மேலும் அறிய

Thiruvalluvar Day: மயிலாடுதுறையில் திருவள்ளுவர் ரத யாத்திரை; கொடியசைத்து தொடங்கி வைத்த எஸ்பி

மயிலாடுதுறையில் திருவள்ளூவர் சிலையுடன் நடைபெற்ற ரத ஊர்வலத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பொங்கல் பண்டிகையின் இரண்டாம் நாளான இன்று, திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்படுகின்றது. மனிதன் அறநெறி கொண்டு வாழ வேண்டும் என்று வாழ்க்கைக்குத் தேவையான கருத்துக்களை ஈரடிக் குறளில் சொல்லி, முப்பால் தந்து நல்வழிப் படுத்திய திருவள்ளுவர்க்கு மரியாதை செலுத்தும் விதமாக ‘திருவள்ளுவர் தினம்’ பொங்கலுக்கு அடுத்தநாள் அனுசரிக்கப்படுகிறது. 1330 திருக்குறள் மூலம், வாழ்க்கை நெறிகளைக் கற்பித்தவர் திருவள்ளுவர். சமயம் சார்ந்திராத நூல்களில், நாற்பதிற்கும் மேற்பட்ட மொழிகளில், திருக்குறள், மொழி மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. ஆங்கில மொழியில் மட்டும் நூறு நபர்கள் திருக்குறளை மொழி மாற்றம் செய்துள்ளனர்.


Thiruvalluvar Day: மயிலாடுதுறையில் திருவள்ளுவர் ரத யாத்திரை; கொடியசைத்து தொடங்கி வைத்த எஸ்பி

பல பண்டைய புலவர்கள் திருக்குறளை புகழ்ந்து எழுதிய பாடல்கள் ‘திருவள்ளுவ மாலை’ என்று அழைக்கப்படுகிறது. திருவள்ளுவர் பிறந்த காலத்தைப் பற்றிப் பற்பல கருத்துக்கள் நிலவினாலும், ஆராய்ச்சி வல்லுநர்கள், திருவள்ளுவர் பிறந்த ஆண்டு கிறிஸ்து பிறப்பதற்கு 31 ஆண்டுகள் முந்தையது என்றும், அவர் பிறந்தது, வைகாசி அனுஷம் என்றும் முடிவெடுத்தார்கள். திருவள்ளுவர் பெயரில், தொடர் ஆண்டு ஒன்றைப் பின்பற்றுவது என்றும், அந்த தமிழ் ஆண்டை, ‘திருவள்ளுவர் ஆண்டு’ என்று குறிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தற்போதைய ஆங்கில ஆண்டு 2024 என்பது திருவள்ளுவர் ஆண்டு 2055.


Thiruvalluvar Day: மயிலாடுதுறையில் திருவள்ளுவர் ரத யாத்திரை; கொடியசைத்து தொடங்கி வைத்த எஸ்பி

திருவள்ளுவர் திருநாள் கொண்டாட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது 1935, ஜனவரி 17ஆம் தேதி. இதற்காக காழி சிவகண்ணுச்சாமிப் பிள்ளை மற்றும், திரு.வ.சுப்பையா அவர்கள் ‘திருவள்ளுவர் திருநாட் கழகம்’ என்ற அமைப்பை ஆரம்பித்தார்கள். முதல் திருவள்ளுவர் திருநாள், 1935ஆம் ஆண்டு மே 17, 18 தேதிகளில், பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. மறைமலையடிகளார், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், திரு.வி.க. ஆகிய தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டனர். காலப் போக்கில், இது மறைந்து போக, பெருத்த முயற்சிக்குப் பிறகு, 1959ஆம் வருடம் மே 22 ஆம் தேதி (வைகாசி மாதம், அனுஷ நட்சத்திரம்) திருவள்ளுவர் தினம் அனுசரிக்கப்பட்டது.


Thiruvalluvar Day: மயிலாடுதுறையில் திருவள்ளுவர் ரத யாத்திரை; கொடியசைத்து தொடங்கி வைத்த எஸ்பி

வைகாசி, அனுஷ நட்சத்திரம் என்று கொண்டாடப்படுவதால், ஆண்டுக்கு ஆண்டு, ஆங்கில நாட்காட்டியில் தேதி மாறுபாடும், அதைத் தவிர்க்க வேண்டும் என்ற கருத்து நிலவியது. தைப் பொங்கல், தமிழர் திருநாள் என்பதால், அந்த நாளை திருவள்ளுவர் தினம் என்று கொண்டாடப்பட வேண்டும் என்று தமிழறிஞர் கி.ஆ.பெ.விஸ்வநாதன், 1954 ஆம் ஆண்டு முன்மொழிந்தார். இதற்கு பலத்த எதிர்ப்பு இருந்தது. 1966 ஆம் ஆண்டு, ஜூன் 2 ஆம் தேதி, திருவள்ளுவர் தினமாக கொண்டாட அரசு விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால், 1971 ஆம் ஆண்டு திருவள்ளுவர் தினம், தை மாதத்திற்கு மாற்றப்பட்டடு ஜனவரி 17 -ஆம் தேதி திருவள்ளுவர் தினம் அன்றுமுதல் கொண்டாடப்பட்டு வருகின்றது. 1971 ஆம் ஆண்டு, திருவள்ளுவர் ஆண்டு பற்றி, அரசின் இதழில் குறிக்கப்பட்டு, 1972ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது.


Thiruvalluvar Day: மயிலாடுதுறையில் திருவள்ளுவர் ரத யாத்திரை; கொடியசைத்து தொடங்கி வைத்த எஸ்பி

1981ஆம் ஆண்டு, மதுரையில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டில், அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள், திருவள்ளுவர் ஆண்டை, தமிழக அரசின் ஆவணங்களில் பதிவு செய்ய அரசாணையைப் பிறப்பித்தார். இந்நிலையில் மயிலாடுதுறையில் திருக்குறள் பேரவை சார்பில், திருவள்ளுவர் தினத்தை அடுத்து திருவள்ளுவர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. அவ்வையார் தேரை ஓட்டுவது போல் திருவள்ளுவரின் சிலையுடன், காவிரிக்கரையில் இருந்து ரத ஊர்வலம் துவங்கியது. இந்த திருவள்ளுவர் ரத ஊர்வலத்தை மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் மீனா திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து கொடியசைத்து ரத ஊர்வலத்தை துவக்கி வைத்தார். மயிலாடுதுறையில் நகரின் முக்கிய வீதிகள் வழியே சென்ற ஊர்வலம் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைந்தது.


Thiruvalluvar Day: மயிலாடுதுறையில் திருவள்ளுவர் ரத யாத்திரை; கொடியசைத்து தொடங்கி வைத்த எஸ்பி

பின்னர் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தும், திரளான பொதுமக்கள், தமிழறிஞர்கள், ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர்கள் ஊர்வலத்தில் பங்கேற்றனர். தொடர்ந்து திருவள்ளுவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதனையடுத்து மயிலாடுதுறை திருக்குறள் பேரவையின் 108 வது கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது, தமிழ் அறிஞர்கள் கௌரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சியில் 133 அதிகாரங்களால் திருவள்ளுவர் உருவப்படத்தை தத்ரூபமாக வரைந்து பிரபாகரன் என்ற இளைஞர் தமிழ் சங்கத்துக்கு வழங்கினார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Seeman:
Seeman: "நீதான் கெஞ்சனும்.. சேட்டைக்காரன் நான்.." சீமான் ஏன் ஆவேசப்பட்டார்?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman:
Seeman: "நீதான் கெஞ்சனும்.. சேட்டைக்காரன் நான்.." சீமான் ஏன் ஆவேசப்பட்டார்?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
Seeman Vs EPS: “ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
“ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
Embed widget