மேலும் அறிய

சோகம்! தமிழ்நாட்டின் முதல் பா.ஜ.க. எம்.எல்.ஏ. உயிரிழப்பு - தலைவர்கள், தொண்டர்கள் அஞ்சலி

தமிழ்நாட்டின் முதல் பா.ஜ.க. எம்.எல்.ஏ. வேலாயுதம் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவரது மறைவுக்கு பா.ஜ.க தலைவர்கள், தொண்டர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பா.ஜ.க. சார்பில் முதன் முறையாக உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட சி.வேலாயுதம் காலமானார். 

பா.ஜ.க.வின் முதல் எம்.எல்.ஏ.

தேசிய கட்சியான பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டில் வளர்வதற்கு முக்கிய பங்காற்றியவர் வேலாயுதம். கடந்த 1996-ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டவர் இவர். கன்னியாகுமரி மாவட்டம் பதம்நாபபுரம் தொகுதியில் வேட்பாளராக களமிறங்கிய வேலாயுதம் 27,443 வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.

உயிரிழப்பு:

அதன்பிறகு, தமிழ்நாட்டில் பா.ஜ.க. கட்சியின் முக்கிய நபராக இவர் விளங்கினார். அதோடு பா.ஜ.க.வின் முதல் சட்டப்பேரவை உறுப்பினர் என்ற பெருமையையும் இவர் பெற்றார். அதன் பிறகு வந்த 2001, 2006 -ம் ஆண்டு  சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்தார். கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தநிலையில், இன்று (08.05.2024) காலமானார். இவருக்கு வயது 73. இவர் எம்.எல்.ஏ.வாக இருந்த காலத்தில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு கையெழுத்து இயத்தை நடத்தியிருக்கிறார். இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

தமிழிசை செளந்தரராஜன் இரங்கல்:

இவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழ்நாடு பா.ஜ.க. மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை, ”தமிழக பாஜகவின் முதல் சட்டமன்ற உறுப்பினரும், கட்சியின் முன்னோடிகளில் ஒருவருமான, ஐயா C.வேலாயுதம்  காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. கட்சியின் வளர்ச்சிக்கு அரும்பாடு பட்டவர். கொள்கைப் பிடிப்பு மிக்கவர். கடினமான உழைப்பாளி. தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சிக்கான நம்பிக்கையை விதைத்தவர். ஐயா திரு வேலாயுதன் அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா, இறைவனடி சேர வேண்டிக் கொள்கிறேன். ஓம் சாந்தி !” என்று  குறிப்பிட்டுள்ளார்.

பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,” முன்னாள் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும், சமூக சேவகருமான C.வேலாயுதம் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி அறிந்து ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன். தமிழக பாரதிய ஜனதா கட்சி வரலாற்றில் முதல் சட்டமன்ற உறுப்பினர் என்ற மாபெரும் பெருமையை பத்மனாபபுரம் தொகுதியிலிருந்து 1996 ல் பெற்றவர் அவர். கட்சிக்கும் , சமூகத்திற்கும் அவர் அளித்த கடமைப்பண்பும், அர்ப்பணிக்கும் குணமும் காலம் கடந்து நினைவேற்கப்படும். அன்னாரது குடும்பத்தினருக்கும், அவர் சார்ந்த மற்றனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள், இந்த துயர தருணத்தைக் கடந்த்தேற எல்லா வலிமையும் பெற வேண்டுகிறேன். ஓம் சாந்தி..” என்று எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இவரது இறுதிசடங்கு நாளை (09.05.2024) காலை 10.30 மணி நடைபெறும் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளர்.


 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Job Fair: கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Embed widget