மேலும் அறிய

தொடரும் கடலில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் - மீண்டும் ஒரு இளைஞர் பலி...!

சீர்காழி அருகே  திருமுல்லைவாசல் கடலில் குளித்த இளைஞர் அலையில் சிக்கி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசலில் கடலில் தொடர்ந்து ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது.

 கடற்கரை 

கடல் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. அனைவரும் பிடித்த ஒன்று என்றாலும் அதில் ஆபத்துகளும் அதிகம். கடலை அதன் போக்கில் அதன் கரையில் நின்று ரசிப்பதே அழகு, ஏன் என்றால் அதனை தவிர்த்து கடலில் இறங்கி அதன் தன்மை அறியாமல் ஏற்படும் உயிரிழப்புகள் ஏராளம். கடல் எப்போதும் ஒர் நிலையில் இருக்காது. அது பல நேரங்களில் சீற்றத்துடன் காணப்படுவது உண்டு. கடலை பற்றி நன்கு புரிந்த மீனவர்கள் கூட பலர் கடலின் சீற்றத்திற்கு பலியாகியுள்ளனர்.

அழகும், ஆபத்தும் 

கார் மேகம் சூழ்ந்து, குளிர்ச்சியான காற்று நம் முகத்தை வருட, வருணன் நம்மை வரவேற்பதை பார்க்கும் போது நமது மனதே லேசாகி விடுகிறது. இதனாலேயே ஆபத்துக்கள் இருப்பினும் அனைவரும் கடலை நோக்கி தேடி செல்கிறோம்.


தொடரும் கடலில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் - மீண்டும் ஒரு இளைஞர் பலி...!

திருமுல்லைவாசல் கடற்கரை 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அமைந்துள்ளது திருமுல்லைவாசல் கிராமம். இயற்கை எழில் கொஞ்சும் இக்கிராமம் கடலும் கடல் சார்ந்த இடமாக காட்சி அளிக்கிறது. 
இயற்கை எழில் கொஞ்சும் இப்பகுதியில் அதிகாலையில் ஏராளமானோர் நடைப்பயிற்சி மேற்கொண்டு  வருகின்றனர்.  அதேநேரத்தில், எந்த அளவுக்கு இயற்கை எழில் சூழ்ந்த அழகிய பகுதியாக உள்ளதோ, அதே அளவுக்கு ஆபத்தும் நிறைந்துள்ளது. இது சுற்றுலா தலம் இல்லை என்றாலும், இங்குள்ள கடற்கரைக்கு நாள்தோறும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். ஆனால் இந்த கடற்கரை பொதுமக்கள் பயன்படுத்தும் அளவிற்கானது அல்ல என்பதால், இங்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசு செய்து தரவில்லை.

தொடரும் உயிரிழப்புகள்

இங்கு அடிக்கடி கடல் சீற்றம் ஏற்படுவதும், மழை, சூறைக்காற்று நேரங்களில் ராட்சத அலைகள் எழுவதும் வாடிக்கையாகும். அவ்வாறு எழும் ராட்சத அலைகள் பல நேரங்களில் அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் நுழைந்துவிடும். இதுகுறித்த சரியான புரிதல்இல்லாததால், கடல் அலையில் சிக்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.


தொடரும் கடலில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் - மீண்டும் ஒரு இளைஞர் பலி...!

சென்னை இளைஞர் பலி

இந்நிலையில் சென்னை கே.கே. நகரை சேர்ந்த 24 வயதான பவித்ரன் அவரது சகோதரன் ஆதித்யன் ஆகிய இருவரும் மயிலாடுதுறையிவ் உள்ள உறவினர் செல்வகுமார் வீட்டிற்கு வந்துள்ளனர். தொடர்ந்து பவித்ரன் ஆதித்யன் மற்றும் செல்வகுமாரின் மகன் ரித்திக் ரோஷன் ஆகிய மூவரும் மயிலாடுதுறை மாவட்டம்  சீர்காழி அருகே உள்ள உமையாள்பதி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு, அருகில் உள்ள திருமுல்லைவாசல் மீனவ  கிராமத்திற்கு சென்று கடலில் குளித்துள்ளனர். 


தொடரும் கடலில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் - மீண்டும் ஒரு இளைஞர் பலி...!

பொதுமக்கள் கோரிக்கை 

அப்போது கடல் ஏற்பட்ட ராட்சத அலையில் சிக்கி பவித்திரன் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு மாயமானார். இதனைக் கண்ட மற்ற இருவரும் அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டுள்ளனர். இதனை அடுத்து அருகில் இருந்த மீனவர்கள் ஓடிவந்து தண்ணீரில் மூழ்கிய பவித்திரனை தேடினர். அப்போது உயிரிழந்த நிலையில் பவித்திரன் உடலை மீட்டு  கரைக்கு கொண்டு வந்தனர். தகவல் அறிந்த சீர்காழி காவல்துறையினர் இறந்த பவித்திரனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


தொடரும் கடலில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் - மீண்டும் ஒரு இளைஞர் பலி...!

இதுபோன்ற நிகழ்வுகள் பல்வேறு கடற்கரை நடைபெற்று அது தொடர்பான செய்திகளும் வெளிவந்தாலும் கடற்கரை ஆபத்தை குறித்து விழிப்புணர்வு பெறாமல் பலரும் மீண்டும் மீண்டும் கடலில் இறங்கி குளித்து தங்கள் உயிரை விடுவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் திருமுல்லைவாசல் கடற்கரையில் தொடர்ந்து இதுபோன்ற உயிரிழப்பு சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் அரசு இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
IND Vs SA T20: சொதப்பும் கில், ஸ்கை.. சஞ்சுவிற்கு வாய்ப்பு? தெ.ஆப்., சமாளிக்குமா இந்தியா? இன்று 2வது டி20 போட்டி
IND Vs SA T20: சொதப்பும் கில், ஸ்கை.. சஞ்சுவிற்கு வாய்ப்பு? தெ.ஆப்., சமாளிக்குமா இந்தியா? இன்று 2வது டி20 போட்டி
Amit Shah: SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
ABP Premium

வீடியோ

அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah
ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
IND Vs SA T20: சொதப்பும் கில், ஸ்கை.. சஞ்சுவிற்கு வாய்ப்பு? தெ.ஆப்., சமாளிக்குமா இந்தியா? இன்று 2வது டி20 போட்டி
IND Vs SA T20: சொதப்பும் கில், ஸ்கை.. சஞ்சுவிற்கு வாய்ப்பு? தெ.ஆப்., சமாளிக்குமா இந்தியா? இன்று 2வது டி20 போட்டி
Amit Shah: SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
Ration card: ஒரே நாளில் ரேஷன் கார்டு.... பொதுமக்களே மிஸ் பண்ணாதீங்க- தேதி குறித்த தமிழக அரசு
ஒரே நாளில் ரேஷன் கார்டு.... பொதுமக்களே மிஸ் பண்ணாதீங்க- தேதி குறித்த தமிழக அரசு
Seltos vs Sierra Vs Victoris: சியாரா, விக்டோரிஸ் உடன் மோதும் செல்டோஸ் - அம்சங்கள், வசதிகள் அப்பாடக்கர் யார்?
Seltos vs Sierra Vs Victoris: சியாரா, விக்டோரிஸ் உடன் மோதும் செல்டோஸ் - அம்சங்கள், வசதிகள் அப்பாடக்கர் யார்?
ஐ.நாவின் 'சாம்பியன்ஸ் ஆஃப் எர்த்' விருது வென்ற கூடுதல் தலைமை செயலாளர் - சுப்ரியா சாகு சாதித்தது என்ன?
ஐ.நாவின் 'சாம்பியன்ஸ் ஆஃப் எர்த்' விருது வென்ற கூடுதல் தலைமை செயலாளர் - சுப்ரியா சாகு சாதித்தது என்ன?
Rahul Gandhi: தேர்தல் சீர்திருத்தம்; கேள்விகளுக்கு பதில் இல்லை; அமித் ஷா மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டு என்ன.?
தேர்தல் சீர்திருத்தம்; கேள்விகளுக்கு பதில் இல்லை; அமித் ஷா மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டு என்ன.?
Embed widget