மேலும் அறிய

Fengal cyclone: புயலோடு புகைப்படம் - விபரீதம் அறியாத பொதுமக்கள்...! 

ஸ்டாலின் உத்தரவின் பேரில் தற்போது கோட்டைக்கு செல்லும் பிரதான முகப்பு வாயில் முன்பு பேரி கார்டுகளை வைத்து மக்கள் புயல் கரையை கடக்கும் வரை கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்துகின்றனர்.

புயல் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் தரங்கம்பாடி கடற்கரைக்கு வரும் பொது மக்கள் மற்றும் சுற்றுலா வாசிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி வருகின்றனர். 

கரையை கடக்கும் ஃபெஞ்சல் புயல்

சென்னைக்கு 110 கிமீ தொலைவில் ஃபெஞ்சல் புயல் மையம் கொண்டுள்ளது. தற்போது மணிக்கு 13 கிமீ வேகத்தில் ஃபெஞ்சல் புயல் கரையை நோக்கி நகருகிறது. இதனால் ஃபெஞ்சல் புயல் இன்று மாலையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. கனமழையை எதிர்கொள்ளும் விதமாக தமிழ்நாடு அரசு தொடர் ஆய்வுகளை நடத்தி அனைத்து துறை சார்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுத்துள்ளது. மேலும் கட்டுப்பாட்டு அறையில் இருந்து அனைத்து நிலவரங்களையும் கண்காணித்து வருகிறோம் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Fengal cyclone: புயலோடு புகைப்படம் - விபரீதம் அறியாத பொதுமக்கள்...! 

வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை 

புயல் எச்சரிக்கை மற்றும் பலத்த மழை காரணமாக, வேளச்சேரி மேம்பாலத்தில் பொதுமக்கள் தங்களது வாகனங்களை நிறுத்தி வைத்து வருகின்றனர். இந்தப் புயல் சனிக்கிழமை இரவு அல்லது ஞாயிற்றுக்கிழமை காலை கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயல் கொங்கு மண்டலம் வழியாகப் பயணிக்க வாய்ப்புள்ளதால் அப்பகுதிகளில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. புயல் கரையைக் கடப்பதால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை முதல் அதிகனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் எச்சரிக்கை மற்றும் பலத்த மழை காரணமாக, சென்னை விமான நிலையத்தில் இருந்து இயக்கப்பட வேண்டிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆந்திர பேரிடர் மீட்புக் குழுவினர் தமிழகத்திற்கு வருகை தந்துள்ளனர்.  


Fengal cyclone: புயலோடு புகைப்படம் - விபரீதம் அறியாத பொதுமக்கள்...! 

வாழ்வாதாரம் இழந்த மீனவர்கள் 

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வு நிலை உருவானதை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 21 -ம் தேதி முதல் கடல் சீற்றத்துடன் காணப்பட்டு வருகிறது. அதன் காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல கூடாது என மீன்வளத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் மீனவர்கள் கடந்த 10 நாட்களாக கடலுக்கு செல்லாமல் இருந்து வருகிறது. மேலும் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. 

விபரீதம் அறியாத பொதுமக்கள் 

இதனிடையே தமிழ்நாட்டில் புயல் சின்னம் உருவாகி இன்று மாலை அல்லது நாளை காலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புயல் அச்சம் காரணமாக பொதுமக்கள் அதிகளவில் வெளியில் வராமல் உள்ளனர். தற்போது தரங்கம்பாடி கடற்கரையில் கடல் சீற்றம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், தரங்கம்பாடி கடற்கரையில் புயல் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இன்று வெளிநாட்டவர்கள் உட்பட 50 -க்கும் மேற்பட்டோர் கடற்கரையில் திரண்டு புகைப்படம் எடுத்தும், செல்பி எடுத்தும் குழந்தையுடன் விளையாடியும் மகிழ்ந்தனர்.

காவல்துறையினர் எச்சரிக்கை 

இச்சம்பம் அறிந்த பொறையார் காவல் நிலைய காவல்துறையினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் தற்போது கோட்டைக்கு செல்லும் பிரதான முகப்பு வாயில் முன்பு பேரி கார்டுகளை வைத்து பொதுமக்கள் புயல் கரையை கடக்கும் வரை கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Nainar Nagendran: “சோறு கூட போடுறோம், ஆனா ஓட்டு போட மாட்டோம்“ - நயினாரை அதிர்ச்சியில் உறையவைத்த பாஜக தொண்டர்
“சோறு கூட போடுறோம், ஆனா ஓட்டு போட மாட்டோம்“ - நயினாரை அதிர்ச்சியில் உறையவைத்த பாஜக தொண்டர்
EPS - TVK Vijay: பாஜக-வை கழட்டிவிடுங்க... விஜய்யை உள்ளே கொண்டு வாங்க.. என்ன செய்வார் எடப்பாடி?
EPS - TVK Vijay: பாஜக-வை கழட்டிவிடுங்க... விஜய்யை உள்ளே கொண்டு வாங்க.. என்ன செய்வார் எடப்பாடி?
Thiruparankundram: அரோகரா.. அதிகாலையிலே நடந்த திருப்பரங்குன்றம் கும்பாபிஷேகம்.. லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்
Thiruparankundram: அரோகரா.. அதிகாலையிலே நடந்த திருப்பரங்குன்றம் கும்பாபிஷேகம்.. லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்
IND vs ENG 3rd Test: 135 ரன்கள்தான் வேணும்.. மிரட்டும் இங்கிலாந்து பவுலிங்! லார்ட்ஸில் வெற்றி பெறுமா இந்தியா?
IND vs ENG 3rd Test: 135 ரன்கள்தான் வேணும்.. மிரட்டும் இங்கிலாந்து பவுலிங்! லார்ட்ஸில் வெற்றி பெறுமா இந்தியா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மயிலாடுதுறை சுற்றுலா மாளிகை அவசரகதியில் திறந்த அமைச்சர்! பொதுமக்கள் ஆத்திரம்
தவெக உடன் கூட்டணி.. காங்கிரஸ் பக்கா ஸ்கெட்ச்! ஓகே சொல்வாரா ராகுல்?
800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்
தைலாபுரத்தில் அன்புமணி ENTRY! 5 நிமிடத்தில் பேசி முடித்த ராமதாஸ்! மயிலாடுதுறையில் நடந்தது என்ன?
Nayanthara Divorce | விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா?வெளியான பரபரப்பு தகவல் நயன்தாரா கொடுத்த ரியாக்‌ஷன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nainar Nagendran: “சோறு கூட போடுறோம், ஆனா ஓட்டு போட மாட்டோம்“ - நயினாரை அதிர்ச்சியில் உறையவைத்த பாஜக தொண்டர்
“சோறு கூட போடுறோம், ஆனா ஓட்டு போட மாட்டோம்“ - நயினாரை அதிர்ச்சியில் உறையவைத்த பாஜக தொண்டர்
EPS - TVK Vijay: பாஜக-வை கழட்டிவிடுங்க... விஜய்யை உள்ளே கொண்டு வாங்க.. என்ன செய்வார் எடப்பாடி?
EPS - TVK Vijay: பாஜக-வை கழட்டிவிடுங்க... விஜய்யை உள்ளே கொண்டு வாங்க.. என்ன செய்வார் எடப்பாடி?
Thiruparankundram: அரோகரா.. அதிகாலையிலே நடந்த திருப்பரங்குன்றம் கும்பாபிஷேகம்.. லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்
Thiruparankundram: அரோகரா.. அதிகாலையிலே நடந்த திருப்பரங்குன்றம் கும்பாபிஷேகம்.. லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்
IND vs ENG 3rd Test: 135 ரன்கள்தான் வேணும்.. மிரட்டும் இங்கிலாந்து பவுலிங்! லார்ட்ஸில் வெற்றி பெறுமா இந்தியா?
IND vs ENG 3rd Test: 135 ரன்கள்தான் வேணும்.. மிரட்டும் இங்கிலாந்து பவுலிங்! லார்ட்ஸில் வெற்றி பெறுமா இந்தியா?
Nimisha Priya: காத்திருக்கும் தூக்குக் கயிறு; ஏமனில் கேரள நர்ஸ் பிழைப்பாரா.? நியாயம் என்ன.?
காத்திருக்கும் தூக்குக் கயிறு; ஏமனில் கேரள நர்ஸ் பிழைப்பாரா.? நியாயம் என்ன.?
Vettuvam Accident: பா.ரஞ்சித்தின் புதிய பட ஷுட்டிங்கில் சோகம்.. சண்டை காட்சியில் ஸ்டண்ட் மாஸ்டர் மரணம் - நடந்தது என்ன?
Vettuvam Accident: பா.ரஞ்சித்தின் புதிய பட ஷுட்டிங்கில் சோகம்.. சண்டை காட்சியில் ஸ்டண்ட் மாஸ்டர் மரணம் - நடந்தது என்ன?
உயிர் பிழைத்தும் நிம்மதி இல்லை! ஏர் இந்தியா விபத்தில் உயிர் பிழைத்தவரின் போராட்டம்.. மீண்டு வருவாரா ரமேஷ்
உயிர் பிழைத்தும் நிம்மதி இல்லை! ஏர் இந்தியா விபத்தில் உயிர் பிழைத்தவரின் போராட்டம்.. மீண்டு வருவாரா ரமேஷ்
Stalin Letter: தமிழக மீனவர்களை விடுவிக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் - மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்
தமிழக மீனவர்களை விடுவிக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் - மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்
Embed widget