மேலும் அறிய

அதிமுக விவகாரத்தில் திமுகவை வம்புக்கு இழுக்காதீர்கள்... திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி..!

அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் வீணாக திமுகவை வம்புக்கு இழுக்க வேண்டாம் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் வீணாக திமுகவை வம்புக்கு இழுக்க வேண்டாம் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்பொழுது பேசிய அவர், அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் வீணாக திமுகவை வம்புக்கு இழுக்க வேண்டாம். அதிமுக சண்டைக்கும், திமுக கட்சிக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை. எதற்கெடுத்தாலும் முதலமைச்சரையும், திமுகவையும் தாக்கி பேசுவது இபிஎஸ்க்கு வாடிக்கையாகி போய்விட்டது. யார் மீதோ உள்ள கோபத்தை திமுகவின் பக்கம் காட்டுகிறார் எடப்பாடி பழனிசாமி என்று தெரிவித்தார். 

முன்னதாக காயம்பட்ட அதிமுக தொண்டர்களை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்த இபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நாள் முதல் எங்களுக்கு நாளுக்குநாள் பல தகவல் கிடைத்தது. மாநகரத்திலே சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறுகின்ற பொழுது அனைந்திந்திய அண்ணா திராவிட கழக தலைமை கட்சி அலுவலகத்தில் சில சமூக விரோதிகள் உள்ளே வர இருப்பதாக செய்தி வந்தவுடன் எங்களுடைய கட்சி நிர்வாகி ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சமூக விரோதிகள் அத்துமீறி தலைமை கழகத்தில் உள்புகுந்து தாக்குதல் நடத்தியபோது தடுத்து நிறுத்தினர். 

முழுமையான பாதுகாப்பு காவல்துறை கொடுக்க வேண்டும் என்று ஏற்கனவே எங்களுக்கு கிடைத்த தகவலின்படி ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். அதற்கு பிறகு தொடர்ந்து எங்களுக்கு தகவல் கிடைத்து கொண்டு இருந்தது. சமூக விரோதிகள் தலைமை கழகத்தில் புகுந்து தாக்குதல் நடத்த கூடும் என தெரிந்து காவல் ஆணையர் வரை புகார் அளித்தோம். 

ஆனால், இன்று எங்களுக்கு கிடைத்த தகவல் உண்மை என்று நிரூபணமாகிவிட்டது. நாங்கள் உரிய புகார் அளித்தும் காவல்துறை எங்களுக்கு பாதுகாப்பு அளிக்கபடவில்லை. அதோடு இன்று பொதுக்குழு கூட்டதிற்கு பிறகு முன்னாள் கழக ஒருங்கிணைப்பாளர் அண்ணன் ஓபிஎஸ், அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் அத்துமீறி உள்ளே நுழைந்தது மட்டுமில்லாமல், ரவுடிகளை அழைத்து வந்து கட்சி கார்களை அடித்து நொறுக்கினார். இந்த சம்பவம் வேதனையானது, கண்டிக்கத்தக்கது. 

எந்தவொரு கட்சி தலைவராவது கட்சி நிர்வாகிகளை தாக்குவாரா..? அப்படி தாக்கும்போது அந்த தலைவரின் மனம் எப்படி நோகும். அதை எப்படி தடுக்க வேண்டும். அதற்கு மாறாக இவர்களை எல்லாம் முதலமைச்சராக்கிய, இவரை எல்லாம் துணை முதலமைச்சராக்கிய, இவருக்கு ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்பு கொடுத்து அதற்கு இன்றைய தினம் தகுந்த வெகுமதியை கொடுத்துவிட்டார். 

மனசாட்சி இல்லாத, மிருகத்தனமான எண்ணம் கொண்டவருக்குதான் இந்த எண்ணம் வரும். ஒரு சுயநலவாதி என்றே சொல்லலாம். ஓபிஎஸ் அவர்கள் பொதுக்குழு கூட்டத்தில்  கலந்துகொள்வார் என்று நினைத்தோம். அதற்காக அவருக்கு தனி இருக்கை எல்லாம் போட்டு இருந்தோம். ஆனால், அவர் வரவில்லை. அதுமட்டுமில்ல, மீன்பாடி வண்டிகளில் ரவுடிகளை அழைத்து வந்து கற்களை கொண்டு கழக நிர்வாகிகளான சுமார் 4000 பேர் மீது தாக்குதல் நடத்தினார். 

அதோடு காவல்துறையும் ரவுடிகளுடன் இணைந்து எங்களது மாவட்ட செயலாளர்களையும், நிர்வாகிகளையும் தாக்கியது மிக மிக கொடுமையானது. ஓபிஎஸ் உடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியும் இணைந்து இந்த கொடூரமான சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். 

அதிமுகவை அழிக்க வேண்டும், ஒழிக்க வேண்டும் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் துரோகிகளுடன் இணைந்து இந்த காரியத்தை செய்துள்ளனர். கழகத்தை பாதுகாக்க நிர்வாகிகள் இன்று அடிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் தான் காரணம். அத்தகைய தாக்குதல் நடைபெறாமல் இருந்தால் சிறந்த முதலமைச்சர் என்று நாங்களே பாராட்டி இருப்போம். 

துரோகி ஓபிஎஸ் அவர் ஒரு நாளும் நாட்டு மக்களுக்கு நன்மை செய்யவில்லை. அவர் ஒரு சுயநலவாதி, தனக்கு கிடைக்காத பதவி வேறு எவருக்கும் கிடைக்க கூடாது என்று நினைப்பவர். தாக்குதல் நடத்தியவர்கள் மீது தக்க பாடம் புகட்டுவோம்” என்று தெரிவித்தார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget