ்நாட்டில் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபடுவர் நாதகவினர். இது திமுகவினருக்கு சிக்கலை ஏற்படுத்தும். இதன் காரணமாகவும், சீமானை கைது செய்ய வாய்ப்பு குறைவு என்றும், விசாரணை மட்டுமே இருக்கும் என்ற தகவல் தெரிவிக்கின்றன. எனினும், இன்று இரவுதான் சீமான் கைதாவாரா இல்லையா என்பது குறித்தான உறுதியான தகவல் தெரிய வரும்.
வளசரவாக்கம் காவல் நிலையம்:
வளசரவாக்கம் காவல்நிலையத்தில் விசாரணைக்காக ஆஜரானார் சீமான் #Seeman #SeemanHouse #SeemanIssue pic.twitter.com/UEgYk0qgsn
— Balaji (@_balajihere) February 28, 2025
Also Read: Seeman: விஜய் டயலாக்கை பேசிய சீமான்.! “அந்த பயம் இருக்கணும் “..கைதுக்கு பயப்படும் ஆள் நான் இல்லை.!
சீமான் மீதான பாலியல் புகார்:
சீமான் மீது, பிரபல நடிகை ஒருவர் அளித்த பாலியல் புகாரில், நேற்று விசாரணாக்கு ஆஜராகுமாறு , வளசரவாக்கம் காவல்துறை தெரிவித்தது. ஆனால், கட்சி பணிகள் காரணமாக ஆஜராகவில்லை என சீமான் தெரிவித்தார். இந்நிலையில், இன்று ஆஜராகுமாறு, சென்னை நீளாங்கரையில் உள்ள சீமான் வீட்டில், நேற்று, நோட்டீஸ் ஒட்டப்பட்டது. ஆனால், அந்த நோட்டீசை , சீமான் வீட்டீல் இருந்தவர்கள் கிழித்தது, காவல்துறையினருடன் தள்ளு முள்ளுவில் ஈடுபட்டது, பெரும் சர்சசையை கிளப்பியது. இதையடுத்து, 2 பேரை காவல்துறையினர் கைது செய்து கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை பதிவு செய்தனர்.
இந்நிலையில், இன்று தருமபுரியில் கட்சி பணி காரணமாக சென்ற சீமான், அதை முடிவித்துவிட்டு சேலம் விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு வந்தடைந்தார். இதையடுத்து, சென்னை வளசரவாக்கத்தில் உள்ள காவல் நிலையத்தில் விசாரணைக்காக , இன்று இரவு , சுமார் 9.30 மணியளவில் ஆஜராகினார்.
இந்நிலையி, நாம் தமிழர் கட்சி தலைமையிடமிருந்து, கட்சியினருக்கு , வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகவும், பெண்கள பாசறைக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால், நாதகவினர் பலர் வளசரவாக்கத்தில் குவிந்துள்ளனர். இதன் காரணமாக, ஆயுதப்படை காவலர்கள் பலர் , வளசரவாக்கம் காவல் நிலையத்தில் குவிந்து, தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விசாரணை தீவிரம்:
கடந்த 2011 ஆம் ஆண்டு நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக பிரபல நடிகை, தன்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தியதாக புகார் அளித்தார். ஆனால் சில நாட்களுக்கு வழக்கை வாபஸ் பெறுவதாகவும் வீடியோ வெளியிட்டிருந்தார். இதையடுத்து, கடந்த 2023 ஆம் ஆண்டும் , சீமானுக்கு எதிராக பாலியல் புகாரும், பணம் பறித்தாதாகவும் புகார் கொடுத்தார்
இதற்கிடையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், 2011 ஆம் ஆண்டு புகாரை ரத்து செய்யவேண்டும் என்று உயநீதிமன்றத்தில் மனு கொடுத்தார். ஆனால், நீதிமன்றம் ரத்து செய்யவில்லை.
இதையடுத்து, நீதிமன்றம் 12 வாரங்கள் காலக்கெடு விடுத்ததையடுத்து, வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்திய காவல்துறை, சீமானுக்கு நேரில் ஆஜராகுமாறு, வளசரவாக்கம் காவல்துறை சம்மன் அனுப்பிய நிலையில், இன்று இரவு சுமார் 9.30 மணியளவில் ஆஜராகினார். இந்நிலையில் வளசரவாக்கம் பகுதியில் , நாதகவினர் சூழ்ந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி வருகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசலுடனும், பரபரப்பாகவும் அப்பகுதி காட்சியளிக்கிறது.





















