மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Madurai: பொங்கல் தொகுப்பில் கரும்பு இடம்பெறாதது ஏன்? - அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்
பொங்கலுக்கு கொடுக்கும் பொருட்களையெல்லாம் புகார் சொல்கிறார்கள்- பொங்கலுக்கு தேவையான பொருட்களை வாங்கவே 1000ரூபாயை முதல்வர் கொடுத்துள்ளார் என அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களுக்கு பேட்டி.
![Madurai: பொங்கல் தொகுப்பில் கரும்பு இடம்பெறாதது ஏன்? - அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் Minister A. V. Velu interviewed that the Chief Minister has given 1000 rupees to buy the necessary items for Pongal Madurai: பொங்கல் தொகுப்பில் கரும்பு இடம்பெறாதது ஏன்? - அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/23/58bc732285f05ea33b7f3fc0558acac31671812994245184_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மதுரை கலைஞர் நூலகம்
மதுரையில் 114 கோடி ரூபாய் செலவில் மதுரை புதுநத்தம் சாலையில் அமைந்துள்ள பொதுப்பணித்துறை குடியிருப்பு வளாகத்தில், 2 லட்சத்து 40ஆயிரம் சதுர அடி பரப்பில், 7 தளக்ககளுடன் கருணாநிதி பெயரில், சர்வதே தரத்தில் நுாலகம் அமைக்கப்பட்டு வருகிறது. நூலகம் கட்ட 99 கோடி ரூபாயும், புத்தக கொள்முதல், புத்தகங்களை டிஜிட்டல் வழிக்கு மாற்ற 10 கோடி ரூபாய், தொழில்நுட்ப கருவிகள் வாங்க, 5 கோடி ரூபாய் என 114 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கலைஞர் நினைவு நூலக பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, அமைச்சர் மூர்த்தி, பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளோடு இறுதிகட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
![Madurai: பொங்கல் தொகுப்பில் கரும்பு இடம்பெறாதது ஏன்? - அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/23/b2b0cb505407b95e5013dd0562d0a68b1671812531251184_original.jpeg)
தொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து பேசுகையில் “தென்னகத்தை அடிப்படையாக வைத்து தான் கலைஞர் நூலகத்தை அமைக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் விரும்பினார். கலைஞர் நூலக கட்டிட பணிகள் ஜனவரி மாதத்திற்குள் முழுமையாக நிறைவு பெற்றுவிடும். கலைஞர் நூலக திப்பு விழா குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார். 80 % முகப்பு மற்றும் தோரண வாயில் பணிகளும், குழந்தைகள் பிரிவில் 75 சதவீத பணிகளும், தமிழ்ப்பிரிவு தனியாக அமைக்கப்பட்டு வருகிறது. முழுமையாக அனைத்து பத்திரிக்கைகளையும் படிக்கும் வகையில் அமெரிக்காவில் உள்ளது போன்ற பர்னிச்சர்களை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது கலைஞர் நூலகத்தில் 90 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன. விரைவில் நூலகம் திறக்கப்படும்” என்றார்.
![Madurai: பொங்கல் தொகுப்பில் கரும்பு இடம்பெறாதது ஏன்? - அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/23/74ff6e172caea569ae8ebcc879a6a9ad1671812590809184_original.jpeg)
பொங்கலுக்கு கரும்பு கொடுக்கவில்லை என விவசாயிகள் போராட்டம், குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, “பொங்கலுக்கு கரும்பு கொடுத்தால் அரைக்கரும்பு, முழுக்கரும்பு, கால்கரும்பு கொடுப்பதாக புகார் சொல்கிறார்கள். வெல்லம், முந்திரி கொடுத்தாலும் சின்ன முந்திரி, உடைந்துள்ளது, வெல்லம் ஒழுகுகிறது, ஏலக்காய் சிறியதாக உள்ளது என புகார் சொல்கிறார்கள். அதனால் தான் முதல்வர் பொங்கலுக்கு வேண்டியதெல்லாம் வாங்கி கொள்ள 1000 ரூபாய் கொடுத்து உள்ளார். தமிழகத்தில் காலாவதியான 58 டோல்கேட் குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன். ஜனவரி 3,4ம் தேதி டெல்லியில் அமைச்சர் நிதின்கட்கரியை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். இந்தப்பிரச்சினைகள் குறித்து எடுத்து கூற உள்ளேன். கப்பலூர் கிருஷ்ணகிரி டோல்கேட் காலாவதியான டோல்கேட். பல சுங்கச்சாவடிகள் சாலை விரிவாக்கம் மற்றும் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருவதால் 40 % கட்டணம் பெற்றுக்கொள்ள கூறியுள்ளோம். கப்பலூர், கிருஷ்ணகிரி டோல்கேட் குறித்து ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளேன்” என்றார்.
![Madurai: பொங்கல் தொகுப்பில் கரும்பு இடம்பெறாதது ஏன்? - அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/23/5b63c0e70612fd6570797554a08cb4a91671812682577184_original.jpeg)
தமிழகத்தில் சாலை விபத்துக்கள் அதிகம் என புள்ளிவிவரங்கள் வெளியாகி உள்ளது குறித்த கேள்விக்கு, ”சாலை பாதுகாப்புக்கு எந்த அமைச்சரும் உட்காந்து கொண்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆய்வு கூட்டம் நடத்தியதில்லை. நாங்கள் சாலைப்பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து பணியாற்றி வருகிறோம். சாலை பாதுகாப்புக்கு மத்திய அரசு குறிப்பிட்ட பிளாக் ஸ்பாட் எனப்படும் 1337 இடங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சாலைப்பாதுகாப்பில் தமிழகத்தை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பாராட்டி தமிழகத்தை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் பாராட்டியுள்ளனர்” என பேசினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
தமிழ்நாடு
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion