மேலும் அறிய

Pongal Gift 2024 : மயிலாடுதுறை மாவட்டத்தில் 2 லட்சத்து 83 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பினை  அமைச்சர் மெய்யநாதன் வழங்கி தொடங்கி வைத்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் வட்டாரம், ஆறுபாதி  ஊராட்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு  குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1கிலோ சர்க்கரை, ஒரு முழுநீளக் கரும்பு, வேட்டி, சேலை, 1000 ரூபாய் ரொக்கம் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பினை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் இன்று வழங்கி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமையேற்க, மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.இராமலிங்கம்  பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் உமாமகேஸ்வரி சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.


Pongal Gift 2024 : மயிலாடுதுறை மாவட்டத்தில் 2 லட்சத்து 83 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் பேசுகையில், "தமிழ்நாடு முதலமைச்சர் பதவி ஏற்ற நாள்முதலாக பல எண்னற்ற சாதனைகளை செய்து வருகிறார். கடந்த மாதம் மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நேரடியாக களத்திற்கு சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6000 ரூபாய் நிவாரணத்தொகை வழங்க உத்தரவு பிறப்பித்தார். அதேபோல தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து பெரிய சேதத்தை ஏற்படுத்தியது. அதன் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் உடனடியாக வழங்க உத்தரவிட்டார். மாதம் மாதம் 15 -ம் தேதி 1,13,84,000 பெண்களுக்கு வழங்கப்படும் கலைஞர் உரிமைத்தொகை  தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த மாதம் 10-ம் தேதியிலிருந்து வழங்கப்படுகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 7, 8-ம் தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக மாவட்டத்தில் 1,70,000 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.


Pongal Gift 2024 : மயிலாடுதுறை மாவட்டத்தில் 2 லட்சத்து 83 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு

குறிப்பாக அறுவடைக்கு தயார் நிலையிலிருந்த 18000 ஏக்கர் பரப்பளவில் பயிர் செய்யப்பட்டுள்ள நெற்கதிர்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மற்றும் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் ஒருவார காலத்தில் பயிர் செய்யப்பட்டுள்ள கடலை பயிரும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே  அதற்கான கணக்கெடுக்கும் பணிக்காக மாவட்ட ஆட்சியர், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் , சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர்கள் முன்னிலையில்  இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளோம். கணக்கெடுக்கும் பணி நிறைவுபெற்றவுடன் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டுசென்று பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ஆறுபாதி மக்களின் சுகாதாரத்தை காக்கும் வகையில் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.


Pongal Gift 2024 : மயிலாடுதுறை மாவட்டத்தில் 2 லட்சத்து 83 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு

மயிலாடுதுறை மாவட்டத்தில் 2 இலட்சத்து 83 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு மொத்தம் 283 மெ.டன் பச்சரிசி, 283 மெ.டன் சீனி, 2 லட்சத்து 83 ஆயரம் முழுநீளக்கரும்பு மற்றும் 28.30 கோடி ரூபாய் ரொக்கத்தொகை வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசுத்தொகுப்பானது கூட்டுறவுத்துறையின் மூலம் நடத்தப்படும் 411 நியாக விலைக்கடைகள், மீனவர் கூட்டுறவு சங்கங்கள் நடத்தும் 10 நியாயவிலைக்கடைகள், மகளிர் சுய உதவிக்குழுவினர் நடத்தும் 10 நியாய விலைக்கடைகள்,கோழிவளர்போர் கூட்டுறவு சங்கம் நடத்தும் 1 நியாய விலைக்கடை ஆக மொத்தம் 432 நியாயவிலைக்கடைகள் மூலம் வழங்கப்படுகிறது. எனவே இன்று முதல் வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பை பெற்று, வருகிற பொங்கல் திருநாளை நாம் அனைவரும் சிறப்பாக கொண்டாட வேண்டும்" என சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சேகர், மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் யுரேகா, கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் த.ராஜேந்திரன், செம்பனார்கோயில் ஒன்றியக்குழுத்தலைவர் நந்தினி ஸ்ரீதர், மாவட்ட வழங்கல் அலுவலர் பானுகோபன், மாவட்ட கூட்டுறவு தலைவர் ஞானவேல், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் துளசிரேகா, ஒன்றியக்குழு உறுப்பினர் முத்துலெட்சுமி, ஆறுபாதி ஊராட்சி மன்றத்தலைவர்  கே.தமிழரசி, ஆறுபாதி ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் எஸ்.தேவி; மற்றும் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs BAN: சுப்மன்கில் சூப்பர் செஞ்சுரி! நொந்துபோன பங்களா பாய்ஸ்! அதிரடி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா
IND vs BAN: சுப்மன்கில் சூப்பர் செஞ்சுரி! நொந்துபோன பங்களா பாய்ஸ்! அதிரடி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா
Trump: திடீர் ட்விஸ்ட்.! ரஷ்யாவுக்கு சப்போர்ட்டுக்கு போன டிரம்ப்: அதிர்ச்சியில் உக்ரைன்.! என்ன நடக்கிறது?
Trump: திடீர் ட்விஸ்ட்.! ரஷ்யாவுக்கு சப்போர்ட்டுக்கு போன டிரம்ப்: அதிர்ச்சியில் உக்ரைன்.! என்ன நடக்கிறது?
"இங்கிலீஷ் படிங்க.. அது அதிகாரத்தை அடைவதற்கான ஆயுதம்" மாணவர்களுக்கு ராகுல் காந்தி அட்வைஸ்!
சென்னை To மதுரை... செம போங்க.. இப்படி ஒரு அப்டேட்டா.. ரூ.26,500 கோடியில் கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ் சாலை
சென்னை To மதுரை... செம போங்க.. இப்படி ஒரு அப்டேட்டா.. ரூ.26,500 கோடியில் கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ் சாலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Marina Police vs Lady : ’’இருட்டுல என்ன பண்றீங்க?’’அநாகரிகமாக விசாரித்த போலீஸ் மெரினாவில் பெண் ஆவேசம்!Delhi New CM | டெல்லியின் புதிய முதல்வர்! பெண் MLA விற்கு அடித்த ஜாக்பாட்! யார் இந்த ரேகா குப்தா?Article 370 முதல் அயோத்தி வரை..  அமித்ஷாவின் RIGHT HAND !  யார் இந்த ஞானேஷ் குமார் ?K Pandiarajan : தவெக-வுக்கு தாவும் மாஃபா? திமுகவில் இணையும் OPS MLA? சூடுபிடிக்கும் தமிழக அரசியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs BAN: சுப்மன்கில் சூப்பர் செஞ்சுரி! நொந்துபோன பங்களா பாய்ஸ்! அதிரடி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா
IND vs BAN: சுப்மன்கில் சூப்பர் செஞ்சுரி! நொந்துபோன பங்களா பாய்ஸ்! அதிரடி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா
Trump: திடீர் ட்விஸ்ட்.! ரஷ்யாவுக்கு சப்போர்ட்டுக்கு போன டிரம்ப்: அதிர்ச்சியில் உக்ரைன்.! என்ன நடக்கிறது?
Trump: திடீர் ட்விஸ்ட்.! ரஷ்யாவுக்கு சப்போர்ட்டுக்கு போன டிரம்ப்: அதிர்ச்சியில் உக்ரைன்.! என்ன நடக்கிறது?
"இங்கிலீஷ் படிங்க.. அது அதிகாரத்தை அடைவதற்கான ஆயுதம்" மாணவர்களுக்கு ராகுல் காந்தி அட்வைஸ்!
சென்னை To மதுரை... செம போங்க.. இப்படி ஒரு அப்டேட்டா.. ரூ.26,500 கோடியில் கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ் சாலை
சென்னை To மதுரை... செம போங்க.. இப்படி ஒரு அப்டேட்டா.. ரூ.26,500 கோடியில் கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ் சாலை
முல்லை பெரியாறு விவகாரம்; தமிழகமும் கேரளாவும் பள்ளி குழந்தைகள் போல சண்டை - உச்ச நீதிமன்றம்
முல்லை பெரியாறு விவகாரம்; தமிழகமும் கேரளாவும் பள்ளி குழந்தைகள் போல சண்டை - உச்ச நீதிமன்றம்
Annamalai:
Annamalai: "கெட்அவுட் மோடி? கெட்அவுட் ஸ்டாலின்? - நாளை காலை 6 மணிக்கு இருக்கு.. அண்ணாமலை சவால்
UGC: யுஜிசியின் ஜனநாயக விரோதம்; சுயாட்சியை பறிக்கும் செயல்- கேரளாவில் அமைச்சர் கோவி. செழியன் ஆவேசம்!
UGC: யுஜிசியின் ஜனநாயக விரோதம்; சுயாட்சியை பறிக்கும் செயல்- கேரளாவில் அமைச்சர் கோவி. செழியன் ஆவேசம்!
Accident Insurance: விபத்தில் உயிரிழந்த தொழிலாளி... ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கிய அஞ்சல் துறை
விபத்தில் உயிரிழந்த தொழிலாளி... ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கிய அஞ்சல் துறை
Embed widget