மேலும் அறிய

"எடப்பாடி பழனிசாமி எங்களுடன் வந்தால் அவரையும் சேர்த்து ஒன்றிணைவோம்" -வைத்திலிங்கம்

இதே நிலை நீடித்தால் நாடாளுமன்றத் தேர்தலில் ஜீரோ தான் வரும். ஒன்று சேர்ந்தால் ஹீரோ ஆகிவிடும்.

சேலத்தில் ஓபிஎஸ் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, "இரட்டை இலை சின்னத்தையும், கொடியையும் பயன்படுத்தக் கூடாது என கோர்ட்டில் கூறியுள்ளனரா? தற்காலிகமாக இரட்டை இலை சின்னம் இபிஎஸ் அணிக்கு நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டு கொடுத்து இருக்கிறார்கள். நீதிமன்ற தீர்ப்பு அடுத்த மாதம் வர உள்ளது. அதுவரை கொடியையும், இரட்டை இலை சின்னம் பயன்படுத்துவதையும் யாராலும் தடுக்க முடியாது. அதிமுக ஒன்றுபட வேண்டும். அதுதான் எங்களின் எண்ணம். இபிஎஸ்க்கு மீண்டும் ஆட்சிக்கு வரும் எண்ணம் இல்லை. தான் சம்பாதித்த பணத்தை காப்பாற்ற அதிமுகவை கேடயமாக பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார். எடப்பாடி இடம் இருக்கக்கூடிய மாவட்ட செயலாளர்கள் இடையே புரட்சி வெடிக்க போகிறது. நிச்சயமாக நாங்கள் ஒன்றிணைவோம். எடப்பாடி பழனிசாமி எங்களுடன் வந்தால் அவரையும் சேர்த்து ஒன்றிணைவோம். அவர் வரவில்லை என்றால் அவரை தவிர்த்துவிட்டு நாங்கள் ஒன்று இணைவோம்" என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளோம். கூடிய விரைவில் சேலம் மாநாடு குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். தேதி அறிவிக்கும் நாளிலிருந்து ஒரு மாதத்திற்குள் மாநாட்டை நடத்தி முடிப்போம். அதிமுக மதுரை மாநாட்டிற்கு முன்னால் சேலம் மாநாடு நடைபெறும். ஓபிஎஸ் விளக்கிய பிறகு ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனை வல்லவர் என்றும் இவருக்கு வாக்களியுங்கள் என்று எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார். பிறகு தேர்தல் நின்றது. டிடிவி தினகரனை கட்சியிலிருந்து நீக்கினார். அரசியலில் பிரிந்து செல்வதும், இணைவதும் சகஜமான ஒன்று. அதுபோல் கட்சியின் நலன் கருதி அனைவரும் ஒன்றிணைய வேண்டும். கட்சியில் சுயநலம் என்றால் எடப்பாடி நினைப்பது போல் இணையாமல் போகலாம். ஆனால் நாங்கள் நினைப்பது இணைய வேண்டும் என்பதுதான். அனைவரையும் ஒன்றிணைத்தால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி தான் இருக்கும். பொதுச்செயலாளர் பதவி இருக்காது. சட்ட விதிப்படி நிரந்தர பொதுச்செயலாளர் அம்மா தான்.

ஓபிஎஸ் சொன்னது போல் சசிகலாவை சந்திப்பார். சசிகலா மீண்டும் கட்சிக்கு வந்தாலும் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் என்றும், எடப்பாடி பழனிசாமி எங்களுடன் இணைந்தால் இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருப்பார்கள். சசிகலா மீண்டும் கட்சியில் இணைந்தால் ஓபிஎஸ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இணைந்து மக்களின் நலன் கருதி பதவி குறித்து முடிவெடுப்பார்கள். திருச்சி மாநாட்டில் மூன்று லட்சம் பேரை ஒன்றிணைத்து தொண்டர்கள் எங்கள் பக்கம் என்று நிரூபித்தோம். தொண்டர்களிடையே கடுமையான எழுச்சி இருந்தது. கொங்கு மண்டலத்தில் அதேபோன்று எழுச்சியை சேலத்தில் காட்ட வேண்டும் என்பதை நிரூபிக்கும் நிகழ்ச்சியாக அமையும். எடப்பாடியில் கூட்டம் நடத்த சென்றபோது காவல்துறையினரின் ஆதரவுடன் கொடி கட்டுவதை தடுத்து இருக்கிறார்கள். இது தொடர்ந்தால் எடப்பாடி பழனிசாமி எந்த ஊரிலும் நடமாட முடியாது. எங்களால் எதையும் செய்ய முடியும். ஆனால் ஜனநாயக முறைப்படி எதிர்க்கட்சியாக எங்களது கருத்துக்களை கூறுங்கள். ஆனால் உங்கள் ஊருக்கு வரும்போது 10 பேர்களை வைத்து பயமுறுத்த ஒரு முன்னாள் முதல்வர் நினைப்பது அவருக்கான அழகும் இல்லை, தகுதி இல்லாமல் முதல்வராக இருந்துவிட்டார் என்பதுதான். எதையும், எடப்பாடியையும் சந்திக்க நாங்கள் தயாராக உள்ளோம். அதிமுகவில் இதே நிலை நீடித்தால் நாடாளுமன்றத் தேர்தலில் ஜீரோ தான் வரும். ஒன்று சேர்ந்தால் ஹீரோ ஆகிவிடும்” என்று கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RCB vs CSK:
"மகேந்திர சிங் தோனி கிரீஸில் இருந்ததால்..." வெற்றிக்கு பின் திக் திக் நிமிடங்களை பகிர்ந்த ஆர்சிபி கேப்டன் ஃபாஃப்!
Rain Alert: ரெட் அலெர்ட் - இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு, எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? சென்னை நிலவரம்..
Rain Alert: ரெட் அலெர்ட் - இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு, எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? சென்னை நிலவரம்..
SRH Vs PBKS, IPL 2024: புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தை குறிவைக்கும் ஐதராபாத்..! பஞ்சாப் உடன் இன்று பலப்பரீட்சை
SRH Vs PBKS, IPL 2024: புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தை குறிவைக்கும் ஐதராபாத்..! பஞ்சாப் உடன் இன்று பலப்பரீட்சை
RCB vs CSK Match Highlights: இறுதி வரை திக் திக்.. CSK-வை வீழ்த்தி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற RCB!
RCB vs CSK Match Highlights: இறுதி வரை திக் திக்.. CSK-வை வீழ்த்தி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற RCB!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Mallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டிChennai's Amirtha Aviation | சென்னைஸ் அமிர்தா சர்வதேச விமானக் கல்லூரி படிக்கும் போதே 15000 சம்பளம்Sathyaraj in Modi Biopic | அப்போ பெரியார்  இப்போ மோடிஅதிர்ச்சி கொடுத்த சத்யராஜ் மகள் சொன்ன GOOD NEWS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RCB vs CSK:
"மகேந்திர சிங் தோனி கிரீஸில் இருந்ததால்..." வெற்றிக்கு பின் திக் திக் நிமிடங்களை பகிர்ந்த ஆர்சிபி கேப்டன் ஃபாஃப்!
Rain Alert: ரெட் அலெர்ட் - இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு, எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? சென்னை நிலவரம்..
Rain Alert: ரெட் அலெர்ட் - இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு, எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? சென்னை நிலவரம்..
SRH Vs PBKS, IPL 2024: புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தை குறிவைக்கும் ஐதராபாத்..! பஞ்சாப் உடன் இன்று பலப்பரீட்சை
SRH Vs PBKS, IPL 2024: புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தை குறிவைக்கும் ஐதராபாத்..! பஞ்சாப் உடன் இன்று பலப்பரீட்சை
RCB vs CSK Match Highlights: இறுதி வரை திக் திக்.. CSK-வை வீழ்த்தி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற RCB!
RCB vs CSK Match Highlights: இறுதி வரை திக் திக்.. CSK-வை வீழ்த்தி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற RCB!
Watch Video: பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய டு பிளெசிஸ் படை.. தீபாவளியாக மாறிய பெங்களூரு வீதிகள்..!
பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய டு பிளெசிஸ் படை.. தீபாவளியாக மாறிய பெங்களூரு வீதிகள்..!
IPL 2024: விராட் கோலி கப் அடிக்கணும்! ஆனால்..கமல் வைத்த ட்விஸ்ட்!
IPL 2024: விராட் கோலி கப் அடிக்கணும்! ஆனால்..கமல் வைத்த ட்விஸ்ட்!
Rasipalan: மிதுனத்துக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் ; கடகத்துக்கு தைரியம்- முழு ராசிபலன்கள் இதோ
Rasipalan: மிதுனத்துக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் ; கடகத்துக்கு தைரியம்- முழு ராசிபலன்கள் இதோ
Today Movies in TV, May 19: ஜெயிலர், டாக்டர், சலார்.. டிவியில் சண்டே ஸ்பெஷல் படங்கள் என்னென்ன தெரியுமா?
ஜெயிலர், டாக்டர், சலார்.. டிவியில் சண்டே ஸ்பெஷல் படங்கள் என்னென்ன தெரியுமா?
Embed widget