மேலும் அறிய

காவல்நிலையங்கள், ஆட்சியர் அலுவலகத்தில் அதிகரித்துள்ள தீக்குளிப்பு சம்பவங்கள் - விரக்தியில் மயிலாடுதுறை மக்கள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காவல் நிலையங்கள் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் புகார் அளிக்க வரும் பொதுமக்கள் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சிக்கும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

காவல்நிலையத்தில் தீக்குளித்த நபர்

சமீபத்தில் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் ஒருவர் தீக்குளிக்க முயன்று அதனை தடுக்க சென்ற காவலரும் தீக்காயம் அடைந்தார். அதே போன்று சீர்காழி அருகே கொள்ளிடம் காவல் நிலையத்தில் காவலர்கள் ஒருத்தரப்பிற்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சட்டி பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றார். அதனை தடுத்த காவல் ஆய்வாளரின் விதம் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.


காவல்நிலையங்கள், ஆட்சியர் அலுவலகத்தில் அதிகரித்துள்ள தீக்குளிப்பு சம்பவங்கள் - விரக்தியில் மயிலாடுதுறை மக்கள்

ஒரே நாளில் 4 பேர் தற்கொலை முயற்சி 

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த நேற்று 19.05.2025 -ம் தேதி நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர்ப்பு நாள் அன்று புகார் மனு அளிக்க வந்த நான்கு நபர்கள் தங்கள் மனு தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அவர்கள் மறைத்து எடுத்து வந்த பெட்ரோலை தங்கள் மீது ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். புகார் மனு அளிக்க வந்த நான்கு நபர்கள் சட்டத்திற்கு புறம்பாக தற்கொலைக்கு முயன்ற குற்றத்திற்காக மயிலாடுதுறை காவல் நிலையத்தில் அவர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.


காவல்நிலையங்கள், ஆட்சியர் அலுவலகத்தில் அதிகரித்துள்ள தீக்குளிப்பு சம்பவங்கள் - விரக்தியில் மயிலாடுதுறை மக்கள்

எஸ்.பி. தடுப்பு நடவடிக்கை 

மேலும் இச்சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், விசாரணை மேற்கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிப்பதற்காகவும், பிற தேவைகளுக்காகவும் வரும் பொதுமக்களை முழு சோதனை செய்தல் மற்றும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வழிமுறைகள் குறித்து மயிலாடுதுறை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் மயிலாடுதுறை காவல் ஆய்வாளருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து இன்று 20.05.2025 -ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் நடைபெறும் சோதனை பணிகளை நேரடியாக பார்வையிட்டு, மேற்கூறப்பட்டது போன்ற சம்பவங்களை தவிர்த்திடும் பொருட்டு சோதனை அலுவல் மேற்கொள்ளும் போது. சோதனைக்கு உட்படும் நபர் அவரது உடையிலோ அல்லது அவர்கள் கொண்டு வரும் உடைமைகளிலோ ஏதேனும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் பொருட்கள் அல்லது ஆயுங்களை எடுத்து வருகிறார்களா? என்பதை கண்டறியும் பொருட்டு பின்பற்ற வேண்டிய சோதனை வழிமுறைகள் குறித்து சோதனை அலுவலில் ஈடுபட்டிருந்த காவல் ஆனினர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கினார்.

பொதுமக்களுக்கு அறிவுரை 

மேலும் புகார் மனு அளிப்பதற்காகவும், பிற தேவைகளுக்காவும் அரசு அலுவலகங்களுக்கு வரும் பொது மக்கள் தங்களது கோரிக்கைகளை உரிய முறையில் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு தெரிவித்து தீர்வு காண வேண்டும், இது போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட வேண்டாம் எனவும் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு 

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்; தங்கள் குறைகள் குறித்து காவல்துறையிடமும் அரசு அதிகாரிகளிடம் மக்கள் புகார் மனு அளித்து வரும் நிலையில் அதன் மீது எவ்விதமான நடவடிக்கைகளும் இல்லாதது இது போன்ற சம்பவங்கள் அதிகரிக்க காரணமாக அமைகிறது. கடந்த சில நாட்களில் மட்டும் சுமார் ஆறு பேர் இது போன்ற தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இதனை தமிழ்நாடு அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு இதுபோன்ற சம்பவங்கள் தொடராத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எங்களை போன்ற சமூக ஆர்வலர்களின் விருப்பம் என தெரிவித்துள்ளனர்.

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம்

இதுபோன்ற சூழலில் மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில சட்ட உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 மன அழுத்தத்தை சாதாரணமாக எண்ணாமல் மன அழுத்தம் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Jana Nayagan Audio Launch Live: பாட்டு பாடி மகனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய் அம்மா ஷோபா
Jana Nayagan Audio Launch Live: பாட்டு பாடி மகனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய் அம்மா ஷோபா
TVK Vijay: மீண்டும் நடிக்க வருகிறாரா விஜய்? தீர்மானிக்கப்போவது எது தெரியுமா?
TVK Vijay: மீண்டும் நடிக்க வருகிறாரா விஜய்? தீர்மானிக்கப்போவது எது தெரியுமா?
EPS: நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்!
EPS: நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்!
TVK Sengottaiyan: எனது உடலில் ஓடும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் விஜய்க்குதான்.! டோட்டலாக தளபதி வெறியராக மாறிய செங்கோட்டையன்
எனது உடலில் ஓடும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் விஜய்க்குதான்.! டோட்டலாக தளபதி வெறியராக மாறிய செங்கோட்டையன்
ABP Premium

வீடியோ

Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!
இடைக்கால ஜாமீன் READYகுஷியில் சவுக்கு சங்கர் சாட்டையை சுழற்றிய HIGH COURT | Savukku Shankar
GK Mani Expelled from PMK | ‘’ஜி.கே.மணி GET OUT’’தூக்கியடித்த அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்!
மூர்த்தியுடன் ரகசிய DEAL? தவெக மா.செ மீது புகார்! சொந்த கட்சியினரே போர்க்கொடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jana Nayagan Audio Launch Live: பாட்டு பாடி மகனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய் அம்மா ஷோபா
Jana Nayagan Audio Launch Live: பாட்டு பாடி மகனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய் அம்மா ஷோபா
TVK Vijay: மீண்டும் நடிக்க வருகிறாரா விஜய்? தீர்மானிக்கப்போவது எது தெரியுமா?
TVK Vijay: மீண்டும் நடிக்க வருகிறாரா விஜய்? தீர்மானிக்கப்போவது எது தெரியுமா?
EPS: நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்!
EPS: நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்!
TVK Sengottaiyan: எனது உடலில் ஓடும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் விஜய்க்குதான்.! டோட்டலாக தளபதி வெறியராக மாறிய செங்கோட்டையன்
எனது உடலில் ஓடும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் விஜய்க்குதான்.! டோட்டலாக தளபதி வெறியராக மாறிய செங்கோட்டையன்
Tamilnadu Round Up: வாக்காளர் சிறப்பு, புதிய உச்சத்தில் தங்கம்,வெள்ளி, விஜய் ஜனநாயகன் ஆடியோ லாஞ்ச்- தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: வாக்காளர் சிறப்பு, புதிய உச்சத்தில் தங்கம்,வெள்ளி, விஜய் ஜனநாயகன் ஆடியோ லாஞ்ச்- தமிழ்நாட்டில் இதுவரை
ராணிப்பேட்டை: குரோமியம் கழிவுகள், கஞ்சா விற்பனை, உரிமைத் தொகை... சௌமியா அன்புமணி பரபரப்பு குற்றச்சாட்டு!
ராணிப்பேட்டை: குரோமியம் கழிவுகள், கஞ்சா விற்பனை, உரிமைத் தொகை... சௌமியா அன்புமணி பரபரப்பு குற்றச்சாட்டு!
ENG vs AUS: டி20-ஐ விட விறுவிறுப்பு.. இரண்டே நாளில் முடிந்த டெஸ்ட்.. ஆஸ்திரேலியாவை பழிவாங்கிய இங்கிலாந்து!
ENG vs AUS: டி20-ஐ விட விறுவிறுப்பு.. இரண்டே நாளில் முடிந்த டெஸ்ட்.. ஆஸ்திரேலியாவை பழிவாங்கிய இங்கிலாந்து!
Ration Shop: ரேஷன் கடையில் உணவு பொருட்கள்.! புதிய நடைமுறை அறிவிப்பு- ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு
ரேஷன் கடையில் உணவு பொருட்கள்.! புதிய நடைமுறை அறிவிப்பு- ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு
Embed widget