மேலும் அறிய

30 நாளில் ஸ்டாலின் எழுதிய 6 கடிதங்கள்; யாருக்கு? எதற்கு? என்கிற முழு விபரம்!

முதல்வராக பொறுப்பேற்ற ஒரு மாதத்தில் 6 கடிதங்களை முதல்வர் ஸ்டாலின் அலுவல் ரீதியாக எழுதியுள்ளார்.

முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் எழுதிய அலுவல் ரீதியான கடிதங்கள் பற்றிய ஓர் பார்வை!

  1. ஏழு பேர் விடுதலைக்காக முதல் கடிதம்

தமிழகத்தின் முதல்வராக அவர் பொறுப்பு ஏற்றதும் முதல் கடிதமாக ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர்களையும் விடுவிக்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு கடிதம் எழுதினார்.

கடந்த மாதம் 19-ந் தேதி எழுதிய அந்த கடிதத்தில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகிய 7 பேரையும் விடுவிக்க கோரிய தமிழக அரசின் 2018ம் ஆண்டு அமைச்சரவை தீர்மானத்தை உடனடியாக ஏற்றுக்கொண்டு அவர்களை விடுதலை செய்ய ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.   

  1. செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி ஆலை தொடர்பாக பிரதமருக்கு கடிதம்

கொரோனா தொற்றில் இருந்து பொதுமக்கள் தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று மத்திய மற்றும் மாநில அரசுகள் விழிப்புணர்வு செய்து வருகின்றனர். ஆனால், தடுப்பூசிகள் பற்றாக்குறை நாடு முழுவதும் பல மாநிலங்களில் நிலவி வருகிறது. இந்த நிலையில், செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி ஆலையை தமிழக அரசுக்கு ஒப்படைக்க வேண்டும் என்றும், தமிழக அரசுக்கு குத்தகைக்கு வழங்கினால் உடனடியாக தடுப்பூசி உற்பத்தி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 27-ந் தேதி கடிதம் எழுதினார்.


30 நாளில் ஸ்டாலின் எழுதிய 6 கடிதங்கள்; யாருக்கு? எதற்கு? என்கிற முழு விபரம்!

  1. நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மாணவர்களின் பாதுகாப்பு கருதியும், மன நலன் கருதியும் மாநிலம் முழுவதும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் அறிவித்தார். இந்த சூழலில், பிரதமர் மோடிக்கு தற்போதுள்ள சூழலில் எந்த நுழைவுத்தேர்வுகள் நடந்தாலும் மாணவர்களின் உடல்நலம் பாதிக்கப்படும். எனவே, நீட் உள்ளிட்ட தேசிய அளவில் நடத்தப்படும் அனைத்து நுழைவுத்தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று கடந்த 5-ந் தேதி கடிதம் எழுதியுள்ளார்.

  1. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளைத் தொடங்க பிரதருக்கு கடிதம்

மதுரையில் கடந்த 2019ம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ஆனால், தற்போது வரை எந்த கட்டுமான பணிகளும் தொடங்கப்படவில்லை. இதையடுத்து, பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்றும், இதற்காக நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்களுக்கு பணிகளைச் செயல்படுத்துவதற்கான முழு அதிகாரங்களை அளிக்க வேண்டும் என்றும் கடந்த 5-ந் தேதி கடிதம் எழுதியுள்ளார்.


30 நாளில் ஸ்டாலின் எழுதிய 6 கடிதங்கள்; யாருக்கு? எதற்கு? என்கிற முழு விபரம்!

  1. டவ் தே புயலில் காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்க மத்திய அமைச்சருக்கு கடிதம்

கடந்த மாதம் வீசிய டவ் தே புயல் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியது. கடலுக்கு மீன்பிடிக்க சென்ற பல்வேறு மாநில மீனவர்களும் இந்த புயலால் காணவில்லை. இதையடுத்து, டவ் தே புயலால் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன தமிழக மீனவர்கள் 16 பேரையும் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 23-ந் தேதி கடிதம் எழுதினார்.

  1. கருப்பு பூஞ்சை நோய்க்கு மருந்து அளிக்க மத்திய அமைச்சருக்கு கடிதம்

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான சூழலில், கடந்த சில வாரங்களாக கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் இந்த நோயால் ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, கடந்த 3-ந் தேதி அதிகரித்து வரும் கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்கத் தேவைப்படும் லிபோசோமல் ஆம்போடெரிசின் பி மருந்து 30 ஆயிரம் குப்பிகளை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Nissan Compact MPV: ரூ.6 லட்சத்துக்கே.. நிசானின் பெரிய புதிய 7 சீட்டர் கார் - என்னென்ன இருக்கு? டிச.18 லாஞ்ச்
Nissan Compact MPV: ரூ.6 லட்சத்துக்கே.. நிசானின் பெரிய புதிய 7 சீட்டர் கார் - என்னென்ன இருக்கு? டிச.18 லாஞ்ச்
சபரிமலை மண்டல பூஜை: தரிசன முன்பதிவு துவக்கம்! முக்கிய அறிவிப்பு வெளியீடு! | பக்தர்கள் கவனத்திற்கு
சபரிமலை மண்டல பூஜை: தரிசன முன்பதிவு துவக்கம்! முக்கிய அறிவிப்பு வெளியீடு! | பக்தர்கள் கவனத்திற்கு
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Embed widget