மேலும் அறிய

கரூரில் அதிமுகவை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் - முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் புகார்

டெண்டர் கோரிக்கை வைக்கும் நபர்களிடம் திமுக ஒப்பந்ததாரரை நேரில் சந்தித்து பேசி சம்மதம் தெரிவிக்கும் பட்சத்தில் மட்டுமே ஒப்பந்தம் வழங்கப்படுவதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு

கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் அதிமுக ஒன்றிய கழக உறுப்பினர்களாக உள்ள பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பணிகளான குடிநீர் திட்ட பணிகளோ, வடிகால் மற்றும் சாலை அமைத்தல் போன்ற பணிகளையோ மேற்கொள்ள அரசு அதிகாரிகள் அனுமதி வழங்குவதில்லை. மாவட்ட ஊராட்சி நிதியின் மூலம் கரூர் மாவட்டத்தில் எந்த வித வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ள இயலவில்லை. மேலும், ஒப்பந்தப் புள்ளிகளில் கலந்து கொள்ளும் நபர்களை தொடர்ந்து மிரட்டி வருகின்றனர் என முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றம்சாட்டி உள்ளார். இப்பிரச்னை தொடர்பாக கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கரை சந்தித்து மனுவையும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அளித்துள்ளார். அதில், MGNREGS திட்டத்தில் தற்போது பல்வேறு முறைகேடுகளை அதிகாரிகள் ஒத்துழைப்போடு தற்போது ஆளும் கட்சியினர் செய்து வருகின்றனர். கரூர், கிருஷ்ணராயபுரம், பரமத்தி, அரவக்குறிச்சி ஆகிய ஒன்றியங்களில் எந்த விதமான திட்ட பணிகளும் அதிமுக கவுன்சிலர்கள் உள்ள பகுதிகளுக்கு வழங்கப்படுவதில்லை. அவர்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை ஆணையர்கள் தொடர்ந்து புறக்கணிப்பு செய்கின்றனர். அனைத்து பகுதி பொதுமக்களுக்கும் நலத்திட்ட பணிகள் மேற்கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு  அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


கரூரில் அதிமுகவை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் - முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் புகார்

 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கரூர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பொது நிதியை வழங்குவதில் பாரபட்சம். அதிமுகவை சேர்ந்த உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டப் படுவதாகவும், டெண்டர் கோரிக்கை வைக்கும் நபர்களிடம் திமுக ஒப்பந்ததாரரை நேரில் சந்தித்து பேசி சம்மதம் தெரிவிக்கும் பட்சத்தில் மட்டுமே ஒப்பந்தம் வழங்கப்படுவதாகவும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு வைத்தார். அதைத் தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் சென்னையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் மூன்று நாள் சிறப்பு மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் பாரபட்சமின்றி மாவட்ட நிர்வாகத்தினர் செயல்பட வேண்டும் என வாக்குறுதி அளித்து உள்ள நிலையில் அதற்கு நேர் எதிர்மாறாக கரூரில் தற்போது திமுக செயல்படுகிறது எனவும் இதனை தமிழ்நாடு முதலமைச்சர் பார்வைக்கு மாவட்ட நிர்வாகம் கொண்டு செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

கரூரில் அதிமுகவை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் - முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் புகார்


தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் இதே நிலை நீடித்தால் அதிமுக சார்பில் போராட்டங்கள் மற்றும் உண்ணாவிரதம் நடத்தப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார். இந்த நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிமுக ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்களும் அதிமுக மாவட்ட நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget