மேலும் அறிய

‛கோயில் நிலத்தை அபகரித்தேனா...’ மாஜி அமைச்சர் பாஸ்கரன் கொந்தளிப்பு!

தவறு செய்பவர்கள் எந்த உயர் பதிவியில் இருந்தாலும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். கோயில் சொத்துக்களை காப்பாற்றுவது ஒவ்வொரு இந்து குடிமகனின் கடமை என அமைச்சர் பெரியகருப்பன் பேசிய நிலையில். ‛‛எதுவாக இருந்தாலும் சட்டப்படி நிரூபிக்கட்டும்" என்கிறார் மாஜி அமைச்சர் பாஸ்கரன்.

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஆட்சியில் சிவகங்கை தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சராகவும் ஜி.பாஸ்கரன் இருந்துவந்தார். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜி.பாஸ்கரன் மீது சிவகங்கை தி.மு.க நகர் செயலாளர் துரை ஆனந்த், தமிழ்நாடு முதல்வர் தனிப்பிரிவு மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

‛கோயில் நிலத்தை அபகரித்தேனா...’ மாஜி அமைச்சர் பாஸ்கரன் கொந்தளிப்பு!
 
அதில்...,"  சிவகங்கை நகர் பகுதியில் உள்ள இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான கெளரி விநாயகர்  கோயில் உள்ளது. இந்த கோயிலுக்குச் சொந்தமான 142 ஏக்கர் 8 செண்ட் இடம் சிவகங்கையில் உள்ளது. இந்த இடத்தில் சுமார் 11 ஏக்கர் நிலத்தை  முன்னாள் அமைச்சர்  ஜி.பாஸ்கரன் மற்றும் அவரது உறவினர்கள் அபகரித்துள்ளனர். கோயிலுக்கு சொந்தமான இடம் என்று தெரிந்தும்., முன்னாள் அமைச்சர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, சட்ட விரோதமாக இடத்தை அபகரித்து., அதில் கல்லுக்கால் ஊண்டி வேலி அமைத்து மிகப்பெரிய வணிக வளாகம் கட்டி வருகிறார்கள். மேலும், அக்கட்டிடத்திற்கு விதிமுறைகளை மீறி மின் இணைப்பு பெற்றுள்ளனர். எனவே,கோயில் நிலத்தை அபகரித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து இடத்தை மீண்டும் கோயிலுக்கே உரிமையாக்கவேண்டும். அத்துடன் விதிமுறைகளை மீறி மின் இணைப்பு கொடுத்த அதிகாரிகள் மற்றும் இடத்தை அபகரிக்க உடந்தையாக இருந்த அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் மீதும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

‛கோயில் நிலத்தை அபகரித்தேனா...’ மாஜி அமைச்சர் பாஸ்கரன் கொந்தளிப்பு!
 
 
இந்நிலையில் சிவகங்கையில அர்ச்சகர்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்....," கடந்த இரண்டு, மூன்று தினமாக சிவகங்கையில் பேச்சு அடிபடுகிறது. அதை பத்திரிக்கையிலும் பார்த்தேன் எனக்கு தனிப்பட்டு புகாரும் வந்துள்ளது. சிவகங்கை மாவட்ட ஆட்சியருக்கும் அந்த புகார் சென்றிருக்கும் என நினைக்கிறேன். சிவகங்கை கெளரி விநாயகர் கோயிலுக்கு பாத்தியப்பட்ட இடத்தில் முன்னாள் அமைச்சர் ஒருவர் போலி பத்திரங்கள் மூலம் சொத்துக்களை அபகரித்துள்ளதாக அந்த புகாரில் உள்ளது. தவறு செய்பவர்கள் எந்த உயர் பதிவியில் இருந்தாலும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். கோயில் சொத்துக்களை காப்பாற்றுவது ஒவ்வொரு இந்து குடிமகனின் கடமை” என்றும் தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் குறித்து தற்போது அமைச்சர் பெரியகருப்பன் மறைமுகமாக எச்சரித்துள்ளது சிவகங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

‛கோயில் நிலத்தை அபகரித்தேனா...’ மாஜி அமைச்சர் பாஸ்கரன் கொந்தளிப்பு!
 
இது குறித்து இரத்தின் இரத்தங்கள் சிலர் தெரிவிக்கையில்...," முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் பெயரை கெடுக்க வேண்டும் என அவதூறு பரப்புகின்றனர். கோயில் சொத்துக்களை அபகரித்து, மாற்றியதாக எந்த  ஆதாரமும் இல்லை. எனவே பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்ப வேண்டாம்" என்றனர்.
 

‛கோயில் நிலத்தை அபகரித்தேனா...’ மாஜி அமைச்சர் பாஸ்கரன் கொந்தளிப்பு!
 
மேலும் இது குறித்து முன்னாள் அமைச்சர் பாஸ்கரனிடம் பேசினோம்....," அவர்கள் சொல்லும் குற்றச்சாட்டுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. எதுவாக இருந்தாலும் சட்டப்படி நிரூபிக்கட்டும்" என்றார்.
 
முன்னாள் அமைச்சர் மீது குற்றச்சாட்டு தொடர்பாக சிவகங்கை மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
 

தலைப்பு செய்திகள்

Udhayanidhi:
"சட்டசபையில் தலைவர் ஸ்டாலினை Miss பண்றேன்" - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
6 மாதத்தைக் கூட தாண்ட மாட்டார்கள்! - புதுச்சேரி அரசுக்கு எதிராக நீதிமன்றம் செல்ல காங்கிரஸ் முடிவு!
6 மாதத்தைக் கூட தாண்ட மாட்டார்கள்! - புதுச்சேரி அரசுக்கு எதிராக நீதிமன்றம் செல்ல காங்கிரஸ் முடிவு!
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
ஆ.ராசா அவதூறுக்கு பதிலடி ; திமுகவுக்கு அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை
ஆ.ராசா அவதூறுக்கு பதிலடி ; திமுகவுக்கு அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi:
"சட்டசபையில் தலைவர் ஸ்டாலினை Miss பண்றேன்" - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
US Strikes Iran: மத்திய கிழக்கில் மீண்டும் போர்.? ஹார்முஸ் விவகாரத்தால் கெட்ட கடுப்பில் ட்ரம்ப்; ஈரான் மீது குண்டு மழை
மத்திய கிழக்கில் மீண்டும் போர்.? ஹார்முஸ் விவகாரத்தால் கெட்ட கடுப்பில் ட்ரம்ப்; ஈரான் மீது குண்டு மழை
IND Vs ENG T20: 20 வருடங்களில் இல்லாத மோசமான தோல்வி..! இங்கிலாந்திடம் வீழ்ந்த இந்தியா - 76 ரன்களுக்கு ஆல்-அவுட்
20 வருடங்களில் இல்லாத மோசமான தோல்வி..! இங்கிலாந்திடம் வீழ்ந்த இந்தியா - 76 ரன்களுக்கு ஆல்-அவுட்
TN Weather Update: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம்? - தமிழக வானிலை அறிக்கை
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம்? - தமிழக வானிலை அறிக்கை
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
Oben Rorr EVO: ஒரே சார்ஜில் 180 கிமீ மைலேஜ் பாஸ்.! Oben Rorr EVO-க்கு குவிந்த புக்கிங்; டெலிவரி தொடக்கம்; பைக்கில் என்ன ஸ்பெஷல்.?
ஒரே சார்ஜில் 180 கிமீ மைலேஜ் பாஸ்.! Oben Rorr EVO-க்கு குவிந்த புக்கிங்; டெலிவரி தொடக்கம்; பைக்கில் என்ன ஸ்பெஷல்.?
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
Embed widget