மேலும் அறிய

”துர்க்கா ஸ்டாலினின் பி.ஏதான் அமைச்சர் சேகர்பாபு; கடவுள் மீதும் கவனம் இருக்கட்டும்” - அண்ணாமலை

" இன்று முதல் கொடி கம்பங்களை நட ஆரம்பித்து விட்டார்கள். எங்களுடைய வளர்ச்சி இன்னும் வேகமாக இருக்கும் திமுகவின் நம்பர் ஒன் எதிரியாக பாஜக கட்சியை திமுக பார்க்க ஆரம்பித்துவிட்டது "

கொடிக்கம்பம் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் ஆதம்பாக்கத்தில் பாஜக பிரமுகர் வினோத் அவர்களின் இல்லத்திற்கு சென்று அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்ததாவது : 
 
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கோயம்புத்தூர் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் தற்கொலை படை தாக்குதல் நிகழ்த்த இருந்த அபாயத்தில் இருந்து தப்பினோம். அவர் காவல்துறையின் கண்காணிப்பில் இருக்க வேண்டிய குற்றவாளி. அதை கண்டு கொள்ளவில்லை. பழைய குற்றங்களுக்காக கண்காணிப்பில் இருக்க வேண்டிய குற்றவாளி தண்டனையிலிருந்து வெளியே வந்த பிறகு வெட்டி கொலை செய்கிறார்.'

”துர்க்கா ஸ்டாலினின் பி.ஏதான் அமைச்சர் சேகர்பாபு; கடவுள் மீதும் கவனம் இருக்கட்டும்” - அண்ணாமலை
தினமும் 100 கொடிக்கம்பங்கள் 
 
இது போன்ற குற்றவாளிகளை காவல்துறை பிடிக்க வேண்டுமே தவிர கொடிக்கம்பம் நடுவது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை கிளை அளவில், தினமும் 100 கொடிக்கம்பங்கள்  நட இருக்கிறோம். இன்று முதல் கொடி கம்பங்களை நட ஆரம்பித்து விட்டார்கள். எங்களுடைய வளர்ச்சி இன்னும் வேகமாக இருக்கும் திமுகவின் நம்பர் ஒன் எதிரியாக பாஜக கட்சியை திமுக பார்க்க ஆரம்பித்துவிட்டது.
 
போட்டிகள் இருக்கத்தான் செய்யும்
 
தேர்தல் களத்தில் சந்திப்போம். அதுவரையில் இது போன்ற போட்டிகள் இருக்கத்தான் செய்யும். இதை ஜனநாயகத்தில் தவிர்க்க முடியாது. நமது தொண்டர்கள் 13 பேர் சிறையில் உள்ளனர். ஏழு பேர் கொடிக்கம்பங்கள் வழக்கிலும் மீதமுள்ளவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டார்கள் எனவும் சிறையில் உள்ளனர்.  இதுபோன்ற நடவடிக்கைகளை பிரிட்டிஷ் அரசாங்கம் காந்தி மீது மேற்கொண்டது. இப்பொழுது பிரிட்டிஷ் அரசாங்கம் போல் திமுக அரசு செயல்படுகிறது. நாங்களும் அதை நீதிமன்றத்திலும் களத்தில் சந்திப்போம்.
 
நீட் நாடகம் முடிவுக்கு வரவேண்டும்
 
நீட்டுக்கு எதிராக திமுக கையெழுத்து இயக்கம் தொடங்கியுள்ளது. ஐம்பது லட்சம் கையெழுத்து போடுவதாக கூறியுள்ளார்கள். கோடிக்கணக்கில் உறுப்பினர்களை கொண்ட திமுகவில், திமுக உறுப்பினர்களை வைத்து 50 லட்சம் கை எழுத்துகளை வாங்கிவிடலாம். பொது மக்கள் யாரும் கையெழுத்து போட போவதில்லை தமிழகத்தில் நீட்டை அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். 2016ல் ஆரம்பித்த இந்த நீட் நாடகம் முடிவுக்கு வரவேண்டும்.

”துர்க்கா ஸ்டாலினின் பி.ஏதான் அமைச்சர் சேகர்பாபு; கடவுள் மீதும் கவனம் இருக்கட்டும்” - அண்ணாமலை
 
அவர்கள் சாதனையை சொல்லி ஓட்டு கேட்கலாம். ஆனால் ஹிந்தியை எதிர்க்கிறோம். நீட்டை ரத்து என கூறுவார்கள். நேற்று உதயநிதி முட்டையை தூக்கி வந்துள்ளார். நீட்டுக்கு ரகசியம் சொல்ல முடியவில்லை. அதேபோல் இப்பொழுது முட்டை முதலில் வந்ததா கோழி முதலில் வந்ததா என்ற ரகசியத்தை கூறுவதற்காக முட்டையை தூக்கிக் கொண்டு வந்துள்ளார். தமிழ்நாட்டு மக்களைப் பொறுத்தவரை திமுகவின் நாடகத்தை ரொம்ப உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். நாடாளுமன்ற தேர்தலுக்கு மக்கள் தயாராகி விட்டார்கள். அதுவரை இது போன்ற நாடகங்கள் நடந்து கொண்டுதான் இருக்கும்.
 
அதிமுக -  பாஜக கூட்டணி உள்ளே வெளியே ஆட்டம் என திமுக விமர்சனம் குறித்து கேட்டபோது
 
அது எனக்கு தெரியாத ஆட்டம். அதனால் அதைப் பற்றி நான் கூற விரும்பவில்லை. உள்ளே வெளியே ஆட்டம் என்றால் எனக்கு என்னவென்று தெரியாது. திமுக என்கிற கட்சி அவரின் ஐம்பெரும் கொள்கையில் இருந்து தவறி செயல்படுகிறார்கள். அது ஒரு கார்ப்பரேட் கம்பெனியா குடும்ப நிறுவனமா என வித்தியாசம் தெரியாத அளவிற்கு செயல்படுகிறது. தனிப்பட்ட கம்பெனி போல் மாறிவிட்டது. பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை 10 ஆண்டுகள் நாங்கள் செய்த சாதனையை சொல்லி ஓட்டு கேட்க போகிறோம்.

”துர்க்கா ஸ்டாலினின் பி.ஏதான் அமைச்சர் சேகர்பாபு; கடவுள் மீதும் கவனம் இருக்கட்டும்” - அண்ணாமலை
 
பி.ஏ சேகர்பாபு 
 
துர்கா ஸ்டாலினுடைய பி.ஏ தான் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு. துர்கா ஸ்டாலின் எந்த கோயிலுக்கு செல்கிறார்கள் என்று தகவல் சேகரித்து அவருக்கு தேவையான மரியாதை கொடுப்பதற்கும் பாதுகாப்பு வழங்குவதற்குமான ஏற்பாடுகளை மட்டுமே சேகர்பாபு செய்து  வருகிறார்.  துர்கா ஸ்டாலின் எந்த கோவிலுக்கு செல்கிறார் என்பதை பார்ப்பது பாஜக வேலை அல்ல. அது சேகர் பாபு உடைய வேலை. அவர் அவருடைய அமைச்சர் வேலையை பகுதி நேரமாக தான் செய்து வருகிறார். தமிழகத்தில் கடவுளுக்கு கொடுக்கப்படாத மரியாதை, துர்கா ஸ்டாலினுக்கு  வழங்கப்படுகிறது. துர்க்கா ஸ்டாலின் மீது காட்டும் கவனத்தை அமைச்சர் சேகர்பாபு கொஞ்சமாவது கடவுள் மீது காமிக்க வேண்டும்”  என தெரிவித்தார் .
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”திமுகவிற்கு ஒரு எம்.எல்.ஏ, த.வெ.க.விற்கு ஒரு முன்னாள் அமைச்சர் பார்சல்” 2026க்கு குறி..!
”திமுக, த.வெ.க-வில் இணையும் எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சர்” யார், யார்?
Jayakumar Teases OPS: கொசுக்களைப் பற்றி பேசாதீர்கள்.! முன்னாள் முதலமைச்சர்னு கூட பாக்காம இப்படியா கிண்டல் பண்றது.?
கொசுக்களைப் பற்றி பேசாதீர்கள்.! முன்னாள் முதலமைச்சர்னு கூட பாக்காம இப்படியா கிண்டல் பண்றது.?
மக்களே! ஆட்டோ கட்டணம் உயருகிறதா? அமைச்சர் சிவசங்கர் பரபரப்பு பதில்
மக்களே! ஆட்டோ கட்டணம் உயருகிறதா? அமைச்சர் சிவசங்கர் பரபரப்பு பதில்
Maha Kumbh: மகா கும்பமேளா, 52 கோடி பேர் முங்கி எழுந்த கங்கை, குவிந்து கிடக்கும் மல கழிவு - அரசு அறிக்கை
Maha Kumbh: மகா கும்பமேளா, 52 கோடி பேர் முங்கி எழுந்த கங்கை, குவிந்து கிடக்கும் மல கழிவு - அரசு அறிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

H Raja vs TVK Vijay |”பாட்டு பாடுனீங்களே விஜய்..உங்க மகனுக்கு ஒரு நியாயமா?”விஜய் மீது H.ராஜா அட்டாக் | New Education PolicyPonmudi Vs MK Stalin | பறிபோன விழுப்புரம்! அப்செட்டில் பொன்முடி! காலரை தூக்கும் மஸ்தான் | DMKEPS Son Politics Entry | அதிமுகவின் மாஸ்டர் மைண்ட் அரசியலுக்கு வரும் EPS மகன்?உதயநிதி, விஜய்க்கு ஸ்கெட்ச்Durai murugan Hospitalized | துரைமுருகனுக்கு தீவிர சிகிச்சை?HOSPITAL  விரையும் உதயநிதி மருத்துவர்கள் சொல்வது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”திமுகவிற்கு ஒரு எம்.எல்.ஏ, த.வெ.க.விற்கு ஒரு முன்னாள் அமைச்சர் பார்சல்” 2026க்கு குறி..!
”திமுக, த.வெ.க-வில் இணையும் எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சர்” யார், யார்?
Jayakumar Teases OPS: கொசுக்களைப் பற்றி பேசாதீர்கள்.! முன்னாள் முதலமைச்சர்னு கூட பாக்காம இப்படியா கிண்டல் பண்றது.?
கொசுக்களைப் பற்றி பேசாதீர்கள்.! முன்னாள் முதலமைச்சர்னு கூட பாக்காம இப்படியா கிண்டல் பண்றது.?
மக்களே! ஆட்டோ கட்டணம் உயருகிறதா? அமைச்சர் சிவசங்கர் பரபரப்பு பதில்
மக்களே! ஆட்டோ கட்டணம் உயருகிறதா? அமைச்சர் சிவசங்கர் பரபரப்பு பதில்
Maha Kumbh: மகா கும்பமேளா, 52 கோடி பேர் முங்கி எழுந்த கங்கை, குவிந்து கிடக்கும் மல கழிவு - அரசு அறிக்கை
Maha Kumbh: மகா கும்பமேளா, 52 கோடி பேர் முங்கி எழுந்த கங்கை, குவிந்து கிடக்கும் மல கழிவு - அரசு அறிக்கை
RCB IPL 2025 full schedule: கப் இல்லாட்டியும் சாம்பியன் தான்..!  பெங்களூரு அணியின் மொத்த போட்டி, மைதான, நேர விவரங்கள்
RCB IPL 2025 full schedule: கப் இல்லாட்டியும் சாம்பியன் தான்..! பெங்களூரு அணியின் மொத்த போட்டி, மைதான, நேர விவரங்கள்
RB Udhayakumar : ஓ.பி.எஸ்-க்கு தகுதி இல்லை!  அம்மாவால் ஒதுக்கப்பட்டவர்.. ஆர்.பி உதயகுமார் பதிலடி
RB Udhayakumar : ஓ.பி.எஸ்-க்கு தகுதி இல்லை! அம்மாவால் ஒதுக்கப்பட்டவர்.. ஆர்.பி உதயகுமார் பதிலடி
ஆட்டத்துக்கு ரெடி! கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கிய தவெக! யாருடன் தெரியுமா?
ஆட்டத்துக்கு ரெடி! கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கிய தவெக! யாருடன் தெரியுமா?
BJP
BJP "நிதி வேண்டும் என்றால் நீதிமன்றம் செல்லட்டும்" திமுகவுக்கு இராம ஸ்ரீனிவாசன் பதிலடி
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.