மேலும் அறிய

"இந்திரா காந்தி எங்கள ஜெயில போட்டாங்களே தவிர, டார்ச்சர் செய்யல" அவசரநிலை பற்றி லாலு பிரசாத் ஓபன் டாக்! 

எமர்ஜென்சியின்போது இந்திரா காந்தி தங்களை சிறையில் அடைத்தாலும் கொடுமைப்படுத்தியதில்லை என பிகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.

கடந்த 1975ஆம் ஆண்டு, ஜூன் 25ஆம் தேதி, நள்ளிரவில், அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் ஆலோசனையின் பேரில், அப்போதைய குடியரசு தலைவர் ஃபக்ருதீன் அலி அகமது இந்தியாவில் அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். இந்த அறிவிப்பு மார்ச் 21, 1977 வரை அமலில் இருந்தது.

அவசரநிலை பற்றி நினைவுகூர்ந்த லாலு பிரசாத்:

அவசர நிலை காலத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். ஊடகங்கள் மீது கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அவசர நிலை அமல்படுத்தப்பட்டதை நினைவுகூரும் விதமாக நாடாளுமன்றத்தில் மூன்று நாள்களுக்கு முன்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு இந்தியா கூட்டணி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிலையில், அவசரநிலை குறித்து மனம் திறந்த பிகார்  மாநில முன்னாள் முதலமைச்சரும் ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவ், இந்திரா காந்தி தங்களை சிறையில் அடைத்ததாகவும் ஆனால் கொடுமைப்படுத்தவில்லை என கூறியுள்ளார்.

தற்போது, இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்தாலும் அவசரநிலை காலத்தில் இந்திரா காந்தியின் காங்கிரஸ் கட்சியை கடுமையாக எதிர்த்தவர் லாலு பிரசாத். இவர் உள்பட ஜனதா கட்சியை சேர்ந்த நிதிஷ் குமார், மறைந்த சரத் யாதவ், முலாயம் சிங் யாதவ் உள்பட பலர் அந்த சமயத்தில் கைது செய்யப்பட்டனர்.

"சுதந்திரத்தின் விழுமியத்தை பற்றி பாடம் எடுக்கும் பாஜக"

எமர்ஜென்சி காலத்தில் தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்ட லாலு பிரசாத், "அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் அமல்படுத்தப்பட்ட அவசரநிலை அத்துமீறலுக்கு எதிரான இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல ஜெயப்பிரகாஷ் நாராயண் அமைத்த வழிநடத்தல் குழுவின் ஒருங்கிணைப்பாளராக நான் இருந்தேன்.

நான் 15 மாதங்களுக்கும் மேலாக பாதுகாப்புச் சட்டத்தின் (MISA) கீழ் சிறையில் இருந்தேன். இன்று எமர்ஜென்சி பற்றி பேசும் பாஜக அமைச்சர்கள் பலரை எனக்கும் எனது சகாக்களுக்கும் தெரியாது. மோடி, ஜே. பி. நட்டா மற்றும் தற்போது இருக்கும் மற்ற அமைச்சர்களை பற்றி எமர்ஜென்சியின்போது, நாங்கள் கேள்விப்பட்டதே இல்லை. அவர்கள் இன்று நமக்கு சுதந்திரத்தின் விழுமியத்தை பற்றி பாடம் எடுக்கிறார்கள்.

இந்திரா காந்தி எங்களில் பலரை சிறையில் அடைத்தார். ஆனால் அவர் எங்களை ஒருபோதும் கொடுமைப்படுத்தியதில்லை. அவரோ அவரது அமைச்சர்களோ எங்களை "தேச விரோதிகள்" அல்லது "தேசபக்தி இல்லாதவர்கள்" என்று அழைக்கவில்லை.

நமது அரசியலமைப்பின் சிற்பியான பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவைக் கெடுக்கும் வன்முறையாளர்களுக்கு அவர் ஒருபோதும் உதவவில்லை. 1975ஆம் ஆண்டு, நமது ஜனநாயகத்தின் மீது ஒரு களங்கம் ஏற்பட்டது. ஆனால், 2024இல் எதிர்க்கட்சிகளை மதிக்காதவர்கள் யார் என்பதை மறந்து விடக்கூடாது" என்றார்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA, T20 Worldcup Final: கோப்பையை வெல்லப்போவது யார்? ஜோதிடர்களின் கணிப்பு! மைதானத்தில் இருந்து வரும் நேரடித் தகவல்கள்!
கோப்பையை வெல்லப்போவது யார்? ஜோதிடர்களின் கணிப்பு! மைதானத்தில் இருந்து வரும் நேரடித் தகவல்கள்!
Breaking News LIVE: சென்னையில் கழிவுநீர் கலந்த மெட்ரோ குடிநீரை குடித்த சிறுவன் உயிரிழப்பு?: அதிகாரிகள் ஆய்வு
Breaking News LIVE: சென்னையில் கழிவுநீர் கலந்த மெட்ரோ குடிநீரை குடித்த சிறுவன் உயிரிழப்பு?: அதிகாரிகள் ஆய்வு
T20 World Cup Prize Money: டி20 உலகக்கோப்பை மகுடம்! யாருக்கு எவ்வளவு பரிசுத்தொகை? எத்தனை கோடி தெரியுமா?
T20 World Cup Prize Money: டி20 உலகக்கோப்பை மகுடம்! யாருக்கு எவ்வளவு பரிசுத்தொகை? எத்தனை கோடி தெரியுமா?
T20 World Cup 2024 Final: சண்டே மட்டும்தான் கஷ்டம்... மத்தபடி கப் நமக்குத்தான்! குஷியில் இந்திய ரசிகர்கள்! வரலாறு சொல்வது என்ன?
சண்டே மட்டும்தான் கஷ்டம்... மத்தபடி கப் நமக்குத்தான்! குஷியில் இந்திய ரசிகர்கள்! வரலாறு சொல்வது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோT20 World Cup Final :  இறுதிப்போட்டியில் இந்தியா..வீழ்த்துமா தென்னாப்பிரிக்கா?மகுடம் சூடப்போவது யார்?Dharmapuri Gender Reveal Issue : வசமாக சிக்கிய கும்பல்..LEFT&RIGHT வாங்கிய அதிகாரிBussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA, T20 Worldcup Final: கோப்பையை வெல்லப்போவது யார்? ஜோதிடர்களின் கணிப்பு! மைதானத்தில் இருந்து வரும் நேரடித் தகவல்கள்!
கோப்பையை வெல்லப்போவது யார்? ஜோதிடர்களின் கணிப்பு! மைதானத்தில் இருந்து வரும் நேரடித் தகவல்கள்!
Breaking News LIVE: சென்னையில் கழிவுநீர் கலந்த மெட்ரோ குடிநீரை குடித்த சிறுவன் உயிரிழப்பு?: அதிகாரிகள் ஆய்வு
Breaking News LIVE: சென்னையில் கழிவுநீர் கலந்த மெட்ரோ குடிநீரை குடித்த சிறுவன் உயிரிழப்பு?: அதிகாரிகள் ஆய்வு
T20 World Cup Prize Money: டி20 உலகக்கோப்பை மகுடம்! யாருக்கு எவ்வளவு பரிசுத்தொகை? எத்தனை கோடி தெரியுமா?
T20 World Cup Prize Money: டி20 உலகக்கோப்பை மகுடம்! யாருக்கு எவ்வளவு பரிசுத்தொகை? எத்தனை கோடி தெரியுமா?
T20 World Cup 2024 Final: சண்டே மட்டும்தான் கஷ்டம்... மத்தபடி கப் நமக்குத்தான்! குஷியில் இந்திய ரசிகர்கள்! வரலாறு சொல்வது என்ன?
சண்டே மட்டும்தான் கஷ்டம்... மத்தபடி கப் நமக்குத்தான்! குஷியில் இந்திய ரசிகர்கள்! வரலாறு சொல்வது என்ன?
CM Stalin: கொடநாடு வழக்கில் இன்டர்போல், கள்ளக்குறிச்சிக்கு எதுக்கு சிபிஐ? - 2026-லும் திமுக தான் - ஸ்டாலின் அதிரடி
CM Stalin: கொடநாடு வழக்கில் இன்டர்போல், கள்ளக்குறிச்சிக்கு எதுக்கு சிபிஐ? - 2026-லும் திமுக தான் - ஸ்டாலின் அதிரடி
Liquor Prohibition Amendment Bill: பூரண மதுவிலக்கிற்கான ஆசை இருந்தும், சூழல் இல்லை - கடைகளை குறைத்தும் பயனில்லை - அமைச்சர் முத்துசாமி
Liquor Prohibition Amendment Bill: பூரண மதுவிலக்கிற்கான ஆசை இருந்தும், சூழல் இல்லை - கடைகளை குறைத்தும் பயனில்லை - அமைச்சர் முத்துசாமி
Home Loan: வீட்டுக் கடனை சீக்கிரம் அடைக்கணுமா? அப்ப இந்த 5 வழிகளை ஃபாலோ பண்ணுங்களேன்!
Home Loan: வீட்டுக் கடனை சீக்கிரம் அடைக்கணுமா? அப்ப இந்த 5 வழிகளை ஃபாலோ பண்ணுங்களேன்!
Bihar: ஆத்தாடி! 9 நாட்களில் 5வது சம்பவம், கட்டிக் கொண்டிருக்கும்போதே இடியும் பாலங்கள் - பீகாரில் தொடரும் பீதி!
Bihar: ஆத்தாடி! 9 நாட்களில் 5வது சம்பவம், கட்டிக் கொண்டிருக்கும்போதே இடியும் பாலங்கள் - பீகாரில் தொடரும் பீதி!
Embed widget