மேலும் அறிய

கோவில்பட்டியில் பேசிய துரை வைகோ.. காஞ்சிபுரத்தில் கூண்டோடு கலைந்த மதிமுக..!

துரை வைகோ கோவில்பட்டியில், பேசும்போது மதிமுகவுக்கு விசுவாசமாக இருப்பவர்கள் உழைப்பவர்கள் மட்டும் தான் தேவை. தயவு தாட்சண்யம் பார்க்க மாட்டேன் வெட்டு , ஒன்னு துண்டு ரெண்டு என்ற முடிவு தான் எடுப்பேன் என தெரிவித்தார்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்
 
தமிழகத்தில் ஒரு காலத்தில் பிரதான கட்சியாக மதிமுக இருந்து வந்தது. குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து வைகோ பிரிந்து வந்த பொழுது, தொண்டர்களுக்கான கட்சி மதிமுக, வாரிசு அரசியலுக்கு இடம் கிடையாது என தெரிவித்து வந்தார். தொடர்ந்து அரசியல் களத்தில், மதிமுக செயல்பட்டு வந்தாலும் பெரிய அளவில் சாதிக்க முடியாமலே இருந்து வருகிறது. அதேபோல் தேர்தலின் பொழுது கூட்டணிகள் மாறி , பலமுறை சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றுள்ளது. மதிமுக பல்வேறு பகுதிகளில், அமைப்பு ரீதியாக வலுப்பெற்று உள்ளது என்பதையும் மறுத்து விட முடியாது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் முகமாக வைகோ இருந்து வந்தார். வைகோவின் மேடை பேச்சுகளால் ஈர்க்கப்பட்டு பல இளைஞர்கள் அவர் பின்னால் சென்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது..

கோவில்பட்டியில் பேசிய துரை வைகோ.. காஞ்சிபுரத்தில் கூண்டோடு கலைந்த மதிமுக..!
 
துரை வைகோ
 
தற்போது தனது உடல் நிலையை கருத்தில் கொண்டு அவரது மகனான துரை வைகோவை தலைமை கழக நிலையை செயலாளராக நியமிக்கப்பட்டார். அதன்பின் அவரது செயல்பாடு, பேச்சுகள் பல்வேறு மூத்த நிர்வாகிகளுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற மாவட்ட மதிமுக கூட்டத்தில் பேசியபோது , வருங்காலங்களில் இயக்கத்திற்காக உழைப்பவர்கள் மட்டும் கட்சியில் தொடரலாம் எனவும் இதில் விருப்பமில்லாதவர்களுக்கு மற்றொரு கதவு திறந்தே உள்ளது என கூறியது மிகுந்த சர்ச்சைக்குள்ளானது.

கோவில்பட்டியில் பேசிய துரை வைகோ.. காஞ்சிபுரத்தில் கூண்டோடு கலைந்த மதிமுக..!
 
முகநூல் பதிவால்
 
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் வளையாபதி தனது முகநூல் பக்கத்தில் தான் , கடந்த 28 ஆண்டு காலமாக மதிமுகவில் நீடித்து வருவதால், இனி வரும் காலங்களில் இளைஞர்களுக்கு வழிவிடும் நோக்கில் தனது பதவியை ராஜினாமா செய்வதாக தலைமை கழகத்திற்கு தெரிவித்து இருந்தார். இதற்கு வைகோ உடனடியாக அலைபேசியில் பேசி பதவியில், நீடிக்குமாறு கேட்டுக் கொண்டு மதிமுக வலை பக்கத்தில் அவர் பதவியை நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

கோவில்பட்டியில் பேசிய துரை வைகோ.. காஞ்சிபுரத்தில் கூண்டோடு கலைந்த மதிமுக..!
 
இந்நிலையில் மாநில துணை பொதுச் செயலாளர் மு. ராஜேந்திரன் என்பவர் இதற்கு எதிர்பதிலை கண்ணிய குறைவாக பதிவு செய்வதை கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள், நகரம் , காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத் ஒன்றிய செயலாளர்கள் , பொதுக்குழு உறுப்பினர்கள் என 28 பேர் இன்று ஆலோசனைக் கூட்டம் நடத்தி கட்சிப் பதவிகளை ராஜினாமா செய்வதாகவும் தொடர்ந்து மதிமுக வாழ்நாள் உறுப்பினராக செயல்படுவதாக தெரிவித்தனர். 

கோவில்பட்டியில் பேசிய துரை வைகோ.. காஞ்சிபுரத்தில் கூண்டோடு கலைந்த மதிமுக..!
 
 
வளையாபதி கூறுவது என்ன?
 
இதுகுறித்து வளையாபதி நம்மிடம் தெரிவிக்கையில், ஆரம்பம் முதலே மதிமுகவில் தொடர்ந்து இணைந்து செயல்பட்டு வருகிறேன். ஆனால் தற்பொழுது கட்சியில் சில கருத்து வேறுபாடு காரணமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் நிர்வாகிகள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்கிறோம். ஆனால் கட்சியில் வாழ்நாள் உறுப்பினராக நீடிப்பேன். துறை வைகோ கோவில்பட்டியில் பேசிய பொழுது வயதானவர்கள் ஒதுங்கி இருந்தால், இளையோருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற பொருளில், வெட்டு ஒன்று துண்டு 2 என்பது என்னுடைய பாலிசி, மற்றவர்கள் வெளியேறலாம் என கூறியிருந்தார். அன்று அவர் கூறியபடியே, நான் வெளியேறுகிறேன் என தெரிவித்து விட்டேன். வைகோ உடனடியாக தலையிட்டு, இதுபோல செய்ய வேண்டாம் என்று கூறினார், நானும் முகநூலில் செய்திருந்த பதிவை எடுத்து விட்டேன். நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர், 28 வருடமாக உழைத்தால் என்ன, இன்று என்ன செய்யப் போகிறீர்கள். மூத்த உறுப்பினர் என்று கூட பாராமல், மரியாதை இல்லாமல் பதிவு செய்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு சிலரை தவிர எல்லோரும் ராஜினாமா செய்து விட்டோம் என தெரிவித்தார்.
 

கோவில்பட்டியில் பேசிய துரை வைகோ.. காஞ்சிபுரத்தில் கூண்டோடு கலைந்த மதிமுக..!
 
மதிமுகவின் முக்கிய செயல் மாவட்டமாக காஞ்சிபுரம் விளங்கிய நிலையில் இந்த ராஜினாமா சற்று மதிமுகவிற்கு காஞ்சியில் பின்னடைவு ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Mamata Banerjee - NEET: விஸ்வரூபம் எடுக்கும் நீட் பிரச்னை: பிரதமருக்கு கடிதத்தை பறக்கவிட்ட முதலமைச்சர் மம்தா
Mamata Banerjee - NEET: விஸ்வரூபம் எடுக்கும் நீட் பிரச்னை: பிரதமருக்கு கடிதத்தை பறக்கவிட்ட முதலமைச்சர் மம்தா
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Madurai HC: சிறு, சிறு  அடிப்படை வசதி கோரி பொது நல மனு தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் - நீதிபதிகள்
சிறு, சிறு  அடிப்படை வசதி கோரி பொது நல மனு தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் - நீதிபதிகள்
Embed widget