மேலும் அறிய

I.N.D.I.A Alliance: ஆரம்பத்தில் இருந்தே நிதிஷ் பிரச்னைதான்; அவர் போனதால் I.N.D.I.A கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை - டி.ஆர். பாலு

Elections 2024: I.N.D.I.A கூட்டணியில் உள்ள திமுக மற்றும் காங்கிர்ஸ் கட்சிகளுக்கு இடையிலான தொகுதி பங்கீடு தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தை இன்று அதாவது ஜனவரி 28ஆம் தேதி நடைபெற்றது.

நிதிஷ்குமார் ஆரம்பத்தில் இருந்தே I.N.D.I.A  கூட்டணிக்குள் பிரச்னைதான். அவர் போனதால் I.N.D.I.A  கூட்டணிக்குள் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது எனத் தெரிவித்துள்ளார். காங்கிர்ஸ் கட்சியுடனான தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த டி.ஆர். பாலு, மக்களவை தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சியுடனான முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ளது. காங்கிரஸ் கட்சி தொகுதிப் பங்கீடு தொடர்பான விருப்பப் பட்டியலை வழங்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தரப்பில் விருப்பப் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. 

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தையின் முதற்கட்டம் நடைபெற்றது. இதில் திமுக தரப்பில் இருந்து டி.ஆர் பாலு, ஐ.பெரியசாமி, ஆ.ராசா, பொன்முடி மற்றும் நேரு ஆகியோரும், காங்கிரஸ் தரப்பில் முகுல் வாஷ்னிக், சல்மான் குர்ஷித், கே.எஸ் அழகிரி மற்றும் செல்வப் பெருந்தகை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 3 மணிக்கு பேச்சுவார்த்தை தொடங்கியது. 

 ”திருப்திகரமாக இருந்தது”

தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக - காங்கிரஸ் இடையே சுமார் 1 மணி நேரம் பேச்சுவார்த்தை நடந்து முடிந்தது. இதன்பின், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தி.மு.க.வுடன் நடந்த தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது. தொகுதி பங்கீடு தொடர்பாக மேற்கொண்டு பேசவேண்டிய விஷயங்களை வெகுவிரைவில் பேசுவோம்.

40 தொகுதிகளிலும் எவ்வாறு வெற்றி பெறுவது, எவ்வாறு வேட்பாளர்களை தேர்வு செய்வது, பா.ஜ.க., அ.தி.மு.க.வை எவ்வாறு எதிர்கொள்வது  என்பது குறித்து பேசினோம். திமுகவிடம் நாங்கள் தொகுதிப் பட்டியல் எதையும் வழங்கவில்லை"  என்றார். 

இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக், ”நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான முதல் பேச்சுவார்த்தை நீண்டநேரம் நடைபெற்றது.  தமிழ்நாடு மக்களின் நம்பிக்கையை பெறுவது எப்படி, ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் இணைந்து செயல்படுவது எப்படி என்பது குறித்து விவாதித்தோம். நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்துக்கே ஆபத்தை ஏற்படுத்தும் சக்திகளை ஆட்சியில் இருந்து அகற்றுவது குறித்து விவாதித்தோம். திமுகவுடன்  தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமானதாக இருந்தது" என்றார்.

காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும்?

2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டன. ஆனால், இந்த தேர்தலில் 15 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டுமென, காங்கிரஸ் விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனடிப்படையில் தான் இன்றைய பேச்சுவார்த்தையும் நடந்தது என தெரிகிறது. திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோதே, தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் 38 தொகுதிகளில் வெற்றி பெற்றது. எனவே, தற்போது ஆளுங்கட்சியாக இருப்பதால், மீண்டும் 38 தொகுதிகளில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என முனைப்பு காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
Pakistan Asim Munir CDF: அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
ED Vs Anil Ambani: அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
Pakistan Asim Munir CDF: அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
ED Vs Anil Ambani: அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
Udhayanidhi Stalin: ''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
Top Searched People: ஒரு நிமிஷம்.. இவங்கல்லாம் யாரு?.. 2025ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள்!
Top Searched People: ஒரு நிமிஷம்.. இவங்கல்லாம் யாரு?.. 2025ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள்!
Live-In is not illegal: “18 வயதை கடந்தவர்கள் லிவ்-இன் முறையில் வாழ சட்டப்படி தடை இல்லை“ - ராஜஸ்தான் நீதிமன்றம் அதிரடி
“18 வயதை கடந்தவர்கள் லிவ்-இன் முறையில் வாழ சட்டப்படி தடை இல்லை“ - ராஜஸ்தான் நீதிமன்றம் அதிரடி
Kanimozhi Slams BJP: ''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
Embed widget