![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
EPS Caveat Petition: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் கேவியட் மனுதாக்கல்
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு கேவியட் மனுதாக்கல் செய்துள்ளது.
![EPS Caveat Petition: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் கேவியட் மனுதாக்கல் EPS caveat petition to be filed in Supreme Court in AIADMK general council case against ops EPS Caveat Petition: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் கேவியட் மனுதாக்கல்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/04/e13002e657c826f6ed477c562724a5861662285060694175_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு கேவியட் மனுதாக்கல் செய்துள்ளது
அதிமுக பொதுக்குழு செல்லாது என உயர்நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து இபிஎஸ் தொடர்ந்த வழக்கில், பொதுக்குழு செல்லும் என இரு நீதிபதிகள் அடங்கிய உயர்நீதிமன்ற அமர்வு தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பு ஓ.பன்னீர்செலவம் தரப்புக்கு பின்னடைவாக கருதப்பட்டது.
இதையடுயடுத்து, இரு நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படவுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் ஓபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால், தங்கள் தரப்பு வாதங்களை கேட்ட பிறகே உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என இபிஎஸ் தரப்பு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
வழக்கின் பின்னணி:
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர்மோகன் ஆகியோர் அளித்த தீர்ப்பில் பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும், ஓ.பன்னீர்செல்வம் நீக்கம் தீர்மானமும், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் தீர்மானம் செல்லும் என்றும் உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில், இந்த தீர்ப்பின் 128 பக்க நகல்கள் வெளியானது. இதில், இடம்பெற்றுள்ள முக்கிய சாராம்சங்களை கீழே விரிவாக காணலாம்.
- ஜூலை 11-ந் தேதி அ.தி.மு.க. பொதுக்குழுவை தலைமை கழக நிர்வாகிகள் கூட்டியதில் தவறில்லை
- ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதா? என்பது குறித்து பிரதான வழக்கில்தான் முடிவு எடுக்க முடியும்.
- ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து செயல்பட முடியாத நிலையில் இருவரும் சேர்ந்துதான் கூட்டங்களை கூட்ட வேண்டும் என்று உத்தரவிட முடியாது
- இரு தலைவர்களும் இணைந்து தான் கூட்டங்களை கூட்ட வேண்டும் என்பது தற்போது சாத்தியமில்லாதது . இந்த உத்தரவு கட்சியின் செயல்பாட்டை முடக்கிவிடும்
- ஜூன் 23-ந் தேதி பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து வழக்கு தொடராத நிலையில், ஜூன் 23-ந் தேதிக்கு முந்தையை நிலை நீடிக்க வேண்டும் என உத்தரவிட முடியாது.
- அ.தி.,மு.க. பொதுக்குழுவிற்கு தலைமை நிலைய செயலாளர் அறிவிப்பு வெளியிட்டதில் தவறில்லை
- ஓ.பன்னீர்செல்வம் இருந்தபோதுதான் ஜூலை 11-ந் தேதி பொதுக்குழு கூட்டப்படும் என அறிவிக்கப்பட்டதால் தனக்கு தெரியாது என ஓ.பி.எஸ். தரப்பு கூறுவதை ஏற்க முடியாது
- பொதுக்குழு ஒப்புதல் அளிக்காததால் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி விட்டுக்கொடுத்தார்
- 2 பேரும் இணைந்து பொதுக்குழுவை கூட்ட இயலாத நிலையில், ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை நாடும் நிலைக்கு தள்ள முடியாது
- ஓ.பன்னீர்செல்வம் நீக்கம் என்ற தீ்ரமானம் செல்லும்
- எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்த தீர்மானம் செல்லும்
பொதுக்குழு செல்லும் என்ற இரு நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, ஓபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் மேல்முறையீடு செய்யப்பட்டால், தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல், உத்தரவு பிறப்பிக்க கூடாது என இபிஎஸ் தரப்பு கேவியட் மனுதாக்கல் செய்துள்ளது.
View this post on Instagram
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)